விருதுநகர், மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில்: 1,400 ஆண்டுகள் பழைமை; நோய் தீர...
துண்டுகளில் (Towels) இருக்கும் கோடுகள் எதற்காக? - இது தெரியாமப் போச்சே?! - 4
நாம் அன்றாடம் பயன்படுத்தும் டவல்களின் (துண்டுகள்) ஓரங்களில் தட்டையான, நூல்கள் இல்லாத பட்டை போன்ற கோடுகள் இருப்பது எதற்காக என்று தெரியுமா? அதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான தொழில்நுட்பக் காரணமும், நீண்ட காலப் பயன்பாட்டிற்கான பின்னணியும் இருக்கிறது.

ஜவுளித்துறையில் இந்த அமைப்பை `டாபி பார்டர்' (Dobby Border) அல்லது `கேம் பார்டர்' (Cam Border) என்று அழைப்பார்கள். இது வெறும் டிசைனுக்காக மட்டும் அல்ல. இந்தப் பகுதி மற்ற பகுதிகளை விட மிகவும் நெருக்கமாக நெய்யப்பட்டிருக்கும். இது துண்டின் ஓரங்கள் பிரிந்து போகாமல் தடுப்பதற்கும், துண்டு நீண்ட காலம் உழைப்பதற்கும் உதவுகிறது.
வாஷிங் மெஷினில் துவைக்கும்போது, துண்டு இழுபட்டுப் போக வாய்ப்புள்ளது. இந்த அழுத்தமான பார்டர், ஒரு சட்டகம் (Frame) போலச் செயல்பட்டு, டவலின் ஓரங்கள் சுருண்டு போவதையும், வடிவம் மாறுவதையும் தடுக்கிறது.
துண்டு தேய்ந்து அந்த கோட்டின் அளவிற்கு மெலிதாகிவிட்டால், அந்த துண்டை மாற்றிவிட்டு புதிய துண்டு வாங்குவதற்கான அறிகுறியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
முந்தைய காலங்களில் துணிகளைக் கொடியில் காயவைக்கும்போது மொத்தமான டவலை மாட்டுவதற்கு வசதியாக, தட்டையான மற்றும் உறுதியான பகுதியாக இது வடிவமைக்கப்பட்டது. இதனால் டவலின் மென்மையான குஞ்சம் போன்ற பகுதிகள் சேதமடையாமல் பாதுகாக்க உதவுகின்றன.

துண்டின் எந்தப் பகுதியை முகத்திற்குப் பயன்படுத்த வேண்டும், எந்தப் பகுதியை உடலின் மற்ற பாகங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பிரித்துத் தெரிந்துகொள்ளவும் இது ஒரு அடையாளமாகச் சொல்லப்படுகிறது.
வரலாற்றுப் பின்னணியில் பார்த்தால், துணிகள் நெய்யப்படும்போது, ஒரு துண்டு முடிந்து அடுத்த துண்டு தொடங்குவதை அடையாளப்படுத்த இந்த முறையைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் சாதாரண டிசைன் என்று நினைக்கும் அந்தக் கோடுகள், துண்டின் தரத்தைப் பாதுகாக்கவும், அதன் உபயோகத்தை எளிதாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது ஆச்சர்யமான விஷயம்தான்!





















