செய்திகள் :

இரட்டை சகோதரிகளுக்கு இரட்டை சகோதரர்களுடன் திருமணம்; மணமக்களை அடையாளம் காண திண்டாடிய சுவாரஸ்யம்!

post image

தெலங்கானாவில் இரட்டை சகோதரர்களுக்கு இரட்டை சகோதரிகளுடன் நடந்த திருமண வீடியோ சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகி இருக்கிறது.

அங்குள்ள காமாரெட்டி மாவட்டத்தில் தெமிகலன் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் கீர்த்தனா, கீர்த்தி. இரட்டை சகோதரிகளாக இவர்களுக்கு இரட்டையர்களாகப் பிறந்த சகோதரர்களைத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

அவர்கள் நினைத்தது போன்று பக்கத்தில் உள்ள கன்பூர் என்ற கிராமத்தில் இரட்டை சகோதரர்கள் விஜய் மற்றும் வினய் இருந்தனர்.

இரட்டை சகோதரர்களுக்கு அவர்களின் பெற்றோர் திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருந்தனர். பக்கத்து கிராமத்தில் அதேபோன்று இரட்டை சகோதரிகள் இருப்பது கேள்விப்பட்டு அங்கு சென்று கீர்த்தனா மற்றும் கீர்த்தி சகோதரிகளைத் தங்களது மகன்களுக்குத் திருமணம் செய்ய பெண் கேட்டனர்.

இரட்டை சகோதரர்கள்
இரட்டை சகோதரர்கள்

இதையடுத்து இரு குடும்பத்தினரும் சேர்ந்து அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அவர்கள் நான்கு பேரும் மணமேடையில் வந்து அமர்ந்தபோது வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

இரட்டை சகோதரிகளை ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியாத அளவுக்கு ஒரே மாதிரியான ஆடைகள், தங்க ஆபரணங்கள் அணிந்து இருந்தனர்.

இதே போன்று இரட்டை சகோதரர்களான மணமகன்களும் ஒரே மாதிரியான ஆடை மற்றும் அலங்காரத்துடன் அருகருகே மணமகன்களாக அமர்ந்திருந்தனர். அவர்களின் இத்திருமணத்தைக் காண பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தனர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மணமக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இரட்டை சகோதரர்களின் நண்பர்கள் இதில் தங்களது நண்பர் யார் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரே மாதிரி இருந்தனர். இத்திருமணம் மிகவும் அபூர்வமான ஒன்றாகக் கருதப்பட்டது.

விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு `கவுரவ டாக்டர்' பட்டம்! - வழங்கியது தாய்லாந்து பல்கலைக்கழகம்

விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் அவர்களுக்கு தாய்லாந்தின் பாங்காங் நகரில் உள்ள ராஜமங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் க்ருங்தெப் (RMUTK) “கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கியுள்ளது.தாய்லாந்து நாட்டின் பிரி... மேலும் பார்க்க

கலப்பட பால் குடித்த 4 பேர் உயிரிழப்பு... சிகிச்சையில் பலர் - ஆந்திராவில் அதிர்ச்சி!

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு திடீரென குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது. அதோடு சிறுநீர் வெளியேறுவதும் வெகுவாக குறைந்தத... மேலும் பார்க்க

"என்னைச் சுட வந்தவரைச் சுட்டுக்கொன்றேன்" - நேர்காணலில் மாஜி பாஜக எம்பி பிரிஜ் பூஷன் ஒப்புதல்

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பிரிஜ்பூஷன் சிங். பா.ஜ.க. முன்னாள் எம்.பியான இவர் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோது வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்... மேலும் பார்க்க

VIT CHENNAI : “எனக்கு ரோல்மாடல் என்னுடைய அம்மா தான்' - Vibrance 2026-ல் நடிகை ச்ரிலீலா

வி.ஐ.டி சென்னையில் `வைப்ரன்ஸ் 2026' என்ற சர்வதேச மாணவ மாணவியர் கலைத் திருவிழாவின் நிறைவு விழா 21.02.2026 அன்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை த... மேலும் பார்க்க

"பசும்பால் புத்திசாலியாக்கும்; எருமைப் பால் சோம்பேறியாக்கும்" - ராஜஸ்தான் பாஜக அமைச்சர் பேச்சு

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் நடந்த பசு பாதுகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக-வைச் சேர்ந்த அம்மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், ''பசும்பால் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கிறது. அதேசமயம் எருமைப்... மேலும் பார்க்க

அமெரிக்காவின் அழுத்தம்; போதைப்பொருள் கடத்தல் மன்னன் மெக்சிக்கோவில் சுட்டுக்கொலை - வெடித்த கலவரம்

மெக்சிக்கோ போதைப் பொருள் கடத்தலுக்கு மிகவும் பெயர் பெற்றது. அங்கு போதைப்பொருள் கடத்தலில் நெமேசியோ ஒசேகுரா ரூபன் செர்வாண்டஸ் என்று அழைக்கப்படும் எல் மென்ச்சோ என்பவன் தான் போதை பொருள் கடத்தலில் கொடிகட்ட... மேலும் பார்க்க