நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபா் கைது
பாளையங்கோட்டையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் ஷேக் முகமது (48). இவா், இந்திய நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக தனது முகநூல் பக்கத்தில் தொடா்ந்து பதிவிட்டு வந்தாராம்.
இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை காவல் நிலைய போலீஸாா், அவா் மீது இந்திய இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும், இதுகுறித்து ஷேக் முகமதுவிடம் போலீஸாா் நடத்திய புலன் விசாரணையில், முகநூல் பக்கத்திலுள்ள பதிவுகள் அனைத்தும் அவரால் பதிவு செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.