செய்திகள் :

'அமைச்சருக்கும் எங்களுக்கு தொடர்பில்லை' - அறக்கட்டளை நிர்​வாகி முரு​க​தாஸின் மனைவி லீலா பேட்டி

post image

பழநி​யில் உள்ள மடத்​துக்குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள நிலத்​தை, முறை​கே​டாக தனிநபர்​களுக்கு பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட பதிவாளர் சசிகலா, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, நிலத்தை விற்க முயன்ற தண்​ட​பாணி சுவாமிகள் அறக்​கட்​டளை நிர்​வாகி​களில் ஒரு​வரு​மான முருகதாஸ்  மற்றும் வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் தொடர்புடைய முருகதாஸ் விழுப்​புரம் காம​ராஜர் நகரில் வசித்து வருகிறார். அவரை விசாரணை செய்வதற்காக கடந்த 18 ஆம் தேதி சிபிசிஐடி போலீ​ஸார் சென்றனர்.

அப்போது அவருடைய வீட்டில் யாருமில்லாமல் வீடு பூட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து  பூட்​டி​யிருந்த வீட்​டின் கதவையும் உள்ளே இருந்த பீரோவை​யும் உடைத்​து, அதிலிருந்த சில முக்​கிய ஆவணங்​களை கைப்​பற்​றினர். பின்​னர் வீட்​டுக்கு சீல் வைத்​து​விட்டு புறப்​பட்​டுச் சென்​றனர்.

இந்​நிலை​யில் முரு​க​தாஸ் மற்​றும் அவரது மனைவி லீலா ஆகியோர் நேற்று விழுப்​புரம் சிபிசிஐடி போலீ​ஸாரிடம் சாவியை பெற்று வீட்டை திறந்​தனர்.

கார்பார்க்கிங்காக உள்ள கோவில் நிலம்

தொடர்ந்து முருகதாஸின் மனைவி லீலா கூறிய​தாவது, "பழநி​யில் உள்ள தண்​ட​பாணி சுவாமிகள் மடத்தை எனது மாமா நிர்​வகித்து வந்​தார். அவர் தற்​போது உயிருடன் இல்​லை. மடத்​துக்குச் சொந்​த​மான இடம் தான​மாக வழங்​கப்​பட்​டது​தான். திரு​வா​மாத்​தூரில் உள்ள கவு​மார மடால​யத்தை விஸ்தரிப்பு செய்​வதற்​காக, பழநி​யில் உள்ள மடத்து சொத்தை விற்​பனை செய்ய முடிவு செய்​தோம்.

எங்​களை வழக்​கறிஞர் ஒரு​வர் அணுகி​னார். ரூ.2 கோடி தரு​வ​தாக தெரி​வித்​தார். அவரது பேச்சை நம்​பி, எனது கணவர் முரு​க​தாஸ் கையொப்​பமிட்​டார்.

ஆனால் எங்​களுக்கு பணம் கொடுக்​க​வில்​லை. வழக்​கறிஞருடன் நடத்​திய அனைத்து உரை​யாடல்​களுக்​கும் ஆதா​ரம் உள்​ளது. முறை​கே​டாக பத்​திரப்​ப​திவு என்​பது தெரி​யாது. இந்த வழக்​கில் எனது கணவர் பெயரை​யும் இணைத்​துள்​ள​தால் சிபிசிஐடி விசா​ரணைக்கு நானும், எனது கணவர் முரு​க​தாஸும் திண்​டுக்​கல் சிபிசிஐடி அலு​வல​கத்​துக்கு கடந்த 18-ம் தேதி சென்​றோம்.நாங்​கள் உள்பட மடத்​துடன் தொடர்புடைய 7 பேர் ஆஜரானார்கள்.

பழனி
பழனி

2 நாட்​களாக விசா​ரணை நடத்​தி​விட்டு பின்னர் எங்களை விடு​வித்​தனர். எனது கணவர் முரு​க​தாஸ், திரு​வெண்​ணெய்​நல்​லூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்​ளி​யில் முதுகலை தமிழ் ஆசிரிய​ராக பணி​யாற்றி வரு​கிறார்.

இதனால் அவர் வழக்​கம்​போல் பணிக்​குச் சென்​றுள்​ளார். அதற்​குள் நாங்​கள் தலைமறை​வாகி​விட்​ட​தாக தவறான தகவலை சமூக வலை​தளத்​தில் பரப்பி வருகின்றனர். நாங்​கள் எந்த தவறும் செய்​ய​வில்​லை. தலைமறைவாக​வும் இல்​லை. அழைக்​கும்​போது விசா​ரணைக்கு ஆஜராவோம். இந்​துசமய அறநிலை​யத் துறை அமைச்​சர் ரமேஷுக்​கும் எங்​களுக்​கும் எந்தத் தொடர்​பும் இல்​லை. எங்​கள் வீட்​டில் இருந்துகவு​மார மடால​யத்​தின் சொத்து பத்​திரங்​கள், வங்கி கணக்கு புத்​தகங்​கள் உள்​ளிட்​ட​வற்றை போலீ​ஸார் கைப்​பற்றி இருக்​கின்​றனர்" என்றார்.

பெயர் மாறிய 'தாயுமானவர்' திட்டம்? 'நான் முதல்வன்', 'விடியல்' வரிசையில் தவெக அரசின் அடுத்த மாற்றம்?

திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட 'நான் முதல்வன்' திட்டத்தை தவெக அரசு 'திறன் தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்தது நினைவிருக்கலாம். அதேபோல மகளிர் இலவசமாகப் பயணம்... மேலும் பார்க்க

பாடகர் அறிவு கைது: ``பாஜக என்ற பெயரைச் சொல்லக் கூட தயங்குகிறது இந்த அரசு" - கனிமொழி கண்டனம்

முதல்வர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்த விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திருநெல்வேலி பாளையங்கோட்டை சிறையில், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை தி... மேலும் பார்க்க

'அழைப்பு விடுக்கும் காக்ரோச்கள்' - தமிழகத்திலும் வெடிக்கும் போராட்டம்; ஹை அலர்ட்டில் உளவுத்துறை!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் CJP கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்திலும் CJP கட்சியின் தொடர் முழக்க போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.Cockroach Protestநீட் வினாத்தாள் கசிவுக்க... மேலும் பார்க்க

திமுக பொதுச்செயலாளராகிறாரா கனிமொழி? தகவலும் பின்னணியும்!

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் லண்டன் சென்று திரும்பிய நிலையில், கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் விரைவிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள். மேலும் வயது மூப்பு காரணமாக பொதுச்செயலாளர் து... மேலும் பார்க்க

CJP: ``மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் ஏன் இன்னும் அமைதிகாக்கிறார்" - ராகுல் காந்தி கேள்வி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க