செய்திகள் :

கும்பகோணம்: ”சார் நீங்க பேட் டச் செய்றீங்க"- கொதித்த மாணவிகள்; அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

post image

கும்பகோணம் அருகே அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் கருப்பூரைச் சேர்ந்த ராஜமனோகர் (55) என்பவர் 10-ம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

''சார், நீங்க பேட் டச் செய்றீங்க; இது நல்லதல்ல'' என்று மாணவிகள் எச்சரித்துள்ளனர். இவரது செயலால் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜமனோகர்
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜமனோகர்

இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி பள்ளி முடிந்த பின், வகுப்பறையில், சிறப்பு வகுப்பு நடைபெற்றுள்ளது. அப்போது. அதே வகுப்பில் படிக்கும் 14 வயது சிறுமிகளான 7 மாணவிகளுக்கு ராஜமனோகர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து, மாணவி ஒருவரை அவரது தந்தை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது மகள் அழுதபடி ராஜமனோகர் நடந்து கொண்டதைக் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை ஆசிரியரைக் கண்டித்துள்ளார்.

இது குறித்து மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் ராஜமனோகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவிகள் புகார் அளித்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் பெரிதான நிலையில் ராஜமனோகர் பள்ளிக்கு லீவ் போட்டு விட்டார். இந்தச் சூழலில், ராஜமனோகரன், திருவிடைமருதூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரிடம், ''என்னை இதில் இருந்து காப்பாத்துங்கள்'' என்று உதவி கேட்டதாகச் சொல்லப்படுகிறது. அவரும் இதனை வெளியே தெரியாமல் மறைப்பதற்காகக் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகச் சொல்கிறார்கள்.

ஆனால், மாணவிகள் ராஜமனோகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர். இதையடுத்து லீவ் எடுத்திருந்த ராஜமனோகரன் கடந்த 23-ம் தேதி பள்ளிக்கு வந்துள்ளார்.

இதைதொடர்ந்து, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து, குழந்தைகள் நல அலுவலர் சத்யா, திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், ஆசிரியர் ராஜாமனோகர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

சென்னை: `நம்ம வீடியோக்களை காட்டிவிடுவேன்' - தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி 850 கிராம் நகை, பணம் பறிப்பு

சென்னை, புரசைவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநிலத்தைச் சேர்ந்த 35 வயது பெண், தன்னுடைய கணவர், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரின் கணவர் தொழிலதிபராக உள்ளார். அதே அடுக்கு... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: தேர்வு எழுதும்போது பிரசவம்; கழிவறையில் குழந்தை பெற்ற பள்ளி மாணவி; என்ன நடந்தது?

மத்தியப் பிரதேசத்தில் தற்போது 10வது வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. அங்குள்ள தார் மாவட்டத்தில் இருக்கும் பிதாம்பூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது மாணவி 10வது பொதுத்தேர்வு எழு... மேலும் பார்க்க

பஸ்சில் வந்தவர் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து ரூ.15 லட்சம் கொள்ளை! - 3 பேர் கைது 1 கார் பறிமுதல்!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். சென்னையில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அக்ரம். இவர் தனது தந்தையான அப்துல் ரகுமானிடம், தஞ்சாவூர் மாவட்ட... மேலும் பார்க்க

வேலூர்: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து - கைதுக்கு பயந்து இளைஞன் தற்கொலை

வேலூர் அருகேயுள்ள அரியூர் ஜீவா நகரைச் சேர்ந்த 19 வயது இளைஞன் விக்னேஷ். ப்ளஸ் டூவரை பயன்ற விக்னேஷ் உயர்க்கல்வியைத் தொடராமலும், வேலைக்குச் செல்லாமலும் வீட்டிலேயே இருந்து வந்தாராம். இந்த நிலையில், தனியார... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.42 லட்சம் மோசடி; உதவி பொறியாளர் மீது வழக்கு

தஞ்சாவூர், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் தஞ்சாவூர் மாநகராட்சியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றினார். இவரின் மனைவி செல்வி. இவர்களுக்கு, தஞ்சாவூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராகப் பணியாற்... மேலும் பார்க்க

ஒடிசா: சுரங்கத்துறை அதிகாரி வீட்டில் சோதனை; அலமாரி, மேசைகளுக்குள் கட்டுக்காட்டாக பணம்; பின்னணி என்ன?

ஒடிசா சுரங்கத்துறை துணை இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிசா மாநிலம், கட்டாக் மண்டல சுரங்கத்த... மேலும் பார்க்க