செய்திகள் :

தேசியக் கொடிக்கு பதிலாக காவிக்கொடி கொடுத்த பாஜக அமைச்சர்; கடுப்பான அமித் ஷா! - நடந்தது என்ன ?

post image

இந்தியக் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருது, புதுச்சேரி காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது. காவல் துறையின் மிக உயரியதான அந்த விருதை கொடுப்பதற்காக, ஆகஸ்ட் 8, 9 என இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அதன்படி 9-ம் தேதி காலையில் கோரிமேட்டு காவல்துறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு, குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதை வழங்கினார்.

அந்த நிகழ்ச்சி முடிந்ததும், பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 80-வது சுதந்திரதின தேசியக் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது சுமார் 2,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களும், மாணவர்களும் தேசியக் கொடிகளுடன் அணிவகுப்புக்கு நின்று கொண்டிருந்தனர். அந்த மேடையில் ஏறிய அமித் ஷா, பேரணியை கொடி அசைத்து துவக்கி வைப்பதற்காக தேசியக் கொடியைக் கேட்டார்.

அப்போது அவர் அருகில் நின்று கொண்டிருந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பெரிய காவிக்கொடி ஒன்றை அமித்ஷாவிடம் கொடுத்தார். கொடி வந்துவிட்டது என்று அதைக் கையில் வாங்கிய அமித்ஷா, அது காவிக்கொடி என்று தெரிந்ததும் டென்ஷனானார். தொடர்ந்து, `தேசியக் கொடியைக் கொடுங்கள்’ என்று அவர் கடுகடுக்க, ஓடிச் சென்று தேசியக் கொடியை எடுத்து வந்து கொடுத்தார் நமச்சிவாயம்.

காங்கிரஸ் கட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம், 2021 தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்தவர். அதேபோல இவருக்கு உள்துறை பதவியை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், முதல்வர் ரங்கசாமி அனுப்பிய இலாகாப் பட்டியலை ஆளுநர் நிறுத்தி வைத்து தாமதப்படுத்தியதாக என்.ஆர்.காங்கிரஸார் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

"எங்களுக்கு அப்படியொரு பயம், முதல்வர் தினம் தினம்..!"- எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துக்கு ஆனந்த் பதில்

பட்டஜெட் விவாதக் கூட்டத்தொடரின் நான்காவது நாள் இன்று (ஆகஸ்ட்.10) சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற விவாதத் தொடரில், " முழு பயிர் கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்தீர்களே அது என்... மேலும் பார்க்க

'எங்களுக்காக ஒரு பைசா செலவளித்திருப்பாரா?' - எடப்பாடிக்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்

சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், திடீரென அவையிலிருந்து வெளியே வந்த அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். CV Shanmugamசி.வி.சண்முகம் பேசியதாவத... மேலும் பார்க்க

`அந்த தாக்குதலில் நான் உயிரிழந்திருப்பேன்' - கல், ஷூ, சகதியால் மம்தா பானர்ஜி கார் மீது தாக்குதல்

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அங்கு பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கட்சியில் அதிரு... மேலும் பார்க்க

FCRA 2026: ``சமூக அமைப்புகளின் சொத்துக்களை அபகரிக்கும் சர்வாதிகார ஆக்கிரமிப்பு" - மாணிக்கம் தாக்கூர்

இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்கள் (NGO), அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமய அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதைக் கட்டுப்படுத்தவும் முறைப்படுத்தவும் 2010-ம் ஆண்டு 'வெளிநாட்டு நன்கொ... மேலும் பார்க்க

``வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கப் போகிறோம்!" - முதல்வர் விஜய் அறிவிப்பு | Live

``வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கப் போகிறோம்." - முதல்வர் விஜய்``விவசாயிகள் நெல் மற்றும் கரும்பை விளைவிக்கவும் விற்பனை செய்யவும் உடல் பொருள் ஆவி அத்தனையையும் கொடுக்கின்றனர். ... மேலும் பார்க்க