செய்திகள் :

நொய்டா: காதலர் தினத்தில் முடிந்த 15 ஆண்டுக் காதல்; காதலியைச் சுட்டுக்கொன்று தற்கொலை செய்த காதலன்

post image

நொய்டாவில் காதலர் தினத்திற்காகச் சந்தித்துக் கொண்ட ஜோடி காரில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் கார் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது.

இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் அந்தக் காரைத் திறந்து பார்த்தபோது உள்ளே ஒரு பெண் மற்றும் ஓர் ஆண் இறந்து கிடந்தனர். இறந்து கிடந்த வாலிபர் கையில் துப்பாக்கி இருந்தது. இறந்து கிடந்த பெண் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்திருந்தார்.

இதே போன்று அந்த வாலிபரும் துப்பாக்கியால் சுட்டு இறந்திருந்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்களது பெயர் சுமித் (32) மற்றும் ரேகா (26) என்று தெரிய வந்தது. ரேகா நொய்டாவில் வசித்து வந்தார்.

கார்
கார்

ஆனால் சுமித் டெல்லியில் வசித்து வந்தார். இருவரும் காதலித்து வந்தனர். அவர்கள் இரண்டு பேரையும் நேற்று முதல் காணவில்லை என்று அவர்களின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்திருந்தனர். அவர்களது உடல் கிடந்த கார் பதிவு எண் மூலம் அவர்களை போலீஸார் அடையாளம் கண்டனர்.

சுமித் தனது காதலியை காதலர் தினத்தில் சந்திப்பதற்காகத் தனது காரில் டெல்லியில் இருந்து நொய்டாவிற்கு வந்துள்ளார். அவர்கள் இரண்டு பேரும் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, சுமித் தனது காதலியைச் சுட்டுக்கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

எனக்கு துரோகம் செய்துவிட்டாள்

சுமித் மொபைல் போனைச் சோதித்துப் பார்த்தபோது, அதில் தற்கொலைக்கான காரணத்தை சுமித் குறிப்பிட்டு இருந்தார். சுமித்தின் போனில் ஒரு வாட்ஸ்அப் செய்தி காணப்பட்டது.

அந்த செய்தியில், "நானும், சுமித்தும் இறக்கப் போகிறோம். ரேகாதான் இதற்குப் பொறுப்பு. ஏனென்றால் அவள் என்னுடன் 15 ஆண்டுகள் வாழ்ந்து என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். ஆனால் இப்போது அவள் வேறொருவரை திருமணம் செய்து கொள்ளப்போகிறார்.

அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டதால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று சுமித் மேலும் கூறினார்.

இருவருமே தலையில் சுட்டு இறந்திருந்தனர். அவர்களது உடலை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கா: இந்திய மாணவர் கலிபோர்னியாவில் மர்ம மரணம்; தூதரகம் சொல்வது என்ன?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22). இவர் கலிபோர்னியா பல்கல... மேலும் பார்க்க

கரூர்: "ரூ.10,000 இல் ஒரு ரூபாய் குறைந்தாலும் வேலை நடக்காது" - விவசாயியிடம் லஞ்சம் கேட்ட விஏஓ கைது

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பாப்பையம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை. விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தை பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பம் செய்திருந்தார்.அந்த வகையில... மேலும் பார்க்க

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.கைதுஇந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் எ... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு - திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் - சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகள் விற்பனை; மூவரைக் கைதுசெய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், குற்... மேலும் பார்க்க

கேரளாவில் வீடு புகுந்து 50 சவரன் தங்கநகைகள் கொள்ளை; நெல்லை இளைஞர்கள் சிக்கியது எப்படி?!

கேரள மாநிலம், பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.... மேலும் பார்க்க