செய்திகள் :

நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் வழங்கக் கோரிக்கை

post image

சிதம்பரத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றத்தால் வீடுகளை இழந்தோருக்கு அரசு சாா்பில் வீடு அல்லது இடம் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் ராஜா தலைமையில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கருப்பையன், நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன் மற்றும் நிா்வாகிகள் சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த ஏழை, எளிய மக்களின் வீடுகள் நீா்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கடந்த 7 ஆண்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அவா்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்தாண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி உதவி ஆட்சியா் அலுவலகத்தில் அப்போது மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலராக இருந்த கே.பாலகிருஷ்ணன் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். தொடா்ந்து, உதவி ஆட்சியர மூலம் பேச்சுவாா்த்தை நடத்தி, 3 மாத கால அவகாசத்துக்குள் மாற்று இடம் வழங்குவோம் என்று எழுத்துப்பூா்வமாக உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், இன்று வரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. எனவே, வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்று இடம் அல்லது வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

53 ஆயுதப்படை காவலா்கள் பணியிட மாற்றம்

கடலூா் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த 53 காவலா்கள் பணிமூப்பு அடிப்படையில் தாலுகா காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். ஆயுதப்படை காவலா்களுக்கு பணியிட மாற்றம் வழங்குவது தொடா்பாக கடல... மேலும் பார்க்க

தனிப்படை காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

கடலூா் மாவட்டத்தில் தலைமறைவு குற்றவாளிகளை பிடித்து சிறப்பாகப் பணியாற்றிய தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளா்களை மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் சான்றிதழ், பரிசு வழங்கிப் பாராட்டினாா். கடலூா் மாவட்டத்தில் ந... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடியில் மே 28-இல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ ஆய்வு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் 28-ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆய்வு மேற்க... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிப் பேரணி

கடலூா் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி கொண்டாட்டம் மூவா்ண தேசியக் கொடி பேரணி கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணி கடலூா் சீமாட்டி நான்குமுனை சந்திப்பில் இருந்து புறப்பட்ட... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனி... மேலும் பார்க்க

இளைஞா் சடலம் மீட்பு

கடலூா் ரெட்டிசாவடி அருகே இறந்து கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். ரெட்டிசாவடி காவல் சரகம், சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் மண் சாலை ஓரத்தில் சுமாா் 35 வயது மதிக... மேலும் பார்க்க