செய்திகள் :

தூத்துக்குடி: "வேட்பாளரே தெரியாமல் தவெகவுக்கு ஓட்டுப் போட்டது அறியாமை" - அனிதா ராதாகிருஷ்ணன்

post image

தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் பூத் வாரியாக திமுக மற்றும் தவெக பெற்ற வாக்குகளைப் பட்டியலிட்டு காட்டி பேசியிருக்கிறார்.

"வேட்பாளரே தெரியாமல் தவெகவுக்கு ஓட்டு போட்டிருக்கிறீர்களே, இது எவ்வளவு பெரிய அறியாமை. எவ்வளவு மாயை, எவ்வளவு மயக்கம். இந்த மக்களுக்காக எங்களுடைய தலைவர் என்னவெல்லாம் செய்திருக்கிறார்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

அந்தத் தலைவரை களத்தில் மறந்துவிட்டீர்களே. எங்கள் தளபதியை மறந்துவிட்டீர்களே. எங்கள் எம்.பி கனிமொழியை மறந்து விட்டீர்களே. எனக்கு இந்தப் பூத்தில் 437 ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்திருக்கிறீர்கள். ஆனால் தவெகவில் நின்றவருக்கு 406 ஓட்டு செலுத்தியிருக்கிறீர்கள்.

எங்கள் கட்சிகாரர்கள் ஏதாவது தவறு செய்துவிட்டார்களா? எதற்காக தவெகவிற்கு வாக்களித்தீர்கள். இப்படிப் பல்வேறு மாயைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இன்றைய முதல்வர் உங்களுக்கு என்றைக்காவது 1 ரூபாய் கொடுத்திருப்பாரா?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

எம்.ஜி.ஆர் தனது சொந்த பணத்தை அள்ளிக்கொடுத்தார். ஆனால் இன்று 1 ரூபாய் கூட கொடுக்காதவர் முதலமைச்சராகி இருக்கிறார். யோசித்து பாருங்கள். நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இனிமேலாவது எங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று பேசியிருக்கிறார்.

பரமத்திவேலுார் அரசு மருத்துவமனை: ரூ. 6 கோடி மதிப்புள்ள கட்டடம் எப்போது திறக்கப்படும்?- மக்கள் கேள்வி

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பாலப்பட்டி, நன்செய் இடையார், பரமத்திவேலுார், பரமத்தி, கந்தம்பாளையம், கபிலர்மலை, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, ஜேடர்பாளையம் உள்ளிட்ட பல்வ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்! - DVAC-ன் குற்றச்சாட்டு என்ன?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் நேற்று (ஜூலை 29) லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்... மேலும் பார்க்க

ராகுல் vs அமித் ஷா: 'மாணவர்கள் மீதான வன்முறைக்கு அமித் ஷாதான் காரணமா?' - நாடாளுமன்றத்தில் காரசாரம்

நேற்று (ஜூலை 29) நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி vs மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எனக் காரசார விவாதம் சென்றது. ராகுல் காந்தி vs அமித் ஷா வினாத்தாள் கசிவு சம்பந்தமாக டெல... மேலும் பார்க்க

சென்னையில் முதல் சர்வதேச பல்கலைக்கழக வளாகம் - Chubb, Nordex, MotiveLink உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உலகின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டுள... மேலும் பார்க்க

"சீக்கிரத்தில் அண்ணன் ஸ்டாலின் முதல்வராக வந்து விடுவார்" - என்ன சொல்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்?

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குருகாட்டூர் பகுதியில் சமுதாய நலக் கூடம் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் தி.மு.க அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவுமான அனிதா ரா... மேலும் பார்க்க

கைதாகிறாரா செந்தில் பாலாஜி? - டாஸ்மாக் வழக்கில் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் த... மேலும் பார்க்க