செய்திகள் :

20 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி; உடன்குடி அனல்மின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடக்கம்!

post image

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்திற்கு கடந்த 2008-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது. முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், ஆட்சி மாற்றத்தினால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2012-ல் உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்தை தமிழக அரசு மேற்கொள்ளும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனையடுத்து இரு அலகுகளைக் கொண்ட 800 மெகாவாட் தமிழ்நாடு மின் தொடர் கழகம், கடந்த 27.03.2012-ல் ஒப்புதல் அளித்தது.

நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு கப்பல்

ஆனால், 01.02.2023-ம் தேதி 800 மெகாவாட்டிற்குப் பதிலாக 680 மெகாவாட் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. தொடர்ந்து அனல் நிலையம் அமைக்கும் பணி, கடற்கரையொட்டி நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. அனல் மின் நிலைய வளாகத்தில் கட்டடங்கள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் இரவு பகலாக நடந்து வந்த நிலையில், அதுவும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

கடந்த சில மாதங்களாக அனல் மின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புகை வெளியேற்றும் குழாயிலிருந்து புகை வெளியேறி வருகிறது. தற்போது முழுமையாக பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக புகை வெளியேறும் இடத்தில் அதிக அளவு புகை வெளியேறி வருகிறது. அது மட்டுமல்லாமல், இந்த உடன்குடி அனல் மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி இறக்குமதி பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த உடன்குடி அனல் மேல் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி இறக்குமதி செய்வதற்காக இந்தோனேஷியா நாட்டிலிருந்து சரக்கு கப்பல் மூலம் 20 ஆயிரம் டன் நிலக்கரி தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு கப்பல்

அங்கிருந்து கடல் வழியாக உடன்குடி அனல்மின் நிலையத்திற்காக அமைக்கப்பட்டுள்ள  நிலக்கரி இறக்குதளத்திற்கு சரக்கு கப்பல் வருகை தந்துள்ளது.  இந்த சரக்கு கப்பலில் இருந்து நிலக்கரிகள் இறங்குதளத்தில் இறக்குமதி செய்யப்பட்டு கன்வேயர் பெல்ட்டுகள் மூலம் அனல் மின் நிலையத்திற்கு கொண்டு வருவதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Brand Bengaluru: சர்வதேச SWAN அமைப்பில் இந்தியாவின் ஒரே பிரதிநிதி; வாழ்த்திய முதல்வர் சித்தராமையா!

SWAN (Smart Water Networks Forum) என்ற அமைப்பு உலகெங்கிலும் உள்ள குடிநீர், கழிவுநீர் மற்றும் மழைநீர் அமைப்புகளை "ஸ்மார்ட்" (Smart) ஆக மாற்றும் ஒரு சர்வதேச லாப நோக்கற்ற அமைப்பாகும். இதன் தலைமையகம் லண்ட... மேலும் பார்க்க

NLC: விதிமீறல்களின் 'சுரங்கம்' என்.எல்.சி? சிஏஜி அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்; ஓர் அலசல்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (NLC India Ltd), கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு சுற்றுச்சூழல் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.இது தொடர்பாக 2017-18 ம... மேலும் பார்க்க

Chennai Rail: `வதந்திகளை நம்பாதீங்க... நாளைய சிறந்த எழும்பூருக்காக.!' - சென்னை ரயில்வே கோட்டம்

சென்னை மற்றும் சென்னை புறநகரை இணைக்கும் வகையில் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினம்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, அரசு மற்றும் தனியார் துறைகளில் வே... மேலும் பார்க்க

திருமணப் பதிவு: "பெற்றோருக்கு வாட்ஸ்அப்பில் தெரிவிக்கப்படும்" - விதிகளைக் கடுமையாக்கும் குஜராத்

குஜராத் மாநில அரசு, திருமணப் பதிவு முறைக்கெனப் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, திருமணத்தில் பெற்றோரின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் எனவும் தெர... மேலும் பார்க்க

‘உங்கள் அண்ணன் உணர்வெழுச்சியுடன் காத்திருக்கிறேன்!’ - நாதக மாநாடு குறித்து சீமான் உருக்கம்!

பிப்ரவரி 21-ம் தேதியான இன்று திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாட்டை நடந்துகிறது நாம் தமிழர் கட்சி. கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் உருக்கமான மடலை வெளியிட்டுள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப... மேலும் பார்க்க

கோவிட் காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி - நாளை கலந்தாய்வு!

கடந்த 2019 மற்றும் 2020 கோவிட் தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள், பிறகு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.அப்போது வருங்காலங்களில் ரெகுலரான பணி நியமனங்கள் நட... மேலும் பார்க்க