செய்திகள் :

வண்ணாங்கோவில்: ஆபத்தான முறையில் காத்திருக்கும் மாணவர்கள் - பேருந்து நிறுத்தம் எப்போது அமைக்கப்படும்?

post image

திருச்சி–திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள வண்ணாங்கோவில் பகுதியில் தனியார் பள்ளி மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கல்வி நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இத்தனை ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக பேருந்தில் ஏறி, இறங்குவதற்கான முறையான பேருந்து நிறுத்தம் இருபுறங்களிலும் இல்லாதது தொடர்ந்து சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமன்றி, அப்பகுதி பொதுமக்களும் தினசரி பேருந்து போக்குவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பைபாஸ் சாலையின் இருபுறங்களிலும் பேருந்து நிறுத்தம் இல்லாததால், பேருந்துக்காக சாலையோரத்திலேயே காத்திருந்து, பேருந்து வந்தவுடன் சாலையிலேயே நின்று ஏறி இறங்க வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக பள்ளி மாணவர்களின் நிலை இன்னும் சிரமமாக உள்ளது. பேருந்துக்காக காத்திருக்கும் நேரங்களில் போதிய இடவசதி இல்லாததால், சில நேரங்களில் பள்ளி மாணவர்கள் சாலையோரத்திலேயே உட்கார்ந்து காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பேருந்து வந்தவுடன் அவசரமாக எழுந்து சாலைக்குச் சென்று பேருந்தில் ஏறிச் செல்லும் நிலையும் காணப்படுகிறது.

அதிக வாகனங்கள் செல்லும் பிரதான பைபாஸ் சாலையில் சிறுவர்கள் இவ்வாறு சாலையோரத்தில் காத்திருப்பதும், பேருந்து வரும்போது சாலைக்குச் சென்று ஏறுவதும் பெற்றோர்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், மழைக்காலம் தொடங்கும் நிலையில் இந்தச் சிரமம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மழையில் நனையாமல் காத்திருக்க நிழற்குடை மற்றும் பாதுகாப்பான காத்திருப்பு இடம் இல்லாததால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, திருச்சி–திண்டுக்கல் பைபாஸ் சாலையில் வண்ணாங்கோவில் அருகே சாலையின் இருபுறங்களிலும் முறையான பேருந்து நிறுத்தம், நிழற்குடை மற்றும் பாதுகாப்பான பயணிகள் காத்திருப்பு பகுதி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த அடிப்படைத் தேவைக்கு, 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தீர்வு கிடைக்குமா என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Iran War: அமெரிக்கா முன் மூன்றே வழிகள்; மூன்றுமே சிக்கல்தான்! - தவிக்கும் ட்ரம்ப் | முழு அலசல்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தம், போரிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு பாதையை அமெரிக்காவுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தம், விர... மேலும் பார்க்க

இந்தியாவைப் பார்த்து அமெரிக்காவும் மாறுகிறதா? வாக்காளர் அட்டைக்கு புதிய சட்டம் - ட்ரம்ப் பிளான்!

1982-ம் ஆண்டில் முதன்முறையாக சோதனை முயற்சியாக இந்தியா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தியது. அதன் பின், 2003-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் தேர்தல்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ப... மேலும் பார்க்க

காவலர் தாக்கப்பட்ட விவகாரம்:``Public Nuisance-ஐ தட்டிக் கேட்பதில் தவறில்லையே" - நயினார் நாகேந்திரன்

தஞ்சாவூரில் நேற்று விசிக-வினர் சாலமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த வழியில் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஆகாஷ் (26) என்பவர் தொடர்ந்து ஹாரன் அடித்துள... மேலும் பார்க்க

‘வெள்ளைக் கொடி காட்டுங்கள்’ ஈரானிடம் ட்ரம்ப் கேட்கிறார்; ஆனால், ஓமனுடன் புது பிளானில் ஈரான்!

கடந்த ஜூன் 17-ம் தேதி, அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தம் சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.அந்த ஒப்பந்தத்தில் 60 நாள்களுக்குப் போர் நிறுத்தம். இந்தச் சமயத்தில் இரு நாடுகளும் அணு ஆயு... மேலும் பார்க்க

ஜார்கண்ட் மாணவர்கள் போராட்டம்: 'பின்வாங்கிய அரசு' ; ஆனாலும் தொடரும் போராட்டம்!

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) மற்றும் பணியாளர் தேர்வு வாரியம் (JSSC CGL) நடத்திய தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, ... மேலும் பார்க்க

தமிழர்கள் சுட்டுக்கொலை: "எங்கள் மாநிலத்தைப் பாதுகாக்க எங்களுக்குத் தெரியும்"- கர்நாடக முதல்வர் பதில்

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கர்நாடகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் கர்நாடகா வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் வேட்டையில் ஈடுபட்டிருந்... மேலும் பார்க்க