செய்திகள் :

நாகை: கொலை மிரட்டல் விடுத்த தவெக மாவட்டச் செயலாளர்! - தந்தை மகன் மீது வழக்கு பதிவு

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் சுகுமாரன். இவரது மகன் ரொனால்டோ. தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் நாகை வந்து பரப்புரை செய்தார். அதற்கான வரவு செலவு கணக்கை திருமருகல் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்த நாகேந்திரன் கேட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இது குறித்து பொதுச்செயலாளர் என்.ஆனந்திடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சுகுமாரனுக்கும், நாகேந்திரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் நாகேந்திரன் கட்சியில் ஓரம்கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கொலை மிரட்டல் விடுத்த தவெக மாவட்ட செயலாளர் சுகுமாரன்

இந்நிலையில் என்.ஆனந்தை சந்தித்து முறையிட்டு நீதிகேட்டுள்ளார் நாகேந்திரன். அப்போது சுகுமாரனிடம் போனில் பேசிய ஆனந்த், `நாகேந்திரன் பிர்சனையை விட்டு விடு, அவனுக்கு வேண்டியதை செய்து கொடு உன்னை வந்து பார்க்க சொல்கிறேன்' என சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து கடந்த மாதம் நாகேந்திரன் தன் ஆதரவாளர்களுடன் சென்று சுகுமாரனை சந்தித்துள்ளார். என்னை பற்றி பொதுச்செயலாளர்கிட்ட புகார் சொல்லுவியானு கேட்டு தகாத வார்த்தைகளில் ஏகத்தும் பேசியிருக்கிறாராம் சுகுமாரன்.

மேலும், `தலையை வெட்டி ரோட்டில் வீசுவேன், உன்னை பொதுச்செயலாளர்கிட்ட அழைத்து சென்ற அலெக்ஸை கால்களை தேர்தல் முடிஞ்சதும் வெட்டுவேன்' என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது உடன் இருந்த சுகுமாரன் மகன் ரொனால்டோ, `என் அப்பாவை பற்றி பேசினால் எதை பற்றியும் யோசிக்க மாட்டேன். கல்லை கட்டி கடலில் போட்டு விடுவேனு' மிரட்டியுள்ளாராம். இது குறித்து வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இது குறித்து நாகேந்திரன், நேற்று நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, `ஒரு மாதத்திற்கு முன்பு என்னை சந்திக்க வந்த போது இந்த வீடியோவை எடுத்துள்ளனர். அதில் உள்ளது என் குரல் இல்லை, நான் பேசியது போல் எடிட்டிங் செய்து வெளியிட்டுள்ளனர். தேர்தல் வருகிறது என்பதால் காழ்ப்புணர்சியில் ஒரு மாதத்திற்கு பிறகு இதை செய்திருப்பதாக' சுகுமாரன் வீடியோ குறித்து மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், வெளிப்பாளையம் காவல் நிலைய போலீஸார் சுகுமாரன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது மகன் ரொனால்டோ மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விசாரணை என்ற பெயரில் ஆந்திர காவல்துறையினரால் கொடூர சித்திரவதை - தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை விசாரணை என்ற பெயரில் ஆந்திர காவல்துறையினர் சித்திரவதை செய்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை செய்து வருவது தற்போது பரபரப்பை ... மேலும் பார்க்க

IDFC: `IAS அதிகாரிகள் முதல் வங்கி ஊழியர்கள் வரை' - அம்பலமான வங்கி மோசடி; ஹரியானா அரசு சொல்வது என்ன?

ஹரியானா மாநில அரசின் பல்வேறு துறைகள் கடந்த 2025-ம் ஆண்டில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியில் ரூ.50 கோடியும், ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் ரூ.25 கோடியும் டெபாசிட் செய்தன.இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் சும... மேலும் பார்க்க

ஊட்டி: பழங்குடியைக் கொன்று தின்ற புலி, ஆவேசத்தில் வனத்துறைக்கு எதிராக சாலையில் இறங்கிய மக்கள்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி, ஷூட்டிங் மட்டம் அருகில் உள்ள சின்ன காடிமந்து பகுதியைச் சேர்ந்தவர் தோடர் பழங்குடி புஸ்தாள் குட்டன். 55 வயதான இவர் மலை காய்கறி தோட்டங்களில் வேலை செய்து வந்திருக்கிறார். வழக்கம் ... மேலும் பார்க்க

ஏழை பெண்களே குறி; ஆடம்பர வாழ்க்கை ஆசை - பாலியல் வதை.. மதமாற்றம்? - சிக்கிய சகோதரிகளின் பகீர் பின்னணி

மத்திய பிரதேச மாநிலம், போபாலைச் சேர்ந்த 21 மற்றும் 32 வயது பெண்கள் போலீஸில் கொடுத்துள்ள புகாரில், தங்களை சகோதரிகள் இரண்டு பேர் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளனர். அதோடு தாங்கள் வேல... மேலும் பார்க்க

நீட் தேர்வு எழுதக் கட்டாயப்படுத்திய தந்தை; கொன்று உடலைத் துண்டுத் துண்டாக்கிய மகன் சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் மன்வேந்திர சிங் (49). தொழிலதிபரான இவரது மகன் அக்‌ஷத் பிரதாப் சிங்(21). மன்வேந்திர சிங் தனது மகனிடம் மருத்துவம் படிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதற்காக நீட் தே... மேலும் பார்க்க

எல் மென்ச்சோ: `காதலால் வீழ்ந்த மெக்சிக்கோ போதைப் பொருள் கடத்தல் மன்னன்' - காட்டிக்கொடுத்த காதலி

மெக்சிக்கோவில் அமெரிக்காவில் தேடப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மென்ச்சோ இரண்டு நாட்களுக்கு முன்பு ராணுவ நடவடிக்கையில் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையை தொடர்ந்து நாடு முழுவதும் வன்... மேலும் பார்க்க