செய்திகள் :

நாடாளுமன்றத்தை நோக்கி 'CJP' இளைஞர்கள் பேரணி : இணையதள சேவை துண்டிப்பு; காவல்துறை தடியடி

post image

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

அவருடைய உடல்நலம் மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவாகவும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவி விலகக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் களத்தில் இறங்கி டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களை நடந்தி வருகிறது.

 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'
'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜுலை 20) தொடங்குவதை ஒட்டி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி 'சலோ சன்சாத்' என்ற பேரணியை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொடங்கி இருக்கின்றனர்.

இந்த பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் பேரணியை இளைஞர்கள் நடத்தி வருகின்றனர். இதனால் இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்தப் பேரணியால் நாடாளுமன்றத்தை சுற்றி இணையதள சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது.

``முதல்வர் விஜய் எனக்கு ப்ராமிஸ் செய்திருக்கிறார்; அந்நாளுக்காக காத்திருக்கிறோம்!" - நடிகர் பிரபு

'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமான நடிகர் திலகத்தின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மண... மேலும் பார்க்க

'எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை'-விதிகளை விளக்கிய ஜே.சி.டி. பிரபாகர்

விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெளிவுபடுத்திய... மேலும் பார்க்க

உக்ரைன் மீதான தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு - பெயரை குறிப்பிடாமல் ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம்

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சக... மேலும் பார்க்க

பழநி கோயில் நில மோசடி: `அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதில் உடன்பாடில்லை' - பெ.சண்முகம்

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் இன்று (ஜூலை. 21) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழ... மேலும் பார்க்க

'அமைச்சருக்கும் எங்களுக்கு தொடர்பில்லை' - அறக்கட்டளை நிர்​வாகி முரு​க​தாஸின் மனைவி லீலா பேட்டி

பழநி​யில் உள்ள மடத்​துக்குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள நிலத்​தை, முறை​கே​டாக தனிநபர்​களுக்கு பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட பதிவாளர் சசிகலா, சார்பதிவாளர் ஜஸ்... மேலும் பார்க்க

`சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாளில்தான்.!' - ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்து ஜெயராம் ரமேஷ்

முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்து ஓராண்டு ஆகிறது என்பதை நினைவுகூர்ந்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ். இது குறித்து அவர் வெளியிட்டு... மேலும் பார்க்க