செய்திகள் :

ராஜஸ்தான்: 'கட்டாயத் திருமணம்?' - ஒரே நாளில் திருமணம் செய்யவிருந்த சகோதரிகள் தற்கொலை; பின்னணி என்ன?

post image

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் தீப் சிங். இவரின் மகள்கள் ஷோபா(25) மற்றும் விம்லா(23). இவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே நாளில் திருமணம் செய்து வைக்க அவர்களின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

இருவருக்கும் நேற்று திருமணம் நடக்க இருந்தது. இதற்காக திருமண ஏற்பாடுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதிகாலை வரை இந்த ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் நேற்று காலை 4 மணிக்கு இரண்டு சகோதரிகளும் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தனர். அவர்களை அவர்களின் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர்கள் இரண்டு பேரும் உயிரிழந்திந்தனர்.

அவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. திருமண வீடு சோகமயமாக மாறியது. தற்கொலையை போலீஸுக்குத் தெரிவிக்காமல் இருவரது உடலையும் தகனம் செய்ய குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்தனர்.

தற்கொலை
தற்கொலை

ஆனால் இது குறித்து கேள்விப்பட்ட போலீஸார் அவர்களது உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவர்களது உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்கொலைக்கான காரணம் குறித்து இன்னும் தெரியவரவில்லை என்று தெரிவித்துள்ள போலீஸார், அது குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தற்கொலை செய்து கொண்ட சகோதரிகளின் உறவினர் ஜஸ்வந்த் சிங் கூறுகையில், ''இச்சம்பவத்திற்கு சகோதரிகளின் தந்தை தீப் சிங் தரப்புதான் காரணம் ஆகும். தீப் சிங்கின் சகோதரர்கள்தான் இரண்டு பேரின் திருமணத்திற்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். ஆரம்பத்தில் இருவருக்கும் திருமணப் பேச்சு நடந்து வந்தது. ஆனால் அத்திருமணம் நின்று போனது.

முன்பு பேசிய அதே நபர்களுக்கு இரண்டு பேரையும் திருமணம் செய்து கொடுக்கும்படி தீப் சிங் சகோதரர்கள் நிர்ப்பந்தம் செய்து வந்தனர்'' என்றார். இப்புகார் குறித்தும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக வேலை செய்து வருகின்றனர்.

ஒடிசா: மணமகன் முன்னிலையில் மணமகளை துப்பாக்கிமுனையில் கடத்திய காதலன்; என்ன நடந்தது?

ஒடிசா மாநிலம் பொலங்கிர் மாவட்டத்தில் உள்ள கந்தமால் என்ற இடத்தைச் சேர்ந்த ரேஸ்மி என்ற பெண்ணுக்கும் அதே மாவட்டத்தில் உள்ள காமக்யாநகர் பகுதியைச் சேர்ந்த ஹரிபந்து பட்டேல் என்பவருக்கும் திருமணம் ஏற்பாடு செ... மேலும் பார்க்க

கும்பகோணம்: பாமக மாவட்ட செயலாளர் மீது வன்கொடுமை பிரிவில் வழக்கு பதிவு! - பின்னணி என்ன?

கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் ஒரு மாணவி 3-ம் ஆண்டு படிக்கிறார். இவருக்கு வயது 20. திருமங்கலக்குடி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவருக்கும் வயது 20. இருவரும் பள்ளி படிக்கும் போதிலிருந்தே பழகி ... மேலும் பார்க்க

சென்னை: 'நாங்க GST ஆபீசர்ஸ்' - முதலாளியிடம் 1.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த தொழிலாளரின்‌ பிளான்

சென்னை சவுகார்பேட்டையில் கூரியர் நிறுவனம் ஒன்றை வைத்திருப்பவர் ராவல்சிங்.சென்னை விமான நிலையத்திற்கு இவரது நிறுவனத்திற்கு 1.5 கிலோ‌ எடை கொண்ட தங்க நகைகளின் பார்சல்கள் வந்துள்ளன.அதை எடுத்து வர, தன் கடைய... மேலும் பார்க்க

சென்னை: தனியாக வசித்த முதியவர் கொலை; துணிக்கடை ஊழியரிடம் விசாரணை; என்ன நடந்தது?

சென்னை புரசைவாக்கம், அரசப்பா தெருவில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் (61). இவர், அண்ணாநகரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவரின் மனைவி உஷா. 2024-ம் ஆண்டு உடல்நலம் சரியில்லாமல் உஷா இறந்துவிட்ட... மேலும் பார்க்க

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பா? திருப்பூரில் சிக்கிய 6 வங்கதேசத்தினர்; பின்னணி என்ன?

நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் குறித்த மத்திய உளவுப் பிரிவு போலீஸார் மற்றும் அந்தந்த மாநில உளவுப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்... மேலும் பார்க்க

சென்னை: பார்சலுக்குள் மண்டை ஓடு, எலும்புகள், விபூதி; அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்; களமிறங்கிய போலீஸ்

சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள கடைக்கு 20-ம் தேதி ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர் ஒருவர், பார்சல் ஒன்றை வாட்ச்மேன் கிருஷ்ணா லால் என்பவரிடம் கொடுத்து, "இது உங்கள் கடையில் வேலை செய்யும் ஸ்ருத... மேலும் பார்க்க