செய்திகள் :

நெல்லை: மருத்துவ அறிவுரையை மீறி வீட்டில் மனைவிக்கு பிரசவம் பார்த்த நபர்; வயிற்றிலேயே இறந்த குழந்தை!

post image

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் நசீம் உசேன். இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, முகம்மது அஸ்மா. கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அஸ்மாவுக்கு, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், உசேன் இயற்கை மருத்துவத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், அதனால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அறிவுரைகளை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நசீம் உசேன்

இந்த நிலையில், உசேனின் மனைவி அஸ்மாவிற்கு கடந்த 6-ம் தேதி பிரசவவலி ஏற்பட்டுள்ளதாம். மருத்துவமனைக்கு தன் மனைவியை அழைத்துச் செல்லாமல்,  உசேன் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்துள்ளாராம். ஆனால், அவர் பார்த்த பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை, இறந்து வெளியே வந்திருக்கிறது. இந்தச் சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்க, இரவோடு இரவாக குழந்தையின் சடலத்தை புதைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் பரவ மேலப்பாளையம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கணவன் –மனைவி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தோம், “நசீம் உசேன் – அஸ்மா தம்பதிக்கு ஏற்கெனவே இரண்டு முறை கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி, `எங்களுக்கு ஆங்கில மருத்துவம் மற்றும் பரிசோதனையில் உடன்பாடு இல்லை' என நெல்லை மாநகராட்சி சுகாதாரத்துறைக்கு கடிதமாக கொடுத்துள்ளனர்.

மேலப்பாளையம் காவல் நிலையம்

இருவருக்கும் மாநகர நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் அனைத்து அறிவுரைகளும் வழங்கப்பட்டது. குறிப்பாக, பிரசவத்திற்கு 3 நாட்கள் முன்புகூட அவரிடம் அனைத்து துறை அதிகாரிகள் பேசியுள்ளார்கள். ஆனால், இயற்கை மருத்துவம் மீது தனக்கு அதீத நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார். வீட்டில் இருந்தே பிரசவம் பார்த்ததுடன் அப்பாவி சிசுவைக் கொன்ற கணவன், மனைவி ஆகிய இருவர் மீதும் பி.என்.எஸ் 91,94 ஆகிய பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிவு 91-ன் படி 10 ஆண்டுகள் சிறை தண்டணையும், சிசுவின் சடலத்தை புதைத்த குற்றத்திற்காக பிரிவு 94-ன் படி கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டணையும் கிடைக்கக்கூடும்” என்றனர்.     

பாலியல் சித்ரவதை: இரண்டரை வயது பெண் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம் -சிக்கிய திமுக பிரமுகர்

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகேயுள்ள ஜேசுராஜபுரம் ஊராட்சிக்குஉட்பட்ட கவுண்டன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரின்சி (வயது 24). இவரும், ஓசூரில் கட்டட வேலைச் செய்துவந்த திருவண்ணாமலை மாவட்டம் கீ... மேலும் பார்க்க

'பங்குகள் வாங்கும்போதும், விற்கும்போதும்' - SEBI பெயரில் புது மோசடி; அலர்ட் ஆகுங்க மக்களே!

'பணம் கேட்டால் கொடுக்காதீர்கள்' என்று தங்களது பெயரில் நடக்கும் மோசடி குறித்து அலர்ட் செய்துள்ளது செபி. நேற்று செபி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது..."செபியின் லெட்டர்பேடைப் ப... மேலும் பார்க்க

2 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை, கொலை; சிக்கிய திமுக நிர்வாகி - நயினார் நாகேந்திரனின் கண்டனம்

கிருஷ்ணகிரியில் 2 வயது பெண் குழந்தையை திமுகவின் இளைஞரணி கிளைச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதில் அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரிய அதிர்ச்சியைக் கிளப்பியு... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை - துணிச்சலுடன் போராடி போலீஸிடம் இளைஞரைப் பிடித்து கொடுத்த மாணவி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் ஒருவர், கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் செல்வது வழக்கம். 26-ம் தேதி மதியம் கல்லூரி முடிந... மேலும் பார்க்க

கொலை வழக்கு: திமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட 7 பேருக்கு ஆயுள் சிறை - திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்துள்ள செங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள், இருசப்பன் என்பவர்களுக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக பலமு... மேலும் பார்க்க

கும்பகோணம்: ”சார் நீங்க பேட் டச் செய்றீங்க"- கொதித்த மாணவிகள்; அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

கும்பகோணம் அருகே அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் கருப்பூரைச் சேர்ந்த ராஜமனோகர் (55) என்பவர் 10-ம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் மாணவிகளுக்குப் பாலியல் ... மேலும் பார்க்க