செய்திகள் :

ஒடிசா: சுரங்கத்துறை அதிகாரி வீட்டில் சோதனை; அலமாரி, மேசைகளுக்குள் கட்டுக்காட்டாக பணம்; பின்னணி என்ன?

post image

ஒடிசா சுரங்கத்துறை துணை இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிசா மாநிலம், கட்டாக் மண்டல சுரங்கத்துறை துணை இயக்குநராக தேபபத்ரா மொஹாண்டி பணியாற்றி வந்திருக்கிறார்.

அதிகாரியிடம் 4 கோடி ரொக்கம் பறிமுதல்
அதிகாரியிடம் 4 கோடி ரொக்கம் பறிமுதல்

இவர் நிலக்கரி விற்பனையாளர் ஒருவரிடம் நிலக்கரி கிடங்கு மற்றும் போக்குவரத்து அனுமதி வழங்குவதற்காக 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து, நேற்று (பிப். 24) இரவு ஒருவரிடம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக மாட்டியிருக்கிறார்.

இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, புவனேஸ்வர், பத்ரக் மற்றும் கட்டாக் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார் அதிரடி சோதனையை நடத்தி இருக்கின்றனர்.

இந்தச் சோதனையில், நேற்று புவனேஸ்வரில் உள்ள தேபபத்ரா மொஹாண்டியின் வீட்டில் டிராலி பேக்குகள் மற்றும் அலமாரிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

அதிகாரியிடம் 4 கோடி ரொக்கம் பறிமுதல்
அதிகாரியிடம் 4 கோடி ரொக்கம் பறிமுதல்

இது தவிர, 1.20 லட்சம் ரூபாயும், 130 கிராம் தங்க நகைகளும் அவரது அலுவலக மேசையிலிருந்து கண்டறியப்பட்டன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

தஞ்சாவூர்: மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.42 லட்சம் மோசடி; உதவி பொறியாளர் மீது வழக்கு

தஞ்சாவூர், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் தஞ்சாவூர் மாநகராட்சியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றினார். இவரின் மனைவி செல்வி. இவர்களுக்கு, தஞ்சாவூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராகப் பணியாற்... மேலும் பார்க்க

Epstein Files: "என் மிகப்பெரிய தவறு; அதற்கு மன்னிப்புக் கேட்கிறேன்" - என்ன சொல்கிறார் பில் கேட்ஸ்?

அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உர... மேலும் பார்க்க

சென்னை: ஹனிட்ராப்பில் சிக்கிய தாசில்தார் - மனைவி, தோழியுடன் கைதான பிரபல ரௌடியின் பின்னணி!

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வரும், தாசில்தார் ஒருவருக்கு செல்போன் செயலி மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து தாசில்தாரும் அந்தப் பெண்ணும் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசி வ... மேலும் பார்க்க

நாகை: கொலை மிரட்டல் விடுத்த தவெக மாவட்டச் செயலாளர்! - தந்தை மகன் மீது வழக்கு பதிவு

தமிழக வெற்றிக் கழகத்தின் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் சுகுமாரன். இவரது மகன் ரொனால்டோ. தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் நாகை வந்து பரப்புரை செய்தார். அதற்கான வரவு செலவு கணக்கை திருமருகல் கிழக்... மேலும் பார்க்க

விசாரணை என்ற பெயரில் ஆந்திர காவல்துறையினரால் கொடூர சித்திரவதை - தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை விசாரணை என்ற பெயரில் ஆந்திர காவல்துறையினர் சித்திரவதை செய்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை செய்து வருவது தற்போது பரபரப்பை ... மேலும் பார்க்க

IDFC: `IAS அதிகாரிகள் முதல் வங்கி ஊழியர்கள் வரை' - அம்பலமான வங்கி மோசடி; ஹரியானா அரசு சொல்வது என்ன?

ஹரியானா மாநில அரசின் பல்வேறு துறைகள் கடந்த 2025-ம் ஆண்டில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியில் ரூ.50 கோடியும், ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் ரூ.25 கோடியும் டெபாசிட் செய்தன.இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் சும... மேலும் பார்க்க