செய்திகள் :

ஒரு தலை காதல்; வீடு புகுந்து இரட்டை கொலை செய்த இளைஞர் - கோவையில் அதிர்ச்சி சம்பவம்

post image

கோவை மாவட்டம், நெகமம் அருகே உள்ள கொண்டே கவுண்டன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி. மெக்கானிக் வேலை செய்கிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவியும்,18 வயது மற்றும் 16 வயதில் 2 மகள்கள் உள்ளனர். நேற்று இரவு பூபதி வேலைக்கு சென்றுள்ளார்.

அபிஷேக்

2 மகள்கள், கலையரசி பாட்டி மயிலாத்தாள் வீட்டில் இருந்தனர். அந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (24)  என்கிற இளைஞர் அவர்களின் வீட்டுக்குள் சென்றுள்ளார். பூபதி குடும்பத்தினருடன் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அபிஷேக் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து 16 வயது சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். மயிலாத்தாள் அபிஷேக்கை தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது அபிஷேக் மயிலாத்தாளையும் கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் சிறுமியின் அக்காவும் காயமடைந்தார்.

மயிலாத்தாள்
சிறுமி

3 பேரையும் தாக்கிவிட்டு அபிஷேக் தப்பி சென்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 3 பேரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 16 வயது சிறுமியும், மயிலாத்தாளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர்.

காயமடைந்த பூபதியின் மூத்த மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நெகமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அபிஷேக் கடந்த 3 ஆண்டுகளாக 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

கோவை

சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி பூபதி குடும்பத்தினரிடம் வலியுறுத்தியுள்ளார். அதற்கு குடும்பத்தினர் மறுத்ததால் கொலை செய்தது தெரியவந்துள்ளது. தலைமறைவான அபிஷேக்கை 6 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

நீட் தேர்வு எழுதக் கட்டாயப்படுத்திய தந்தை; கொன்று உடலைத் துண்டுத் துண்டாக்கிய மகன் சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் மன்வேந்திர சிங் (49). தொழிலதிபரான இவரது மகன் அக்‌ஷத் பிரதாப் சிங்(21). மன்வேந்திர சிங் தனது மகனிடம் மருத்துவம் படிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதற்காக நீட் தே... மேலும் பார்க்க

எல் மென்ச்சோ: `காதலால் வீழ்ந்த மெக்சிக்கோ போதைப் பொருள் கடத்தல் மன்னன்' - காட்டிக்கொடுத்த காதலி

மெக்சிக்கோவில் அமெரிக்காவில் தேடப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மென்ச்சோ இரண்டு நாட்களுக்கு முன்பு ராணுவ நடவடிக்கையில் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையை தொடர்ந்து நாடு முழுவதும் வன்... மேலும் பார்க்க

நெல்லை: திருமணம் மீறிய உறவு; பத்திரப்பதிவு எழுத்தர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கரம்!

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள ஆணையப்பபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர், மூலைக்கரைப்பட்டியில் பத்திரம் எழுதும் அலுவலகம் நடத்தி வந்தார். கருத்துவேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளைப... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மாணவரை சாதி ரீதியாக தாக்கிய 5 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், முதலூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி ... மேலும் பார்க்க

கூல்டிரிங்க்ஸ் குடிப்பது போல் வந்து குழந்தையை கடத்திச் சென்ற தம்பதி - 20 நிமிடங்களில் மீட்ட போலீஸார்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி, முத்துச்செல்வி. இத்தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் கூல்ட்ரிங்ஸ் கடை நடத்தி வருகின்றனர்.... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: 'கட்டாயத் திருமணம்?' - ஒரே நாளில் திருமணம் செய்யவிருந்த சகோதரிகள் தற்கொலை; பின்னணி என்ன?

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் தீப் சிங். இவரின் மகள்கள் ஷோபா(25) மற்றும் விம்லா(23). இவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே நாளில் திருமணம் செய்து வைக்க அவர்களின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து கொண்டி... மேலும் பார்க்க