செய்திகள் :

கூல்டிரிங்க்ஸ் குடிப்பது போல் வந்து குழந்தையை கடத்திச் சென்ற தம்பதி - 20 நிமிடங்களில் மீட்ட போலீஸார்

post image

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின்  மனைவி,  முத்துச்செல்வி. இத்தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.  இவர்கள் அப்பகுதியில் கூல்ட்ரிங்ஸ் கடை  நடத்தி வருகின்றனர். அந்தக் கடை முன்பு  அவர்களது கபிலேஷ் என்ற 2 வயது  ஆண் குழந்தை கடையின் விளையாடி கொண்டிருந்தது.

இந்த நிலையில்,  கூல்ட்ரிங்க்ஸ் குடிக்க வந்த ஒரு தம்பதியினர் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.  ஒரு கட்டத்தில் தாங்கள் வந்த பைக்கில் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் போது, உடனே  பைக்கை ஸ்டார்ட் செய்து குழந்தையை கடத்திக் கொண்டு சென்று விட்டனர். 

மீட்கப்பட்ட குழந்தை

பரிதவித்த தாய் முத்துச்செல்வி,  குலசேகரபட்டினம்  காவல் நிலையத்தில் நடந்தவற்றை கூறி கதறியழுதார். இதனையடுத்து பைக்கில் தம்பதியினர் சென்ற வழியே போலீஸார்  தேடிச்சென்றனர். அப்போது  குழந்தை தொடர்ந்து அழுததால், காரைக்கால் அம்மையார் கோயில்  அருகில் பைக்கை நிறுத்தி விட்டு  குழந்தையை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸார் சந்தேகத்தின் பேரில் அத்தம்பதியினரை பிடித்து விசாரிக்கும் போது குழந்தையை கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீஸார்,  காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். குழந்தையை கடத்தியவர்கள் திருச்செந்தூர்  அருகில் உள்ள பூச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும்,  சென்னை பள்ளிக்கரணையில் ஹார்டுவேர் கடை நடத்தி வரும்  லிங்கதுரை, அவரது மனைவி ஜெயந்தி என்பது தெரிய வந்தது. ”எங்களுக்கு திருமணமாகி 11ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் குடும்பத்தினரின் கடுமையான வற்புறுத்தலால் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தோம்.  அப்போது பதிவு செய்தபோது பெண் குழந்தையை வளர்க்க கொடுத்துள்ளனர்.

குழந்தையை கடத்திச் சென்றவர்கள்

ஆனால், எங்கள் குடும்பத்தினரிடம் ஆண் குழந்தையை எடுத்து வளர்ப்பதாக கூறியுள்ளோம். இதனையடுத்து  சொந்த ஊருக்கு வந்தபோது குலசேகரன்பட்டினம்  முத்தாரம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கூல்ட்ரிங்க்ஸ் குடிப்பதற்காக கடைக்கு சென்றோம்.  அங்கு துரு துருவென விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை பார்த்ததும் நைசாக பேசி குழந்தையை கடத்தி செல்ல முடிவெடுத்து  குழந்தையை கடத்தினோம்” என்றனர்.  கடத்தப்பட்ட குழந்தையை 20 நிமிடங்களில் போலீஸார் மீட்டனர். இச்சம்பவம் குலசேகரபட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான்: 'கட்டாயத் திருமணம்?' - ஒரே நாளில் திருமணம் செய்யவிருந்த சகோதரிகள் தற்கொலை; பின்னணி என்ன?

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் தீப் சிங். இவரின் மகள்கள் ஷோபா(25) மற்றும் விம்லா(23). இவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே நாளில் திருமணம் செய்து வைக்க அவர்களின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து கொண்டி... மேலும் பார்க்க

ஒடிசா: மணமகன் முன்னிலையில் மணமகளை துப்பாக்கிமுனையில் கடத்திய காதலன்; என்ன நடந்தது?

ஒடிசா மாநிலம் பொலங்கிர் மாவட்டத்தில் உள்ள கந்தமால் என்ற இடத்தைச் சேர்ந்த ரேஸ்மி என்ற பெண்ணுக்கும் அதே மாவட்டத்தில் உள்ள காமக்யாநகர் பகுதியைச் சேர்ந்த ஹரிபந்து பட்டேல் என்பவருக்கும் திருமணம் ஏற்பாடு செ... மேலும் பார்க்க

கும்பகோணம்: பாமக மாவட்ட செயலாளர் மீது வன்கொடுமை பிரிவில் வழக்கு பதிவு! - பின்னணி என்ன?

கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் ஒரு மாணவி 3-ம் ஆண்டு படிக்கிறார். இவருக்கு வயது 20. திருமங்கலக்குடி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவருக்கும் வயது 20. இருவரும் பள்ளி படிக்கும் போதிலிருந்தே பழகி ... மேலும் பார்க்க

சென்னை: 'நாங்க GST ஆபீசர்ஸ்' - முதலாளியிடம் 1.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த தொழிலாளரின்‌ பிளான்

சென்னை சவுகார்பேட்டையில் கூரியர் நிறுவனம் ஒன்றை வைத்திருப்பவர் ராவல்சிங்.சென்னை விமான நிலையத்திற்கு இவரது நிறுவனத்திற்கு 1.5 கிலோ‌ எடை கொண்ட தங்க நகைகளின் பார்சல்கள் வந்துள்ளன.அதை எடுத்து வர, தன் கடைய... மேலும் பார்க்க

சென்னை: தனியாக வசித்த முதியவர் கொலை; துணிக்கடை ஊழியரிடம் விசாரணை; என்ன நடந்தது?

சென்னை புரசைவாக்கம், அரசப்பா தெருவில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் (61). இவர், அண்ணாநகரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவரின் மனைவி உஷா. 2024-ம் ஆண்டு உடல்நலம் சரியில்லாமல் உஷா இறந்துவிட்ட... மேலும் பார்க்க

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பா? திருப்பூரில் சிக்கிய 6 வங்கதேசத்தினர்; பின்னணி என்ன?

நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் குறித்த மத்திய உளவுப் பிரிவு போலீஸார் மற்றும் அந்தந்த மாநில உளவுப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்... மேலும் பார்க்க