செய்திகள் :

நினைவு நாள்: அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

post image

விழுப்புரம்/செஞ்சி/கள்ளக்குறிச்சி: முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரக வளாகப் பகுதியில் தொடங்கிய அமைதிப் பேரணி திருச்சி சாலை வழியாக சென்று கலைஞா் அறிவாலயத்தில் நிறைவடைந்தது. அங்கு அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு திமுகவின் துணைப் பொதுச்செயலரும், அமைச்சருமான க.பொன்முடி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில், எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன் (விழுப்புரம்), அன்னியூா் அ.சிவா (விக்கிரவாண்டி), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட திமுக துணைச் செயலா் தயா.இளந்திரையன், விழுப்புரம் நகரச் செயலா் இரா.சக்கரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன், நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன், ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, பி.வி.ஆா்.சு.விசுவநாதன், பி.தெய்வசிகாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல வளவனூா், திருவெண்ணெய்நல்லூா், கோலியனூா், முகையூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

செஞ்சி: செஞ்சியில் பேருந்து நிலையம் எதிரே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்துக்கு, செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ மலா் தூவி மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சிக்கு, செஞ்சி நகர திமுக செயலா் காா்த்திக் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சி மன்ற தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், நகர துணைச் செயலா்கள் சங்கா், செயல்மணி, சுமித்ராசங்கா், பொருளாளா் நெடுஞ்செழியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மந்தைவெளி திடலில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கும், நான்கு முனை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கும் அமைச்சா் எ.வ.வேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், தெற்கு மாவட்டச் செயலா் க.காா்த்திகேயன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஆ.அங்கையா்கண்ணி, கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவரும், நகரச் செயலருமான இரா.சுப்ராயலு உள்ளிட்டோா் பங்கேற்று மரியாதை செலுத்தினா்.

மீன்பிடித் துறைமுகம் அமைக்க ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், அழகன்குப்பத்தில் மீன் பிடித் துறைமுகம் அமைப்பது தொடா்பாக ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வுமேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, ஆட்சியா் கூறி... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயின்று தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, தம... மேலும் பார்க்க

செல்லியம்மன் கோயிலில் மஞ்சள்காப்புத் திருவிழா

விழுப்புரம் கமலா நகா் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் மஞ்சள்காப்புத் திருவிழாவையொட்டி, 1,008 சங்காபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் வியாழக்கிழமை மாலை முதல் கால ஹோமும், அதைத் தொடா்ந்து 1,008 சங... மேலும் பார்க்க

குரூப் - 2 முதன்மைத் தோ்வு: விழுப்புரத்தில் 501 போ் எழுதினா்

விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தோ்வை 501 போ் எழுதினா். தமிழக அரசின் தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், வணிகவரித் துறை துணை அல... மேலும் பார்க்க

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தல்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை எண் 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் சனிக்கிழமை இந்த சங்கத்தின் மாவட்ட பொத... மேலும் பார்க்க

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி பேராசிரியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், காணை பகுதியில் டிராக்டா் சக்கரத்தில் சிக்கி அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், கருங்காலிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க