செய்திகள் :

பஸ்சில் வந்தவர் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து ரூ.15 லட்சம் கொள்ளை! - 3 பேர் கைது 1 கார் பறிமுதல்!

post image

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். சென்னையில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அக்ரம். இவர் தனது தந்தையான அப்துல் ரகுமானிடம், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள செந்தில்குமார் என்பவரிடம் ரூ.15 லட்சம் உண்டியல் பணத்தை கொடுத்து விட்டு வரச்சொல்லி பணத்தை கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.

கைதானவர்கள்
கைதானவர்கள்

சென்னையில் இருந்து ஆம்னி பஸ்ஸில் கடந்த 21ம் தேதி வந்த அப்துல் ரகுமான் ஒரத்தநாடு திருவோணம் பைபாஸ் சாலையில் இறங்கினார். அங்கே வெள்ளை நிற காரில் மர்ம நபர்கள் ஆறு பேர் இருந்துள்ளனர். அந்த நபர்கள் அப்துல் ரகுமான் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து விட்டு அவர் வைத்திருந்த ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். அதிர்ச்சியடைந்த அப்துல் ரகுமான் பணப்பையை திருடிட்டு ஓடுறாங்க ஹெல்ப் ஹெல்புனு கத்தியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, அப்துல் ரகுமான் ஒரத்தநாடு போலீஸில் இது குறித்து புகார் அளித்தார். குற்றவாளிகளை கண்டுபிடிக்க தஞ்சாவூர் எஸ்.பி.ராஜாராம் உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து ஒரத்தநாடு டி.எஸ்.பி.,கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை போலீஸார் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் துப்பு கிடைக்காததால் சைபர் க்ரைம் போலீஸார் உதவியை நாடினர். இதில் சென்னை திருவெற்றியூர், நெல்லிக்காரன் தெருவை சேர்ந்த பொன்சுரேஷ், சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த மணிகண்டன், கோயமுத்துார் ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தினேஷ், ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தலைமறைவான மற்ற மூன்று நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளை கும்பலிடமிருந்து ரூ.9.35 லட்சம் ஒரு காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். !

மத்தியப் பிரதேசம்: தேர்வு எழுதும்போது பிரசவம்; கழிவறையில் குழந்தை பெற்ற பள்ளி மாணவி; என்ன நடந்தது?

மத்தியப் பிரதேசத்தில் தற்போது 10வது வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. அங்குள்ள தார் மாவட்டத்தில் இருக்கும் பிதாம்பூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது மாணவி 10வது பொதுத்தேர்வு எழு... மேலும் பார்க்க

வேலூர்: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து - கைதுக்கு பயந்து இளைஞன் தற்கொலை

வேலூர் அருகேயுள்ள அரியூர் ஜீவா நகரைச் சேர்ந்த 19 வயது இளைஞன் விக்னேஷ். ப்ளஸ் டூவரை பயன்ற விக்னேஷ் உயர்க்கல்வியைத் தொடராமலும், வேலைக்குச் செல்லாமலும் வீட்டிலேயே இருந்து வந்தாராம். இந்த நிலையில், தனியார... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.42 லட்சம் மோசடி; உதவி பொறியாளர் மீது வழக்கு

தஞ்சாவூர், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் தஞ்சாவூர் மாநகராட்சியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றினார். இவரின் மனைவி செல்வி. இவர்களுக்கு, தஞ்சாவூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராகப் பணியாற்... மேலும் பார்க்க

ஒடிசா: சுரங்கத்துறை அதிகாரி வீட்டில் சோதனை; அலமாரி, மேசைகளுக்குள் கட்டுக்காட்டாக பணம்; பின்னணி என்ன?

ஒடிசா சுரங்கத்துறை துணை இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிசா மாநிலம், கட்டாக் மண்டல சுரங்கத்த... மேலும் பார்க்க

Epstein Files: "என் மிகப்பெரிய தவறு; அதற்கு மன்னிப்புக் கேட்கிறேன்" - என்ன சொல்கிறார் பில் கேட்ஸ்?

அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உர... மேலும் பார்க்க

சென்னை: ஹனிட்ராப்பில் சிக்கிய தாசில்தார் - மனைவி, தோழியுடன் கைதான பிரபல ரௌடியின் பின்னணி!

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வரும், தாசில்தார் ஒருவருக்கு செல்போன் செயலி மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து தாசில்தாரும் அந்தப் பெண்ணும் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசி வ... மேலும் பார்க்க