செய்திகள் :

VIT CHENNAI : “எனக்கு ரோல்மாடல் என்னுடைய அம்மா தான்' - Vibrance 2026-ல் நடிகை ச்ரிலீலா

post image

வி.ஐ.டி சென்னையில் `வைப்ரன்ஸ் 2026' என்ற சர்வதேச மாணவ மாணவியர் கலைத் திருவிழாவின் நிறைவு விழா 21.02.2026 அன்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார், விஐடி துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தார். பிரபல திரைப்பட நடிகையும் மருத்துவருமான ஸ்ரீலீலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நடிகை ஸ்ரீலீலா பேசும்போது, ”கல்லூரி வாழ்க்கை அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. அதை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். மாணவர்கள் தங்களது இலக்குகளில் தெளிவாக இருத்தல் வேண்டும். மாணவர்கள் வாழ்வில் முன்னேற ஒவ்வொரு வருடமும், அல்லது குறைந்தபட்சம் கல்லூரியை விட்டு வெளியேறும்போதாவது என்னென்ன விஷயங்களை செய்ய விரும்புகிறோம் என்ற பட்டியலை தயாரித்து அதன் படி செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

பின்னர் மாணவர்கள் எழுப்பிய கேள்விளுக்கு ஸ்ரீலீலா பதிலளித்து பேசுகையில், “எனக்கு ரோல்மாடாலாக இருப்பவர் என்னுடைய அம்மா தான். மாணவர்களாகிய நீங்களும் உங்களுடைய பெற்றோரை ரோல்மாடாலாக ஏற்று கொள்ள வேண்டும். நமக்கு உத்வேகம் அளிக்கும் முன்மாதிரிகளை வீட்டில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

விஐடி சென்னையில் நடந்த வைப்ரன்ஸ் சர்வதேச கலை விழாவில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நடிகை ஸ்ரீலீலா, விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் மற்றும் விஐடி துணைத்தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் கோப்பையை வழங்கி கவுரவித்தனர்.

வாழ்வில் வெற்றி பெற நேர மேலாண்மையில் ஒழுக்கமாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். நான் சினிமா துறையில் இருந்தாலும் உறுதியாக கூறுகிறேன் அனைவரின் வாழ்விலும் மிகவும் முக்கியமானது கல்வி ஒன்று தான். எனவே, மாணவர்கள் அனைவரும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து நன்றாக படிக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்று மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தமிழில் சிவகார்த்திகேயனை பிடிக்கும் என்று ஸ்ரீலீலா கூறினார்.

விழாவில், விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் பேசுகையில், “ இந்த ஆண்டு விஐடி சென்னை வைப்ரன்ஸ் விழாவின் ஒரு அங்கமாக 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்ற டெண்டு கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது, அதில் மீண்டும் திரைப்படம் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போதைய இளம் தலைமுறையினரும் டெண்டு கொட்டகையை பார்த்து ரசித்துள்ளனர். விஐடி கல்வியில் மட்டுமல்ல மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதிலும் முன்னிலை வகிப்பதை இதுபோன்ற விழாக்கள் நிருபிக்கின்றன. மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து உள்நாட்டில் மட்டுமின்றி உலக அளவில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு சிறப்பான வேலைவாய்ப்பை வழங்கி உயர்ந்த நிலையை அடைய விஐடி உதவி வருவது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

வைப்ரன்ஸ் 2026 கலை விழாவில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நடிகை ஸ்ரீலீலா, விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் மற்றும் விஐடி துணைத்தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் கோப்பையை வழங்கி கவுரவித்தனர்.

நிறைவு விழாவில், விஐடி சென்னையின் இணை துணை வேந்தர் முனைவர் டி.தியாகராஜன், இயக்குநர் முனைவர் சத்தியநாராயணன், கூடுதல் பதிவாளர் முனைவர் பி.கே.மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வைப்ரன்ஸ் திருவிழானை பளுதூக்கும் வீராங்கானை டாக்டர் ஆர்த்தி அருண் 18.02.2026 அன்று தொடங்கி வைத்தார். பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் பிரேம்ஜி உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகள் 19.02.2026, 20.02.2026 மற்றும் 21.02.2026 ஆகிய நாட்களில் சிறப்பாக நடந்தது. 200-க்கும் மேற்பட்ட கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. 4 நாட்கள் நடந்த வைப்ரன்ஸ் விழாவில் இலங்கை, மலேசியா, பிரேசில், ஜப்பான், சிங்கப்பூர், தான்சானியா, கம்போடியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்களும், இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் 30,000-த்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

வைப்ரன்ஸ் திருவிழாவில், பழங்காலத்தை நினைவு கூறும் வகையில் டெண்டு கொட்டகை தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில், தமிழ், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களை மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"பசும்பால் புத்திசாலியாக்கும்; எருமைப் பால் சோம்பேறியாக்கும்" - ராஜஸ்தான் பாஜக அமைச்சர் பேச்சு

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் நடந்த பசு பாதுகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக-வைச் சேர்ந்த அம்மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், ''பசும்பால் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கிறது. அதேசமயம் எருமைப்... மேலும் பார்க்க

அமெரிக்காவின் அழுத்தம்; போதைப்பொருள் கடத்தல் மன்னன் மெக்சிக்கோவில் சுட்டுக்கொலை - வெடித்த கலவரம்

மெக்சிக்கோ போதைப் பொருள் கடத்தலுக்கு மிகவும் பெயர் பெற்றது. அங்கு போதைப்பொருள் கடத்தலில் நெமேசியோ ஒசேகுரா ரூபன் செர்வாண்டஸ் என்று அழைக்கப்படும் எல் மென்ச்சோ என்பவன் தான் போதை பொருள் கடத்தலில் கொடிகட்ட... மேலும் பார்க்க

அஜித் பவார் : `காரணத்தை அறிய அனைவரும் விரும்புகிறார்கள்' - விமான விபத்து குறித்து சி.பி.ஐ விசாரணை

மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த மாதம் 28ம் தேதி பாராமதியில் நடந்த விமான விபத்தில் மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து சந்தேகம் கிளப்பிய சரத் பவார் பேரன் ரோஹித் பவார், விமான வ... மேலும் பார்க்க

கைவிட்ட தாய்... அரவணைத்த பொம்மை; இதயங்களை வென்ற குட்டிக் குரங்கு உணர்த்தும் வாழ்க்கை பாடம்!

ஜப்பானின் சிபா மாகாணத்தில் உள்ள இச்சிகாவா நகர மிருகக்காட்சிசாலையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் 'பஞ்ச்' என்ற ஜப்பானிய மக்காக் குரங்கு குட்டி பிறந்தது. பொதுவாக குரங்கு குட்டிகள் பிறந்தவுடன் தனது தாய... மேலும் பார்க்க

AI மாநாடு: `காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் சதி' - ராகுல் காந்திக்கு எதிராக கருப்புகொடி காட்டிய பாஜக

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது மும்பை அருகில் உள்ள பீவாண்டியில் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று பீவாண்டி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் ர... மேலும் பார்க்க

சூப்பர் சென்னை: தொலைநோக்கு பார்வையாளர்களை ஒன்றிணைத்த அறிமுக சூப்பர் சென்னை மாநாடு

சென்னையின் எதிர்காலத்தை வடிவமைப்பது குறித்த ஒரு நாள் முழுவதும் நடைபெறும் உரையாடலுக்காக தமிழ்நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க கொள்கை வகுப்பாளர்கள், தொழில் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் நகர்ப்புற த... மேலும் பார்க்க