செய்திகள் :

`கயல் சீரியலில் இனி சஞ்சீவ் வரமாட்டாரா?' - ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?

post image

கயல் சீரியலில் இருந்து ஹீரோ சஞ்சீவ் வெளியேறி விட்டதாகத் தெரிய வருகிறது. கதைப்படி சீரியலில் அவர் கோமா நிலையிலிருப்பதாகக் காட்டப்பட்டாலும், இனி அவர் சீரியலில் தொடர வாய்ப்பில்லை என்றே கூறுகிறார்கள் சீரியலுடன் தொடர்புடையவர்கள்.

சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் கயல். ஹீரோவாக சஞ்சீவும் அவருக்கு ஜோடியாக சைத்ராவும் நடித்து வந்தனர். சன் டிவி தொடர்களிலேயே டி.ஆர். பி. ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இடம்பிடித்து வரும் தொடராக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் கடந்த சில மாதங்களாகவே ஹீரோ சஞ்சீவ் தொடர்பான காட்சிகளைப் பார்க்க முடியவில்லை. தற்போது அவர் கோமா நிலைக்குச் சென்று விட்டதாக காட்டப்பட்டு வருகிறது.

என்ன நடந்தது? சஞ்சீவ் இனி சீரியலில் வருவாரா? 'கயல்' யூனிட் வட்டாரத்தில் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

ஆல்யா - சஞ்சீவ்

''சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில சம்பவங்களின் தொடர்ச்சியாகவே அவர் சீரியல்ல இருந்து வெளியேறி இருக்கார்னு சொல்றாங்க. அவருக்கு நெருக்கமான ஓரிருவைத் தவிர மத்த யாருக்கும் டீடெய்லா என்ன நடந்ததுனு தெரியல. ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு முறை ஒரு பஞ்சாயத்து ஆச்சு.

அதன் தொடர்ச்சியா அடுத்த சில தினங்கள்ல இருந்து சஞ்சீவும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர்றதில்ல'' என்கிறார்கள் அவர்கள்.

'எங்களுக்குத் தெரிய, இந்த சீரியலில் இனி சஞ்சீவ் வர்ற்துக்கு வாய்ப்பில்லை என்றும் சிலர் கூறினார்கள்.

முன்னதாக இதே கயல் தொடரில் நடித்து வந்த நடிகர் ஐயப்பனின் மனைவி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று 'இந்த தொடரில் கமிட் ஆன பிறகு ஐயப்பன் வீட்டுககே வருவதில்லை' என பிரச்னை செய்து அது போலீஸ் புகார் வரை போனது நினைவிருக்கலாம். அப்போது முதல் ஐயப்பனும் சீரியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரின் ஹீரோ விஷயத்திலும் யொரு சிக்கல் உண்டாகியிருப்பதால் சஞ்சீவுக்குப் பதில் வேறு யரையாவது கமிட் செய்வதா அல்லது அவருடன் பேசி சமாதானம் செய்து திரும்பவும் கூட்டி வருவதா எனத் தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறதாம் சேனலும் தயாரிப்புத் தரப்பும்.!

Bigg Boss: "எனக்குக் கிடைத்த அந்த ஆழமான அன்பை..." - பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி பற்றி ஓவியா

பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி வருகிற 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்தார்கள். இந்த காமன் மேன் நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் பலரும் கலந்... மேலும் பார்க்க

`சொந்த மருமகளை கூட வாய் நிறைய அப்படி கூப்பிட்டாரா தெரியல‌..' - மறைந்த ஜெயமணி குறித்து நடிகை அபிதா

திருமதி செல்வம், மெட்டி ஒலி, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகர் ஜெயமணி நேற்று சென்னையில் காலமானார். சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் வந்து இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு இன்று மாலை அவ... மேலும் பார்க்க

"'மெட்டி ஒலி 2' சீக்கிரமே நடக்க வாய்ப்பு இருக்கு!" - விஷ்வா கம்பேக் பேட்டி | Samanthi

'மெட்டி ஒலி' சீரியல் மூலம் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் விஷ்வா. சீரியலில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தவர், தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் 'சாமந்தி' சீரியல் மூலம் கம்பேக் கொடுத்திரு... மேலும் பார்க்க

`டி.ஆர்.பி ரேட்டிங் இனி கிடையாதா?' - சீரியல் ஆடியன்ஸ் கணக்கீட்டில் என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?

டி.ஆர்.பி ரேட்டிங் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டிவியில் எந்த சீரியலை அதிகம் பேர் பார்க்கின்றனர், எந்த மொழியில் எந்த சேனலை அதிக மக்கள் பார்க்கின்றனர் என்பன போன்ற விபரங்களைத் தரும் டெலிவிஷன் ரேட்டிங் பா... மேலும் பார்க்க

Sreekumar: "ட்ரோல்ஸ் விஷயங்களுக்கு நான் என் ஹஸ்பண்ட்கிட்ட சொல்றது..." - ஷமிதா ஷேரிங்ஸ்

சின்னத்திரையில் 'சிவசக்தி', 'மௌன ராகம்', 'பேரன்பு' எனப் பல்வேறு வெற்றித் தொடர்கள் மூலம் குடும்பங்களுக்கு பேவரிட்டானவர் நடிகை ஷமிதா. தற்போது இவர் மீண்டும் வில்லியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சாமந்த... மேலும் பார்க்க

Samanthi: "சீரியலின் கதை பிடிக்கலைனா சம்பளத்தை அதிகமாகச் சொல்லிடுவேன்!" - சுர்ஜீத் பேட்டி

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சந்தியாராகம்' தொடர் மூலம் மக்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் சுர்ஜித். அந்த சீரியலிலிருந்து விலகியவர் இப்போது 'சாமந்தி' தொடரின் மூலம் மீண்டும் 'ஜீ தமிழ்' சேனலுக்கு வந்திருக... மேலும் பார்க்க