செய்திகள் :

தூத்துக்குடி: நேபாள வெள்ளத்திற்குக் காரணம் என்ன? - விளக்கும் நிலத்தியல்துறை பேராசிரியர்!

post image

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த வெள்ளத்திற்கு காரணம் என்ன? என, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நிலத்தியல் துறை பேராசிரியர் முனைவர். செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், “நேபாளம் – சீனா (திபெத்) எல்லைப் பகுதியில் கடந்த 27-ம் தேதி திடீர் பனிப்பொழிவு மற்றும் வெள்ளப்பேரழிவு உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செயற்கைகோள் படங்கள், ஆய்வுகளின் அடிப்படையில் இந்தப் பேரழிவிற்கு பனிப்பாறைகளின் உடைப்புதான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேபாள வெள்ளம்

உயரமான இமயமலைப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், குறிப்பாக எல்நினோ போன்ற கடுமையான காலநிலை மாற்றத்தினால் வெப்ப நிலை அதிகரித்துள்ளது. இதனால், பனிப்பாறைகள் வேகமாக உருகி, பனிக்கட்டிகளுக்கு இடையே நீர் தேங்கும் அளவு அதிகரித்துள்ளது. இந்த நீர், மிகுந்த அழுத்தத்தை உருவாக்கி பனிப்பாறைகளின் உள்ளாக நிலைத்தன்மையை குறைத்துள்ளது.

இந்த அதிக அழுத்தத்தின் காரணமாக பெரிய கொள்ளளவு கொண்ட பனிப்பாறைகள் திடீரென உடைந்து கீழ் நோக்கி சரிந்து விழுந்துள்ளன. இந்த பனிப்பாறையுடன் சேர்த்து பெருமளவில் நீர், மண் மற்றும் பாறைகள் கலந்த வெள்ளப்பெருக்கு உருவாகி மிகுந்த சக்தியுடன் பள்ளத்தாக்குக்குள் பாய்ந்தது. இந்த வெள்ளப்பெருக்கு வேகமாக நகர்ந்து ஆறுகளில் திடீர் நீர்மட்ட உயர்வினை ஏற்படுத்தியது. சில பகுதிகளில் 30 நிமிடங்களிலேயே சுமார் 9 மீட்டர் வரை நீர்மட்டம் உயர்ந்தது. செயற்கைகோள் படங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் பனிப்பாறையின் கீழ்ப்பகுதி உடைந்தும் சரிந்தும் இருப்பது தெளிவாக பதிவாகியுள்ளது.

நேபாள வெள்ளப் பெருக்கு

இது, பனிப்பாறையின் நிலைத்தன்மை குறைபாடு மற்றும் உள்ளக நீர் அழுத்தத்தின் தாக்கத்தினை வெளிப்படுத்துகிறது. வெள்ளப்பெருக்கு கீழ் நோக்கி பாய்ந்ததால், ஆற்றின் இயல்பான பாதை பல இடங்களில் மாற்றமடைந்துள்ளது. இதன் விளைவாக புதிய சேற்றுப்பாதைகள் உருவாகி ஆற்றுப்பாதையின் இயற்கை வடிவமைப்பினை மாற்றி அமைத்துள்ளன.  

 இதுபோன்ற பனிச்சரிவு மற்றும் வெள்ள பேரழிவு அபாயத்தைக் குறைக்க பல நிலைகளில் ஒருங்கிணைந்த முன்னெச்சரிக்கை அமைப்புகள் உருவாக்கப்படுவது அவசியம். இதற்காக பனிக்குளங்களில் நீர்மட்ட மாற்றங்களை தொடர்ந்து கண்காணிக்க சென்சார் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். இந்த தரவுகளின் அடிப்படையில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க முடியும்.

நேபாள வெள்ளப் பெருக்கு

இதுபோன்ற பேரழிவுகள் காலநிலை மாற்றத்துடன் நேரடியாக தொடர்புடையவை. எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவு நிகழ்வுகள் நிகழவும் வாய்ப்புள்ளது. செயற்கைகோள் கண்காணிப்பு, நிலையான முன்னெச்சரிக்கை அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான முன்னறிவிப்பு மாதிரிகள் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இத்தகைய பேரழிவுகளின் தாக்கத்தை குறைக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.  

"நேபாள ராணுவம்தான் அவர்களை மீட்டெடுத்தது..!"- டெல்லி வந்தடைந்த 21 தமிழர்களைச் சந்தித்த ஜெய்சங்கர்

நேபாளத்தில் இருந்து 21 தமிழர்கள் டெல்லி வந்தடைந்திருக்கின்றனர். அவர்களை தமிழக அமைச்சர்கள் குழு மட்டுமின்றி மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் சந்தித்தி... மேலும் பார்க்க

`வேற வழியிலதான் வர்றோம், ஆனாலும் திக்னு இருக்கு!' - சீனா டு காட்மண்டு பயணத்திலிருக்கும் ரேணுகாதேவி

ஒட்டு மொத்த உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது நேபாள நாட்டில் நிகழ்ந்த பெருவெள்ள பேரிடர். பனிப்பாறைகள் திடீரென சரிந்து விழுந்ததாலேயே இத்தகையதொரு பெரிய துயர சம்பவம் நிகழ்ந்திருப்பதாக கூறுகின்றனர் ... மேலும் பார்க்க

Nepal Flood: நேபாளத்தில் உடைந்த ஏரி; மீட்புப் பணிகள் தற்காலிக நிறுத்தம்; என்ன நடந்தது?

திபெத்தின் பனிப்பாறைகள் உடைந்ததால், நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் போடே கோஷி ஆற்றில், கடந்த புதன்கிழமை (ஆக. 26) திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரக்ளின் எண்ணிக்கை தற்ப... மேலும் பார்க்க

'திரவ கான்கிரீட்' வெள்ளம்... 1.2 கிமீ தூரம் பாய்ந்த பனிப்பாறை; நேபாளத்தைச் சேதப்படுத்தியது எப்படி?

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அ... மேலும் பார்க்க

Nepal Flood: 500-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை - தமிழர்களை மீட்க டெல்லியில் முகாமிட்ட தவெக அமைச்சர்கள்

திபெத்தின் பனிப்பாறைகள் உடைந்ததால், நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் போடே கோஷி ஆற்றில், கடந்த புதன்கிழமை (ஆக. 26) திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரக்ளின் எண்ணிக்கை தற்ப... மேலும் பார்க்க