செய்திகள் :

ஊட்டி: பழங்குடியைக் கொன்று தின்ற புலி, ஆவேசத்தில் வனத்துறைக்கு எதிராக சாலையில் இறங்கிய மக்கள்!

post image

நீலகிரி மாவட்டம், ஊட்டி, ஷூட்டிங் மட்டம் அருகில் உள்ள சின்ன காடிமந்து பகுதியைச் சேர்ந்தவர் தோடர் பழங்குடி புஸ்தாள் குட்டன். 55 வயதான இவர் மலை காய்கறி தோட்டங்களில் வேலை செய்து வந்திருக்கிறார். வழக்கம் போல் நேற்று மாலை தோட்ட வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு கிளம்பிய புஸ்தாள், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

புலி தாக்குதல் சம்பவம்

பதற்றமடைந்த அவரின் குடும்பத்தினர் பல இடங்களிலும் புஸ்தாள் குட்டனை தேடி அலைந்திருக்கிறார்கள். அருகில் உள்ள வனப்பகுதியில் புஸ்தாள் குட்டனின் உடல் சிதைந்து கோரமான நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். அதுமட்டுமன்றி, புஸ்தாள் குட்டனின் உடல் பாகங்களை புலி தின்று சென்றிருப்பதையும் உள்ளூர் பழங்குடி மக்கள் உறுதி செய்து அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.

தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்காத வனத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் அலட்சியம் காரணமாகவே புஸ்தாள் குட்டனை புலி தாக்கி உட்கொண்டதாகக் கூறி ஆவேசமடைந்த தோடர் பழங்குடியின மக்கள், ஊட்டி - கூடலூர் சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புலி தாக்குதல் சம்பவம்

அரசுத்துறை அதிகாரிகள் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி மக்களை சமாதானம் செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்னர். புஸ்தாள் குட்டனின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர், அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். ஷூட்டிங் மட்டம் பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.

ஏழை பெண்களே குறி; ஆடம்பர வாழ்க்கை ஆசை - பாலியல் வதை.. மதமாற்றம்? - சிக்கிய சகோதரிகளின் பகீர் பின்னணி

மத்திய பிரதேச மாநிலம், போபாலைச் சேர்ந்த 21 மற்றும் 32 வயது பெண்கள் போலீஸில் கொடுத்துள்ள புகாரில், தங்களை சகோதரிகள் இரண்டு பேர் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளனர். அதோடு தாங்கள் வேல... மேலும் பார்க்க

நீட் தேர்வு எழுதக் கட்டாயப்படுத்திய தந்தை; கொன்று உடலைத் துண்டுத் துண்டாக்கிய மகன் சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் மன்வேந்திர சிங் (49). தொழிலதிபரான இவரது மகன் அக்‌ஷத் பிரதாப் சிங்(21). மன்வேந்திர சிங் தனது மகனிடம் மருத்துவம் படிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதற்காக நீட் தே... மேலும் பார்க்க

எல் மென்ச்சோ: `காதலால் வீழ்ந்த மெக்சிக்கோ போதைப் பொருள் கடத்தல் மன்னன்' - காட்டிக்கொடுத்த காதலி

மெக்சிக்கோவில் அமெரிக்காவில் தேடப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மென்ச்சோ இரண்டு நாட்களுக்கு முன்பு ராணுவ நடவடிக்கையில் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையை தொடர்ந்து நாடு முழுவதும் வன்... மேலும் பார்க்க

நெல்லை: திருமணம் மீறிய உறவு; பத்திரப்பதிவு எழுத்தர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கரம்!

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள ஆணையப்பபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர், மூலைக்கரைப்பட்டியில் பத்திரம் எழுதும் அலுவலகம் நடத்தி வந்தார். கருத்துவேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளைப... மேலும் பார்க்க

ஒரு தலை காதல்; வீடு புகுந்து இரட்டை கொலை செய்த இளைஞர் - கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம், நெகமம் அருகே உள்ளகொண்டே கவுண்டன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி. மெக்கானிக் வேலை செய்கிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவியும்,18 வயது மற்றும் 16 வயதில் 2 மகள்கள் உள்ளனர். நேற்று இரவ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மாணவரை சாதி ரீதியாக தாக்கிய 5 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், முதலூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி ... மேலும் பார்க்க