செய்திகள் :

தென்மாநில முதல்வர்கள் மாநாடு: அமித் ஷா தலைமையில் கூடும் 5 மாநில முதல்வர்கள் - எதிர்பார்ப்புகள் என்ன?

post image

நாளையும், நாளை மறுநாளும் (ஆகஸ்ட் 19, 20) செங்கல்பட்டு கோவளத்தில் ‘31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு’ நடைபெற உள்ளது.

இது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடக்க உள்ளது. இதற்காக இரண்டு நாள் பயணமாகத் தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா.

அண்டை மாநிலங்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்த மத்திய அரசால் வழக்கமாக நடத்தப்படும் மாநாடுதான் இது.

செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் உள்ள பிஷர்மேன் கோவ் ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

அமித் ஷா
அமித் ஷா

மாநாட்டின் நோக்கம்

‘தென்மாநிலம்’ என்று பெயர் குறிப்பிடுவது போலவே, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி ஆகியவற்றின் முதலமைச்சர்களும், உயரதிகாரிகளும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்த மாநாட்டில் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவைப் பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வளப் பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லைப் பிரச்னைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும். முதலமைச்சரான பிறகு, இதுவரை அமித் ஷாவை விஜய் சந்திக்கவே இல்லை.

அமித் ஷா - விஜய் சந்திப்பு

பதவியேற்றப் பின், டெல்லி முதன்முறையாகச் சென்றபோது, அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை விஜய்க்கு.

நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் இணக்கமாக இருப்போம் என்று சுதந்திர தின உரையில் கூறியிருந்தார் விஜய். மத்திய அரசின் இணக்கம் வேண்டுமென்றால், அமித் ஷாவின் பார்வை நிச்சயம் வேண்டும். அந்தப் பார்வையை... அந்த இணக்கத்தை அமித் ஷாவுடனான இந்தச் சந்திப்பு ஏற்படுத்தித் தருமா என்பதைப் பார்க்க வேண்டும்.

காவிரி ஆறு
காவிரி ஆறு

கர்நாடகா பிரச்னை

கர்நாடகாவுடன் காவிரி அணைப் பிரச்னை, தமிழர்கள் மூவரைச் சுட்டுக் கொன்றப் பிரச்னை மிகத் தீவிரமாகத் தமிழகம் மற்றும் கர்நாடகா அரசியல் களத்தில் களமாடி வருகிறது. இந்தப் பிரச்னை இந்தக் கூட்டத்தில் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதற்கு அமித் ஷாவின் பதில் என்னவாக இருக்கும் என்பதைத் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பினரும் உற்று நோக்குகிறார்கள்.

காங்கிரஸ் கேரளத்தை ஆளுகிறது. தமிழ்நாட்டில் ஆளும் கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும், விஜய்யும் இணக்கமான உறவில் இருக்கிறார்கள். தெலங்கானாவை ஆளுவதும் காங்கிரஸே.

தென் மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆளும் ஒரே மாநிலம் ஆந்திரா.

ஆக, கலவைகள் இருக்கும் இந்த மாநாட்டில் என்னென்ன நடக்கப்போகிறதோ? பொறுத்திருந்து பார்ப்போம்!

தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் சந்திப்பு; `இது குறித்தெல்லாம்தான் பேசினேன்' - திருமா சொல்வதென்ன?

நேற்று கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை’ நடத்தியது. இதில் முதன்முறையாகத் தவெகவுடன் கூட்டணி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விசிக தலைவ... மேலும் பார்க்க

'இந்தியாவின் கடனை அடைக்க பலே ஐடியா!' - அமைச்சர் கில்லி சரத்தின் '10' பொன் மொழிகள்

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் 'கில்லி' சரத், தவெகவினர் அத்தனை பேரும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு முதல்வரை புகழ்ந்து தள்ளி ... மேலும் பார்க்க

'கைவிட்ட காவல்துறை; கட்டுக்கடங்காத கூட்டம்... உயிர்பிழைத்து வந்ததே..!'- விசிக மாநாட்டில் நடந்ததென்ன?

வி.சி.க-வின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு கட்டுக்கடங்காத கூட்டத்தால் பாதியிலேயே கைவிடப்பட்டதும், அந்தக் கூட்டநெரிசலுக்கு மத்தியிலும் 'த.வெ.க-வுடன் இணைந்து பயணிப்போம்' என திருமா அறிவித்திருப்பதும் பெரு... மேலும் பார்க்க

அமித் ஷாவை சந்திக்கும் எடப்பாடி; பரபரப்பாகும் `கோவளம்' மீட்டிங் - உன்னிப்பாக கவனிக்கும் வேலுமணி & கோ

அ.தி.மு.க-வுக்குள் வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பினர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், கட்சியின் பொதுச் செயலாளருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே வார்த்தைப்போர் முற்றியிருக்கிறது. அ.தி.மு.க பொ... மேலும் பார்க்க

நெருங்கும் காலக்கெடு, UK விசா கிடைக்காத தமிழக மாணவர்கள் - கனிமொழி மத்திய அரசுக்கு கடிதம்

கடந்த ஆட்சிக்காலத்தில் திமுக அரசு அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வான மாணவர்கள் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ... மேலும் பார்க்க

வண்ணாங்கோவில்: ஆபத்தான முறையில் காத்திருக்கும் மாணவர்கள் - பேருந்து நிறுத்தம் எப்போது அமைக்கப்படும்?

திருச்சி–திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள வண்ணாங்கோவில் பகுதியில் தனியார் பள்ளி மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கல்வி நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில... மேலும் பார்க்க