செய்திகள் :

தூய்மைப் பணியாளர்கள் போரட்டம்: "உறுதியாக முதல்வர் சந்திப்பார்; பணி நிரந்தரம்.?" - ராஜ்மோகன்

post image

கடந்த 16 நாட்களாக, சென்னை ரிப்பன் பில்டிங்கில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இன்று காலை அவர்களைச் சந்தித்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தைக்குப் பின், போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் பேச்சுவார்த்தை குறித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் LTUC சங்கத் தலைவர் கு.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது...

“பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 நாட்களாகத் தொடர் போராட்டம் நடத்தி வந்தோம்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

இன்று அமைச்சர்கள் சுமார் இரண்டு மணி நேரம் எங்களோடு விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் உறுதிகள்:

உணவுப்படி உயர்வு,

கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதி,

போராட்ட வழக்குகள் ரத்து,

புதிய வாகனங்கள் வழங்குதல்,

இழப்பீட்டுத் தொகை மற்றும் நலவாரியம்,

மழைக்கால உபகரணங்கள்,

விடுப்பு மற்றும் ஊதியக் கோரிக்கைகள்,

தொடர் ஆய்வுக் கூட்டங்கள்.

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை அக்டோபர் 3-ஆம் தேதி மீண்டும் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

உழைப்போர் உரிமை இயக்கத்துடன் நடைபெறும் அந்தப் பேச்சுவார்த்தையில், முதலமைச்சரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், பணியாளர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் நல்ல செய்திகள் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர்களும் ஆணையரும் உறுதியளித்துள்ளனர்.

எனவே, இந்தப் போராட்டம் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்படுகிறது. அன்றைய தினம் அறிவிக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், சங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.

மேலும், சங்கத்திற்கான அலுவலகம் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.”

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “அரசு வேலை வழங்குவது தொடர்பாக இரு முதன்மையான சவால்கள் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஒன்று, நிதி சார்ந்த சிக்கல்கள்,

இன்னொன்று, நிர்வாக ரீதியிலான சிக்கல்கள்.

இருப்பினும், பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாத பிரச்

னைகள் எதுவும் இல்லை.

இன்று மூத்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இவர்களை உறுதியாக முதலமைச்சர் சந்திப்பார்.

ஒப்பந்த முறை ரத்து மற்றும் பணி நிரந்தரத்தில் நிதிச் சுமை சார்ந்த பல்வேறு காரணிகள் இதில் அடங்கியுள்ளன.

எனவே, இது குறித்த தெளிவான விவரங்கள் அக்டோபர் 3-ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் முறைப்படி தெரிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

'வழக்குகள் வாபஸ்; உணவுப்படி 50 ரூபாய்...' - தூய்மைப் பணியாளர்களுக்கு அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதி!

பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு குறித்து நீண்ட நாட்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுடன் தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்தப் ... மேலும் பார்க்க

'பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு வந்தோம்!'- கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு தவெக அமைச்சர்களின் திடீர் விசிட்!

தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் திடீரென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு சென்று அக்கட்சியின் தலைவர்களோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். பெ.சண்முகம் - அ... மேலும் பார்க்க

பிரதமர் வேட்பாளராக விஜய்: ’என்னை சிக்கலில் விட்டு விடாதீர்கள்?’ – அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கவும், போதை பொருளை கட்டுப்படுத்தவும்... மேலும் பார்க்க

'தலைமைச் செயலகத்தில் அம்மா உணவகம் அமைக்கப்படுமா?' - மக்கள் கோரிக்கை!

தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவிலும் அமைச்சர்களின் அறையிலும் மனு கொடுக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடி வருகின்றனர். அவர்கள் ஏழை எளிய மக்கள் அதிகம் கூடும் தலைமைச் செயலகத்தில் அம்மா உணவகம் இரு... மேலும் பார்க்க

"இத்தாலியின் நீண்ட காலப் பிரதமர்; என் தோழிக்கு வாழ்த்துகள்"- மெலோனிக்கு மோடி வாழ்த்து

இந்தியப் பிரதமர் மோடியும், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் நல்ல நண்பர்கள்.தற்போது மெலோனி ‘இத்தாலியின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகிப்பவர்’ என்கிற பெருமையை அடைந்துள்ளார்.இதையொட்டி மெலோனிக்குத் த... மேலும் பார்க்க

`Rapido நிறுவனத்தால் மட்டுமே 2.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு; எனவே, மாநில அரசுகள்..!' - நிதின் கட்கரி

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மைப் பிரச்னை குறித்தும், 22 லட்சம் வேலைவாய்ப்புகள் குறித்தும் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளதாவது...“நமது நாட்டில் கிட்டத்தட்ட 22 லட்சம் டிரைவர்க... மேலும் பார்க்க