செய்திகள் :

கும்பமேளா புகழ் மோனலிசா மைனர்; காதல் கணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு!

post image

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்த கும்பமேளாவில் பாசி மாலை விற்று சோசியல் மீடியாவில் புகழ் பெற்றவர் மோனலிசா. இவர் திடீரேன கடந்த சில மாதங்களுக்கு கேரளாவில் திருவனந்தபுரம் அருகே திடீரென கோயில் ஒன்றில் பர்மான் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணத்தின் போது கொடுத்த ஆதார் கார்டில் மோனலிசாவின் வயது 18ஐ கடந்து இருந்ததாக கூறி அவர்கள் திருமணத்திற்கு கோயில் நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது. ஆனால் மோனலிசா மைனர் என்றும், அவர் காதல் ஜிகாத் மூலம் திருமணம் செய்யப்பட்டுள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மோனலிசாவின் வயது குறித்து தேசிய பழங்குடியின கமிஷன் விசாரணை நடத்தியது.

மோனலிசா பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அக்கமிஷன் விசாரித்தது. விசாரணையில் மோனலிசாவின் பிறப்பு சான்றுகள் தேடி எடுக்கப்பட்டது.

மோனலிசா மத்திய பிரதேசத்தில் உள்ள மகேஷ்வர் மருத்துவ கல்லூரியில் 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்திருந்தார். அந்த வகையில் மோனலிசாவின் வயது 16 ஆகும். எனவே மைனரை பர்மான் கான் திருமணம் செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து மோனலிசாவின் கணவர் பர்மான் கான் மீது மைனரை திருமணம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலம் மகேஷ்வர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பர்மான் கானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து மோனலிசாவோ அல்லது அவரது கணவரோ எந்த பதிலும் கொடுக்கவில்லை. ஆனால் மத்திய பிரதேச போலீஸார் எந்நேரமும் பர்மான் கானை கைது செய்யும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

வீட்டில் மூட்டைகளில் பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் யஷ்வந்த் வர்மாவின் டெல்லி வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீப்பிடித்தது. இதனால் தீயை அணைத்தபோது வீட்டில் சாக்குமூட்டையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தத... மேலும் பார்க்க

ஸ்பைடர் மேனுக்கே சவால் விடும் 89 வயது பாட்டி! - 27-வது மாடியிலிருந்து அசால்ட்டாக இறங்கி சாகசம்!

சீனாவின் பெய்ஜிங் நகரில் வசிக்கும் 89 வயது மூதாட்டி ஒருவர், தனது அடுக்குமாடி குடியிருப்பின் 27-வது மாடியில் எதிர்பாராத விதமாகப் படுக்கையறைக்குள் சிக்கிக்கொண்டார். கதவு தானாகப் பூட்டிக்கொண்ட நிலையில், ... மேலும் பார்க்க

ஆந்திரா: நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்றபோது விபரீதம்; நீரில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவிகள்!

ஆந்திராவில் செல்ஃபி எடுக்க முயன்ற 3 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திராவின் அனந்தகிரி மண்டலத்தில் உள்ள முலாகும்மி நீர்வீழ்ச்சிக்கு ஜம்புவலசா கிராமத்தைச... மேலும் பார்க்க

தொழிலதிபர் ஆனந்த் அம்பானி பிறந்தநாள் பார்ட்டி - குஜராத்தில் குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முகேஷ் அம்பானி உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் நடத்தி வைத்தார். இப்போது ஆனந்த் அம்பானியின் பிறந்த நாளும் வித்தியாசமான முறையி... மேலும் பார்க்க

துரத்திய போலீஸ்; குளத்திற்குள் 5 மணி நேரம் பதுங்கி இருந்த திருடர்; தாமரை தண்டு மூலம் சுவாசித்தாரா?

மத்தியப் பிரதேசத்தில் திருடன் ஒருவன் போலீஸாரிடமிருந்து தப்பிக்கச் செய்த காரியம் போலீஸாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அங்குள்ள ரயில்களில் அடிக்கடி பெண்களிடம் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் ஒருவ... மேலும் பார்க்க

மும்பை: வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பூச்சி; கொதித்த பயணிகள்; ரயில்வேயின் பதில் என்ன?

நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் என்ற அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. குளிர்சாதன வசதியுடன் இருக்கை வசதி கொண்ட இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவும்... மேலும் பார்க்க