செய்திகள் :

தொடர்ந்து 9 முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்! - அவரின் 6 சாதனைகள் இதோ!

post image

இன்று 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகிறது.

இந்தப் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது இவர் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் ஆகும். இது வரலாற்று சாதனை ஆகும்.

இது மட்டுமல்லாமல், பட்ஜெட் தாக்கல் செய்வதில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்

அவை...

> 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சாதனையைச் சமன் செய்கிறார் இவர். அடுத்து ஒரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்தால், இவர் முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயின் சாதனையைச் சமன் செய்வார்.

மொரார்ஜி தேசாய் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்தது தான் இதுவரை அதிகளவிலான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

> 1999-ம் ஆண்டுக்கு பிறகு, ஞாயிற்றுக்கிழமை வாசிக்கப்படும் மத்திய பட்ஜெட் இன்று நடக்க உள்ளது. அதை வாசிக்கிறார் நிர்மலா சீதாராமன்.

> 2020-ம் ஆண்டு, இவர் மத்திய பட்ஜெட்டை 2 மணிநேரம் 42 நிமிடங்கள் வாசித்தார். இது இந்திய வரலாற்றில் அதிக நேரம் வாசிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும்.

> இந்தியாவின் முழுநேர பெண் நிதியமைச்சர் என்கிற பெருமை நிர்மலா சீதாராமனையே சேரும். இவர் 2019-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி, இந்தப் பொறுப்பை ஏற்றார்.

தொடர்ந்து அதிக நாள்கள் நிதியமைச்சராக இருக்கும் பெருமையும் இவரையே சாரும். இந்தச் சாதனையை இவர் 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பெற்றார்.

மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்

> பிரிட்டிஷ் பாரம்பரியத்தின் படி, பட்ஜெட் தாள்களை லெதர் சூட்கேஸில் கொண்டுவருவது வழக்கம். இதை மாற்றி, 2019-ம் ஆண்டு முதல், சிவப்புப் பட்டுத் துணியால் மூடி பட்ஜெட் தாள்களைக் கொண்டுவருகிறார் இவர்.

> 2021-ம் ஆண்டு, முதன்முறையாக பேப்பர் அல்லாத பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதுவரை பட்ஜெட் அறிவிப்புகள் பேப்பரில் அச்சடிக்கப்பட்டுப் படிக்கப்படும். 2021-ம் ஆண்டு முதல், டேப்லெட்டில் இருந்து வாசிக்கப்படுகிறது.

'அவர்' மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா? - சு.வெ

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில், பெருந்தமிழர் விருது பெற்ற எஸ்.வி.ராஜதுறை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி பேசுகையில், "விகடனுடைய 'பெருந்தமிழர்' விருது பெறுகிற தோழர் எஸ்.வி.ஆர்., நம் சமகாலத்தின... மேலும் பார்க்க

``தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ - ஸ்டாலின் கடும் தாக்கு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

'த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகையை பாஜக தடுக்க பார்க்கிறது என்று திமுகவினர் முட்டாள்தனமான பேசுகிறார்கள். ... மேலும் பார்க்க

'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!' – காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா

``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்...”புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷ... மேலும் பார்க்க

`அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்; அப்படி வந்தால்தான்...' - அன்பில் மகேஸ்

திருச்சி, திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எதிரணியினருக்குதான் தேர்தல் பயம். மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யா... மேலும் பார்க்க

அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி

`ஆட்சியில் பங்கு'அரசியல் ஆடுபுலி 05ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிற கோரிக்கையோடு, அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சினைத் தொடங்... மேலும் பார்க்க