செய்திகள் :

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!

post image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.

கைது
கைது

இந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவருடன் அப்பெண்ணுக்கு நட்பு ஏற்பட்டு, கடந்த சில மாதங்களாக இருவரும் கொல்லஹல்லி பகுதியில் வாடகை வீட்டில் தம்பதிபோல் வசித்து வந்தனர்.

சமீபகாலமாக தாங்கள் மகிழ்ச்சியாக உறவில் ஈடுபடுவதற்கு இடையூறாக இருப்பதாக, குழந்தைக்கு உடல் முழுவதும் சூடு வைத்து தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளனர்

அதுமட்டுமன்றி வேலைக்குச் செல்லும்போது குழந்தையை வீட்டில் வைத்து பூட்டிவிட்டுச் சென்றும் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர்.

தொடர்ந்து சூடு வைத்ததால் உடல் முழுவதும் காயமான குழந்தைக்கு உடல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எழிலரசி சேர்த்துள்ளார். குழந்தையின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் தெரிந்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் பாட்டி புகார் கொடுத்ததைத் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அய்யப்பனையும், உடந்தையாக இருந்த தாய் எழிலரசியையும் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் தருமபுரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு - திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் - சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகள் விற்பனை; மூவரைக் கைதுசெய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், குற்... மேலும் பார்க்க

கேரளாவில் வீடு புகுந்து 50 சவரன் தங்கநகைகள் கொள்ளை; நெல்லை இளைஞர்கள் சிக்கியது எப்படி?!

கேரள மாநிலம், பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.... மேலும் பார்க்க

`விஷத்தின் சுவை என்ன?' - சிறுமிகளின் விபரீத எண்ணத்தில் பறிபோன 4 உயிர்; நடந்தது என்ன?

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மோடி பிகா என்ற இடத்தை சேர்ந்த 4 மைனர் பெண்கள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 12 முதல் 15 வயதுட்ப... மேலும் பார்க்க

பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த காதலி; நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ.படித்து வந்த 24 வயது பெண் தனது தந்தையுடன் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்றார். வேலை முடிந்தவுடன் தனது தந்தையிடம் தனது நண்பர் பியூஷ் தனோடியாவின் ... மேலும் பார்க்க

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து? - இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு... வீட்டில் ரெய்டு!

சென்னை போலீஸ் கமிஷனரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மத்திய குற்றப்பிரிவின் கீழ் விபச்சார தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜலட்சுமி. இவரின் வீடு சென்... மேலும் பார்க்க