செய்திகள் :

நெல்லை: வளர்ப்பு மகளை வன்கொடுமை செய்த தந்தை - சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

post image

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான எலக்ட்ரிசீயன். கருத்து வேறுபட்டால் இவரின் முதல் மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரீசியன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணிற்கும் அவரது முதல் கணவருக்கும் பிறந்த 11 வயது சிறுமியை வளர்த்து வந்தார். இதற்கிடையில் எலக்ட்ரீசியனுக்கும் இரண்டாவது மனைவிக்கும் ஒரு மகளும், ஒரு மகனும் பிறந்தனர்.

நெல்லை நீதிமன்றம்

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரின் நடவடிக்கையில் மாற்றங்களை அந்த பெண் கண்டார். அவர் தன் செல்போனியில் தானியங்கி கால் ரெக்கார்டரில் பதிவாகியிருந்த சமீபத்திய அழைப்புகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது தன்னுடைய கணவர், தனது மூத்த மகளான முதல் கணவருக்கு பிறந்த 11 வயது மகளுடன் ஆபாசமாக பேசியுள்ளதைக் கேட்டுள்ளார்.

அத்துடன், தன் மகளிடம் ஆறுதலாகப் பேசி சிறுமிக்கு நடந்த கொடுமையைக் கேட்டு, அதிர்ச்சியில் உறைந்த தாய், நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 12-ம் தேதி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் சுதா, எலக்ட்ரிசீயனை கைது செய்தார். 5 வேலை நாட்களில் அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்டன. வழக்குப்பதிவு செய்த 29வது நாளான நேற்று நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிறுமியின் வளர்ப்பு தந்தையே சிறுமியை வன்கொடுமை செய்ததால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனையும், ரூ.28 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

நெல்லை நீதிமன்றம்

அத்துடன், தந்தையால், பாதிக்கப்பட்ட அவரது வளர்ப்பு மகளான 11 வயது சிறுமிக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும், அச்சிறுமிக்கு 18 வயது பூர்த்தியடையும் வரை அந்த தொகை, வங்கியில் டெப்பாசிட் செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே மிக குறுகிய நாட்களில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கு இது என்கிறார்கள். .

"நீ கருப்பா இருக்க..." - காதலனுடன் சேர்ந்து கனவனைக் கொன்றுவிட்டு கதறி அழுத மனைவி; சிக்கியது எப்படி?

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் புரோஹித்(28) என்பவர் வீட்டில் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். அவரது உடலில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. புரோஹித் மனைவி பிரியங்கா போலீஸ... மேலும் பார்க்க

கை, கால்களில் மறைத்து 29 கிலோ தங்கத்தை கடத்தி வந்த 26 கென்ய பெண்கள் - மும்பை விமான நிலையத்தில் கைது

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் அதிக அளவில் சட்ட விரோதமாக கடத்தி வரப்படுகிறது. மும்பை விமான நிலையம் தங்கம் கடத்தி வருவதற்கு முக்கியமான ஒ... மேலும் பார்க்க

ஸ்லோ பாய்சன் கொடுத்து மனைவி கொலை; UPI செயலியில் காதலியுடன் மெசேஜ்- நாடகமாடிய டாக்டர் சிக்கியதெப்படி?

பெங்களூருவில் கடந்த ஏப்ரல் மாதம் கிருத்திகா ரெட்டி என்பவர் தனது வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை அவரின் கணவர் டாக்டர் மகேந்திர ரெட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் கி... மேலும் பார்க்க

IT கம்பெனியில் பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர்களுக்குத் தொல்லை கொடுத்த 6 பேர் சிக்கியது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் ஐ.டி. கம்பெனியில் 300க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குக் கடந்த நான்கு ஆண்டுகளாக அணித் தலைவர்களாக இருக்கு... மேலும் பார்க்க

ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி: 72 வயது டாக்டர் 10% லாபத்திற்கு ஆசைப்பட்டு ரூ.12 கோடியை இழந்தது எப்படி?

நாடு முழுவதும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த மோசடிக்குப் பெரும்பாலும் முதியவர்களும், பெண்களும்தான் இலக்காகின்றனர். டிஜிட்டல் கைது மற்றும் ஆன்லைன் பங்கு வர்த்தகம் இதில் அதிக... மேலும் பார்க்க

திருத்தணி: ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை - அரசு பேருந்து கண்டக்டர் கைது!

திருத்தணியிலிருந்து சோளிங்கருக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பயணித்திருக்கிறார். பேருந்தில் அதிக கூட்டம் இருந்திருக்கிறது. இந்தச் சூழலில் டிக்கெட் கொடுப்பது ... மேலும் பார்க்க