செய்திகள் :

சல்லடை, கூடைகளுடன் அஸ்தியில் தங்கத்தை தேடும் பொதுமக்கள் - கோதாவரி ஆற்றில் நடக்கும் தங்க வேட்டை

post image

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் கோதாவரி ஆறு, பைதன் என்ற இடம் வழியாக செல்கிறது. இந்த பைதன் என்ற இடத்தில் பிரபல ஏகநாத் மகாராஜாவின் சமாதி இருக்கிறது. இந்த கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் தங்க வேட்டையில் ஈடுபடுவதுண்டு.

கோதாவரி ஆற்றில் ஆண்டு முழுவதும் பொதுமக்கள் இறந்து போன தங்களது உறவினர்களின் அஸ்தியை கரைக்க வருவதுண்டு. அவ்வாறு அஸ்தியை கரைக்கும்போது பொதுமக்கள் இறந்தவர்களுக்கு மிகவும் விருப்பமான தங்கம், வெள்ளி, நாணயங்களை ஆற்றில் போடுவதுண்டு. அவ்வாறு போடப்படும் பொருட்கள் ஆற்றங்கரையில் சகதியில் கிடக்கும்.

அந்த தங்கத்தை எடுக்கத்தான் பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் போட்டிபோடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஏக்நாத் மகாராஜா கோயில் திருவிழா நடப்பது வழக்கம். இத்திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் மாநிலம் முழுவதும் இருந்து பைதன் வருவதுண்டு.

எனவே பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜெயக்வாடி அணையில் இருந்து கோதாவரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கோதாவரி ஆற்றில் தண்ணீர் மட்டம் குறைந்து கரைகள் தெரிய ஆரம்பித்துள்ளது.

உடனே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கையில் சல்லடை மற்றும் கூடையுடன் ஆற்றில் இறங்கி தங்கம் தேட ஆரம்பித்துள்ளனர். சிறுவர் முதல் பெரியவர் என வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் தங்களுக்கு எதாவது கோதாவரி ஆற்றில் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆற்றில் இருந்து மண்ணை எடுத்து சலித்து வருகின்றனர்.

இதில் அவர்களுக்கு அதிக அளவில் நாணயங்கள் கிடைத்து வருகிறது. அப்படி இருந்தும் எப்படியும் தங்களுக்கு தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆற்றில் இறங்கி சகதிக்குள் எதாவது கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கின்றனர். சிலர் குடும்பத்தோடு வந்து தேடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்கம் தேடும் காட்சிகள் வைரலாகி இருக்கிறது.

நீதித்துறையில் ஊழல்... NCERT பாடத்தில் சர்ச்சை : `திட்டமிட்ட தாக்குதல்' என சாடும் தலைமை நீதிபதி

8-ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகத்தில், "நீதித்துறை ஊழல்" என்ற பெயரில் புதிய பாடம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ... மேலும் பார்க்க

Vedan: `இந்திய அரசியலமைப்பின் சாட்சியாக..!' - ராப் பாடகர் வேடன் திருமணம் | வைரலாகும் படங்கள்

கேரள மாநிலத்தின் பிரபல ராப் இசைக்கலைஞர் வேடன் என்ற ஹிரண் தாஸ் முரளி, தனது நீண்டகாலத் தோழியும் எழுத்தாளருமான நவமி லதாவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருச்சூர் திரூரில் உள்ள இல்லத்தில்... மேலும் பார்க்க

இரட்டை சகோதரிகளுக்கு இரட்டை சகோதரர்களுடன் திருமணம்; மணமக்களை அடையாளம் காண திண்டாடிய சுவாரஸ்யம்!

தெலங்கானாவில் இரட்டை சகோதரர்களுக்கு இரட்டை சகோதரிகளுடன் நடந்த திருமண வீடியோ சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகி இருக்கிறது.அங்குள்ள காமாரெட்டி மாவட்டத்தில் தெமிகலன் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் கீர்த்தன... மேலும் பார்க்க

விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு `கவுரவ டாக்டர்' பட்டம்! - வழங்கியது தாய்லாந்து பல்கலைக்கழகம்

விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் அவர்களுக்கு தாய்லாந்தின் பாங்காங் நகரில் உள்ள ராஜமங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் க்ருங்தெப் (RMUTK) “கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கியுள்ளது.தாய்லாந்து நாட்டின் பிரி... மேலும் பார்க்க

கலப்பட பால் குடித்த 4 பேர் உயிரிழப்பு... சிகிச்சையில் பலர் - ஆந்திராவில் அதிர்ச்சி!

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு திடீரென குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது. அதோடு சிறுநீர் வெளியேறுவதும் வெகுவாக குறைந்தத... மேலும் பார்க்க

"என்னைச் சுட வந்தவரைச் சுட்டுக்கொன்றேன்" - நேர்காணலில் மாஜி பாஜக எம்பி பிரிஜ் பூஷன் ஒப்புதல்

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பிரிஜ்பூஷன் சிங். பா.ஜ.க. முன்னாள் எம்.பியான இவர் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோது வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்... மேலும் பார்க்க