செய்திகள் :

"எங்களுக்கு அப்படியொரு பயம், முதல்வர் தினம் தினம்..!"- எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துக்கு ஆனந்த் பதில்

post image

பட்டஜெட் விவாதக் கூட்டத்தொடரின் நான்காவது நாள் இன்று (ஆகஸ்ட்.10) சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற விவாதத் தொடரில், " முழு பயிர் கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்தீர்களே அது என்ன ஆனது?" என்று உதயநிதி கேள்வி எழுப்பி இருந்தார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அதற்கு பதில் அளித்த முதல்வர் விஜய், " 'அரசியலே நாங்கதான்' என சொல்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தாலே விஷயம் தெரிந்திருக்கும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்றைய விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், " திமுக பேசிப் பேசி வளர்ந்த இயக்கம். எங்களை பார்த்து பேப்பர் படிக்கிறீர்களா என்று கேட்கிறீர்கள்...நாங்கள் ஆட்சியில் இருந்த போது காலை 8 மணி வரைக்கும் அவ்வளவு டென்ஷனாக இருக்கும்.

பேப்பரில் மக்கள் பிரச்னைகளைப் பார்த்துவிட்டு அதிகாரிகள் மூலம் முதல்வர் எங்களைத் தொடர்புகொண்டு என்னவென்று கேட்பார். அதனால் 5 ஆண்டுகளும் டென்ஷனாகவே இருந்தோம். ஆனால், நீங்களெல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்களே?" என்று தவெகவை சாடினார்.

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எழுந்து பேசிய அமைச்சர் ஆனந்த், " சின்ன வாய்க்கால் பிரச்னை என்றாலும் அது சரியாகிவிட்டதா? என உடனே போன் போட்டு கேட்கக் கூடிய முதல்வர் இவர். உங்களுக்காகவாது 5 ஆண்டுகள்தான் டென்ஷன். எனக்கு தினந்தினம் டென்ஷன். சின்ன விஷயமாக இருந்தாலும் எங்களுக்கு அப்படி ஒரு பயம் இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

'எங்களுக்காக ஒரு பைசா செலவளித்திருப்பாரா?' - எடப்பாடிக்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்

சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், திடீரென அவையிலிருந்து வெளியே வந்த அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். CV Shanmugamசி.வி.சண்முகம் பேசியதாவத... மேலும் பார்க்க

தேசியக் கொடிக்கு பதிலாக காவிக்கொடி கொடுத்த பாஜக அமைச்சர்; கடுப்பான அமித் ஷா! - நடந்தது என்ன ?

இந்தியக் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருது, புதுச்சேரி காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது. காவல் துறையின் மிக உயரியதான அந்த விருதை கொடுப்பதற்காக, ஆகஸ்ட் 8, 9 என இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி வந்தார் ... மேலும் பார்க்க

`அந்த தாக்குதலில் நான் உயிரிழந்திருப்பேன்' - கல், ஷூ, சகதியால் மம்தா பானர்ஜி கார் மீது தாக்குதல்

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அங்கு பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கட்சியில் அதிரு... மேலும் பார்க்க

FCRA 2026: ``சமூக அமைப்புகளின் சொத்துக்களை அபகரிக்கும் சர்வாதிகார ஆக்கிரமிப்பு" - மாணிக்கம் தாக்கூர்

இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்கள் (NGO), அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமய அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதைக் கட்டுப்படுத்தவும் முறைப்படுத்தவும் 2010-ம் ஆண்டு 'வெளிநாட்டு நன்கொ... மேலும் பார்க்க

``வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கப் போகிறோம்!" - முதல்வர் விஜய் அறிவிப்பு | Live

``வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கப் போகிறோம்." - முதல்வர் விஜய்``விவசாயிகள் நெல் மற்றும் கரும்பை விளைவிக்கவும் விற்பனை செய்யவும் உடல் பொருள் ஆவி அத்தனையையும் கொடுக்கின்றனர். ... மேலும் பார்க்க