செய்திகள் :

"நல்ல முடிவெடுத்திருக்கிறார்கள்; தலைவர் சொல்வதுதான் எங்களுடைய நிலைப்பாடும்!" - வன்னி அரசு

post image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் தவெகவிற்கு ஆதரவைத் வழங்குவதாக நேற்று அறிவித்தனர். இருப்பினும், தவெக-விற்கு இன்னும் பெரும்பான்மை பெறவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு குறித்து அறிவித்தால் மட்டுமே பெரும்பான்மை கிடைக்கும். அதனால், விசிக அறிவிக்கப்போகும் முடிவிற்குத் தமிழக அரசியலே பரபரப்புடன் காத்திருக்கிறது.

திருமா - வன்னியரசு
திருமா - வன்னியரசு

அது தொடர்பாக, இன்று செய்தியாளர்களைத் திருமா சந்திக்கவிருக்கிறார். இந்நிலையில், நேற்றைய தினம் விசிகவின் வன்னி அரசு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, இது திருமா காலம் - இனி உயர்வோம் மேலும் மேலும்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். இது பற்றி இன்று செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார் வன்னி அரசு.

அதில் அவர், "தலைவர் இன்று முடிவை அறிவிப்பதாகச் சொல்லியிருக்கிறார். தலைவருடைய முடிவிற்காக நானும் காத்திருக்கிறேன். தலைவர் சொல்வதுதான் எங்களுடைய நிலைப்பாடும். உங்களைப் போன்று நானும் அதற்காகக் காத்திருக்கிறேன்.

மக்கள் அதற்கான தருணத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதனால் மக்களின் எண்ணத்தை நாங்களும் பிரதிபலிக்கிறோம். தமிழ்நாட்டு நலனுக்காக, தமிழ்நாட்டினுடைய உரிமைகளுக்காக விடுதலைச் சிறுத்தைகள் எப்போதுமே நிற்கும்.

ஏற்கனவே நேற்றும் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நல்ல முடிவெடுத்திருக்கிறார்கள்.

வன்னி அரசு - VCK
வன்னி அரசு - VCK

இன்று அதைத் தலைவர் அறிவிப்பார். அந்த அறிவிப்புக்காக உங்களைப் போன்று நானும் வந்து காத்திருக்கிறேன். எனக்குத் தனிப்பட்ட கருத்து என்று ஒன்றும் இல்லை.

கட்சியினுடைய கருத்து, தலைவருடைய கருத்துதான் எங்களுடைய கருத்து. அதனால் கட்டாயம் இந்த முடிவு ஒரு நல்ல முடிவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

தனிப்பட்ட முறையில் யாரையும் விடுதலைச் சிறுத்தைகள் காழ்புணர்ச்சியோடு விமர்சிக்கவில்லை. அரசியல் ரீதியான விமர்சனம்தான். அரசியல் ரீதியான விமர்சனம் பொதுவானதுதான்" எனக் கூறியிருக்கிறார்.

“அமித் ஷாவுக்காக காத்திருக்கும் ஆளுநர்.!” - ரிப்போர்ட் ரெடி!

தமிழகத்தின் முதல்வராக விஜய் தேர்தெடுக்கபடுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்துவருகிறது. போதிய பெரும்பான்மை இல்லாமல் த.வெ.க அல்லோலப்பட்டு வரும் நிலையில், தமிழக ஆளுநர் அலுவலகத்திலிருந்து ரிப்போர்ட் ஒன்று ரெ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வரானார் சுவந்து அதிகாரி; பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்பு

மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் தேர்தல் கமிஷனும், பா.ஜ.கவும் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றுவிட்டனர் என்று கூறி மம்தா... மேலும் பார்க்க

"என்ன வன்மம் பாருங்க; என்னை மிரட்ட பார்க்கிறாங்க!" - தவெக மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் டிடிவி!

தமிழக அரசியல் சூழல் தற்போது பரபரப்பாக இருக்கிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று திடீரென ஆளுநர் மாளிகை வந்து, 'அமமுக சார்பில் வென்ற காமராஜ், தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாகப் போலிக் கடிதம் கொடு... மேலும் பார்க்க

புதிய முப்படை தளபதியாக நியமிக்கப்பட்ட தமிழர் - யார் இந்த ராஜா சுப்ரமணி?

இந்தியாவின் முப்படை தளபதியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து ஒன்றிய அரசு ... மேலும் பார்க்க

"பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல!" - கமல்ஹாசன் காட்டம்

திமுக, அதிமுகவை விட, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆதரவு கோரி, தவெக, விசிக உள்ளிட்ட சில கட்சிகளுக்குக் கடிதமும் ... மேலும் பார்க்க

TVK: "பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது!" - மக்களுக்கு நன்றி சொன்ன விஜய்!

2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிபெருங்கட்சியாக வெற்றியை பதித்திருக்கிறது. 233 தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சந்தித்த முதல் தேர்த... மேலும் பார்க்க