செய்திகள் :

"தொடர் மருத்துவ உதவியும் தடையற்ற கண்காணிப்பும்.." - சோனம் வாங்சுக் உடல்நிலை எப்படி இருக்கிறது?

post image

சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைகிறது என்று நேற்று முன்தினம் (ஜூலை 18), டெல்லி அரசு மருத்துவமனை சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதை 'சட்டவிரோதக் காவல்' என்று சோனம் வாங்சுக்கும், அவரது மனைவி கீதாஞ்சலியும் குறிப்பிடுகிறார்கள். உடல்நிலையில் பிரச்னை இல்லையென்றாலும், மருத்துவமனையில் சட்டவிரோதமாக வைத்துள்ளனர் என்பதே இவர்களது குற்றச்சாட்டு.

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது...

அறிக்கை
அறிக்கை

"சோனம் வாங்சுக் தொடர்ந்து வி.எம்.எம்.சி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் மருத்துவப் பராமரிப்பைப் பெற்று வருகிறார். அவரது அத்தியாவசிய உடல் நலம் சார்ந்த அளவீடுகள் சீராக உள்ளன.

இருப்பினும், ரத்தத்தின் அளவீடுகளைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பிலும், பல்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவின் தீவிர மேற்பார்வையிலும் இருந்து வருகிறார்.

புது டெல்லியில் உள்ள வி.எம்.எம்.சி, சஃப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் மருத்துவக் குழுக்களின் மருத்துவப் பரிசோதனையின்படி, அவரது உடல்நிலையில் ஏற்படக்கூடிய சாத்தியமான சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிந்து சரியான நேரத்தில் நிர்வகிப்பதற்கு, தொடர்ச்சியான மருத்துவ உதவியும் தடையற்ற கண்காணிப்பும் தொடர்ந்து அவசியமாகிறது.

அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவப் பராமரிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன, மேலும் அவரது உடல்நிலை ஒரு பல்துறை நிபுணர் குழுவால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. !

``முதல்வர் விஜய் எனக்கு ப்ராமிஸ் செய்திருக்கிறார்; அந்நாளுக்காக காத்திருக்கிறோம்!" - நடிகர் பிரபு

'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமான நடிகர் திலகத்தின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மண... மேலும் பார்க்க

'எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை'-விதிகளை விளக்கிய ஜே.சி.டி. பிரபாகர்

விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெளிவுபடுத்திய... மேலும் பார்க்க

உக்ரைன் மீதான தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு - பெயரை குறிப்பிடாமல் ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம்

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சக... மேலும் பார்க்க

பழநி கோயில் நில மோசடி: `அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதில் உடன்பாடில்லை' - பெ.சண்முகம்

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் இன்று (ஜூலை. 21) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழ... மேலும் பார்க்க

'அமைச்சருக்கும் எங்களுக்கு தொடர்பில்லை' - அறக்கட்டளை நிர்​வாகி முரு​க​தாஸின் மனைவி லீலா பேட்டி

பழநி​யில் உள்ள மடத்​துக்குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள நிலத்​தை, முறை​கே​டாக தனிநபர்​களுக்கு பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட பதிவாளர் சசிகலா, சார்பதிவாளர் ஜஸ்... மேலும் பார்க்க

`சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாளில்தான்.!' - ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்து ஜெயராம் ரமேஷ்

முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்து ஓராண்டு ஆகிறது என்பதை நினைவுகூர்ந்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ். இது குறித்து அவர் வெளியிட்டு... மேலும் பார்க்க