செய்திகள் :

விசாரணை என்ற பெயரில் ஆந்திர காவல்துறையினரால் கொடூர சித்திரவதை - தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை!

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை விசாரணை என்ற பெயரில் ஆந்திர காவல்துறையினர் சித்திரவதை செய்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை செய்து வருவது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த ஜூன் 2023-ல், திருட்டு வழக்கு தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புளியாண்டபட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், சிறார் உட்பட 10-க்கும் மேற்பட்டோரை ஆந்திரா மாநிலம் சித்தூர் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

விசாரணையின் போது தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கடுமையாக சித்திரவதை செய்தும், பெண்களை நிர்வாணப்படுத்தி தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டும், பிறப்புறுப்பில் மிளகாய்த்தூள் கொட்டி கொடூரமான முறையில் சித்திரவதை செய்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் எழுப்பினர். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போலீஸ் சித்திரவதை

பாதிக்கப்படவர்கள் மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் உட்பட 6 காவலர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டபிரிவுகளில் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்பு ஆந்திர மாநில காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த கொடூரமான சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

அதைத் தொடர்ந்து வழக்கை பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம், எஸ்.பி யுவராஜ் தலைமையிலான மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் புளியண்டபட்டி கிராமத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனித உரிமை அமைப்புகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

IDFC: `IAS அதிகாரிகள் முதல் வங்கி ஊழியர்கள் வரை' - அம்பலமான வங்கி மோசடி; ஹரியானா அரசு சொல்வது என்ன?

ஹரியானா மாநில அரசின் பல்வேறு துறைகள் கடந்த 2025-ம் ஆண்டில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியில் ரூ.50 கோடியும், ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் ரூ.25 கோடியும் டெபாசிட் செய்தன.இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் சும... மேலும் பார்க்க

ஊட்டி: பழங்குடியைக் கொன்று தின்ற புலி, ஆவேசத்தில் வனத்துறைக்கு எதிராக சாலையில் இறங்கிய மக்கள்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி, ஷூட்டிங் மட்டம் அருகில் உள்ள சின்ன காடிமந்து பகுதியைச் சேர்ந்தவர் தோடர் பழங்குடி புஸ்தாள் குட்டன். 55 வயதான இவர் மலை காய்கறி தோட்டங்களில் வேலை செய்து வந்திருக்கிறார். வழக்கம் ... மேலும் பார்க்க

ஏழை பெண்களே குறி; ஆடம்பர வாழ்க்கை ஆசை - பாலியல் வதை.. மதமாற்றம்? - சிக்கிய சகோதரிகளின் பகீர் பின்னணி

மத்திய பிரதேச மாநிலம், போபாலைச் சேர்ந்த 21 மற்றும் 32 வயது பெண்கள் போலீஸில் கொடுத்துள்ள புகாரில், தங்களை சகோதரிகள் இரண்டு பேர் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளனர். அதோடு தாங்கள் வேல... மேலும் பார்க்க

நீட் தேர்வு எழுதக் கட்டாயப்படுத்திய தந்தை; கொன்று உடலைத் துண்டுத் துண்டாக்கிய மகன் சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் மன்வேந்திர சிங் (49). தொழிலதிபரான இவரது மகன் அக்‌ஷத் பிரதாப் சிங்(21). மன்வேந்திர சிங் தனது மகனிடம் மருத்துவம் படிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதற்காக நீட் தே... மேலும் பார்க்க

எல் மென்ச்சோ: `காதலால் வீழ்ந்த மெக்சிக்கோ போதைப் பொருள் கடத்தல் மன்னன்' - காட்டிக்கொடுத்த காதலி

மெக்சிக்கோவில் அமெரிக்காவில் தேடப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மென்ச்சோ இரண்டு நாட்களுக்கு முன்பு ராணுவ நடவடிக்கையில் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையை தொடர்ந்து நாடு முழுவதும் வன்... மேலும் பார்க்க

நெல்லை: திருமணம் மீறிய உறவு; பத்திரப்பதிவு எழுத்தர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கரம்!

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள ஆணையப்பபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர், மூலைக்கரைப்பட்டியில் பத்திரம் எழுதும் அலுவலகம் நடத்தி வந்தார். கருத்துவேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளைப... மேலும் பார்க்க