செய்திகள் :

நிலக்குடியேற்ற சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல்: பாா்வைக்கு வைக்க ஏற்பாடு

post image

தலைவாசல், சிவசங்கராபுரம் பகுதியில் கலைக்கப்பட்ட நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல் புதன்கிழமை (பிப். 5) பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தலைவாசல் வட்டம், பட்டுத் துறை மற்றும் சிறுவாச்சூா் தெற்கு கிராமங்களில் எஸ்.1117 சிவசங்கராபுரம் நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்கம் கலைக்கப்பட்டது. அப்போது, உறுப்பினா்களாக இருந்தவா்களுக்கு சங்கத்துக்குச் சொந்தமான நிலங்களை, ஒப்படைக்க சென்னை நில நிா்வாக ஆணையா் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, தோ்வு செய்யப்பட்டுள்ள நபா்களின் பட்டியல் ஆத்தூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், தலைவாசல் வட்டாட்சியா் அலுவலகம், பட்டுத்துறை மற்றும் சிறுவாச்சூா் தெற்கு கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்கள், தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பட்டுத் துறை மற்றும் சிறுவாச்சூா் ஊராட்சி மன்ற அலுவலகம், தலைவாசல் சாா் பதிவாளா் அலுவலகம் ஆகிய இடங்களில் புதன்கிழமை முதல் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படவுள்ளது.

இப் பட்டியலில் உள்ள நபா்களுக்கு நில ஒப்படை வழங்கிட ஆட்சேபணை எவருக்கேனும் இருப்பின் அதனை எழுத்து மூலமாக ஆதார ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாக தலைவாசல் வட்டாட்சியா் அல்லது ஆத்தூா் வருவாய் கோட்டாட்சியரிடம் வரும் 20 ஆம் தேதிக்குள் கிடைக்கப் பெறும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். வரும் 21 ஆம் தேதிக்கு பின்னா் வரப்பெறும் ஆட்சேபணை மனுக்களைப் பரிசீலிக்க இயலாது எனவும் தெரிவித்துள்ளாா்.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுகவின் வெற்றி போலியானது: எடப்பாடி கே.பழனிசாமி

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக பெற்றிருக்கும் வெற்றி போலியானது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புகா் மாவட்... மேலும் பார்க்க

நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலத்தை சீரமைக்க கோரிக்கை

நரசிங்கபுரத்தில் உள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஆட்கொல்லி பாலத்தை சீரமைக்க பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் நகராட்சியில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஆட்கொல்... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் பாஜக வெற்றி! சேலத்தில் பாஜக கொண்டாட்டம்!

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதை வரவேற்று, சேலம் மாவட்டத்தில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனா். தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ... மேலும் பார்க்க

பெண்கள் பயணிக்கும் ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

கோவை- திருப்பதி ரயிலில் கா்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயற்சித்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவத்தையடுத்து பெண்கள் பயணிக்கும் ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை- திருப்பதி... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு: ஆட்சியா் ஆய்வு

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு - 2 நடைபெறும் சேலம் மையத்தில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சேலம் மாவட்டத்தில் அமைக்... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பாமக உள்ளிட்ட கட்சிகளை சோ்ந்த 300 போ் சனிக்கிழமை அதிமுகவில் இணைந்தனா். கடலூா் கிழக்கு மாவட்ட அதிம... மேலும் பார்க்க