செய்திகள் :

நீதித்துறையில் ஊழல்... NCERT பாடத்தில் சர்ச்சை : `திட்டமிட்ட தாக்குதல்' என சாடும் தலைமை நீதிபதி

post image

8-ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகத்தில், "நீதித்துறை ஊழல்" என்ற பெயரில் புதிய பாடம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர்கள், நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இது குறித்து பேசுகையில்,''நீதித்துறைல் ஊழல் என்று பாடப்புத்தகத்தில் சேர்த்து இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நீதித்துறையின் மூத்த உறுப்பினர்களாகிய நாங்கள் 'நீதித்துறை ஊழல்' 8 ஆம் வகுப்பு புத்தகங்களில் ஒரு பகுதியாக இருப்பதைப் பற்றி மிகவும் கவலையடைந்துள்ளோம்," என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், ``இது எனக்கும் தெரியும். நீதிபதிகளிடமிருந்து இது தொடர்பாக தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

நீதித்துறையின் நேர்மையை அவதூறு செய்யவும், கேள்வி கேட்கவும் யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன். இப்பிரச்னை எந்த அளவுக்கு சென்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதித்துறை மீது எந்த தாக்குதலையும் நீதிமன்றம் அனுமதிக்காது.

இந்த நடவடிக்கை நீதித்துறையின் மீதான திட்டமிடப்பட்ட மற்றும் ஆழமான தாக்குதல் ஆகும். உச்ச நீதிமன்றம் யாரையும் நீதித்துறையின் நேர்மையை அவதூறு செய்யவோ அல்லது கேள்வி கேட்கவோ அனுமதிக்காது. இந்த பிரச்சினை பற்றி உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட ஏராளமானோரிடருந்து தொடர்ந்து அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் எனக்கு வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் பாடப்புத்தகத்தில் வந்திருப்பது குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்''என்று தெரிவித்தார்.

மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, இது குறித்து பேசுகையில்,'' நீதித்துறை தனிமைப்படுத்தப்படுவது போல் தெரிகிறது. நீதித்துறையில் மட்டுமே ஊழல் இருப்பது போல் உள்ளது. அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் அல்லது வேறு யாரைப் பற்றியும் எந்த தகவலும் இல்லை. இது மற்ற பகுதியிலும் உள்ளது. ஆனால் நீதித்துறை மட்டும் குறிவைக்கப்பட்டுள்ளது" என்று சிங்வி தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் இது குறித்து தங்களது கவலையை வெளிப்படுத்தி இருந்தனர். ஏற்கனவே பா.ஜ.க தலைவர்கள் பலர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து பல முறை விமர்சனம் செய்துள்ளனர்.

சல்லடை, கூடைகளுடன் அஸ்தியில் தங்கத்தை தேடும் பொதுமக்கள் - கோதாவரி ஆற்றில் நடக்கும் தங்க வேட்டை

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் கோதாவரி ஆறு, பைதன் என்ற இடம் வழியாக செல்கிறது. இந்த பைதன் என்ற இடத்தில் பிரபல ஏகநாத் மகாராஜாவின் சமாதி இருக்கிறது. இந்த கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் தங்க வே... மேலும் பார்க்க

Vedan: `இந்திய அரசியலமைப்பின் சாட்சியாக..!' - ராப் பாடகர் வேடன் திருமணம் | வைரலாகும் படங்கள்

கேரள மாநிலத்தின் பிரபல ராப் இசைக்கலைஞர் வேடன் என்ற ஹிரண் தாஸ் முரளி, தனது நீண்டகாலத் தோழியும் எழுத்தாளருமான நவமி லதாவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருச்சூர் திரூரில் உள்ள இல்லத்தில்... மேலும் பார்க்க

இரட்டை சகோதரிகளுக்கு இரட்டை சகோதரர்களுடன் திருமணம்; மணமக்களை அடையாளம் காண திண்டாடிய சுவாரஸ்யம்!

தெலங்கானாவில் இரட்டை சகோதரர்களுக்கு இரட்டை சகோதரிகளுடன் நடந்த திருமண வீடியோ சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகி இருக்கிறது.அங்குள்ள காமாரெட்டி மாவட்டத்தில் தெமிகலன் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் கீர்த்தன... மேலும் பார்க்க

விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு `கவுரவ டாக்டர்' பட்டம்! - வழங்கியது தாய்லாந்து பல்கலைக்கழகம்

விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் அவர்களுக்கு தாய்லாந்தின் பாங்காங் நகரில் உள்ள ராஜமங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் க்ருங்தெப் (RMUTK) “கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கியுள்ளது.தாய்லாந்து நாட்டின் பிரி... மேலும் பார்க்க

கலப்பட பால் குடித்த 4 பேர் உயிரிழப்பு... சிகிச்சையில் பலர் - ஆந்திராவில் அதிர்ச்சி!

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு திடீரென குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது. அதோடு சிறுநீர் வெளியேறுவதும் வெகுவாக குறைந்தத... மேலும் பார்க்க

"என்னைச் சுட வந்தவரைச் சுட்டுக்கொன்றேன்" - நேர்காணலில் மாஜி பாஜக எம்பி பிரிஜ் பூஷன் ஒப்புதல்

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பிரிஜ்பூஷன் சிங். பா.ஜ.க. முன்னாள் எம்.பியான இவர் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோது வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்... மேலும் பார்க்க