செய்திகள் :

நம்பிக்கை விருதுகள் 2025: "நெகட்டிவா ஒரு பயங்கர வில்லனா..." - மனம் திறந்த காளி வெங்கட்

post image

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருது 2025’-ல் `யதார்த்த திரைக்கலைஞன் விருது’ பெற்ற நடிகர் காளி வெங்கட், விழா மேடையில் தொகுப்பாளர்களுடன் உரையாடியது கலகலப்பாக இருந்தது.

விருது வழங்கிய விகடன் குழுமத்துக்கு நன்றி தெரிவித்து பேச ஆரம்பித்த காளி வெங்கட், ``என்னுடைய யதார்த்த திரைக்கலைஞன் விருதுக்குக் காரணமான நிறைய இயக்குநர்கள் இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் இந்த மேடை பத்தாதுன்னு நினைக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு 150 கிட்ட வந்துரும். ஆனா, இப்போதைக்கு இங்க இரண்டு இயக்குநர்கள் வந்திருக்காங்க.

இயக்குநர் பிரேம் - நடிகர் காளி வெங்கட்
இயக்குநர் பிரேம் - நடிகர் காளி வெங்கட்

அவங்களோட இந்த விருதைப் பகிர்ந்துக்கணும்னு ஆசைப்படுறேன்’’ என்று சொன்ன காளி வெங்கட், `மெட்ராஸ் மேட்னி’ படத்தின் இயக்குநர் ராஜவேல், `ஹவுஸ் மேட்’ திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திகேயன் மணி ஆகிய இருவரையும் மேடைக்கு அழைத்துக் கொண்டார்.

``என் கையில் இருக்கும் இந்த விருதுக்காக என்னைவிட என் அப்பாதான் ரொம்ப சந்தோஷப்படுவார். ஏன்னா, இந்த விருதுக்கு பெயரிலேயே நம்பிக்கை வருது. என்னைவிட என் மேல் அதிகமாக நம்பிக்கை வெச்சவர் எங்க அப்பாதான். எங்க அப்பா இப்போ இருந்திருந்தா, பூரிப்படைஞ்சிருப்பார்.

படத்தோட போஸ்டர்கள்ல என்னோட படம் வரும்போது அதுல நம்ம முகம் தெரிஞ்சிருந்தா, டீக்கடையில் எடுத்து வெச்சிருந்து அதை எல்லார்கிட்டயும் காமிச்சு பெருமைப்பட்டுக்கொண்டேயிருப்பார். எனக்கு கோபம் வருகிற அளவுக்கு என் மேல நம்பிக்கை வெச்சிருப்பார்’’ என்று தன் அப்பாவின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்

தொடர்ந்து தொகுப்பாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த காளி வெங்கட்``வில்லனா, நெகட்டிவா ஒரு பயங்கர ஸ்ட்ராங்கான ரோல் நடிக்க ஆசை இருக்கு’’ என்றார்.

'தோழர்’ என்று அழைத்தாலும், எப்போதுமே திருமா எனக்குத் தலைவராக தெரிகிறார் - 'பெருந்தமிழர் விருது' SVR

`பெருந்தமிழர் விருதை’ பெற்றுக்கொண்ட மார்க்சியச் சிந்தனையாளரும், மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரை, ``எனக்கு இந்த விருதை முக்கிய ஆளுமைகளான திருமாவளவன், சு.வெங்கடேசன், ராம் ஆகியோரின் கைகளால் வாங்க... மேலும் பார்க்க

`இந்த உலகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை தந்தவர் இவர்தான்' - இயக்குநர் ராம்

பெருந்தமிழர் விருதை 'எஸ்.வி.ராஜதுரை'க்கு விருது வழங்கியவர்களில் இயக்குநர் ராமும் ஒருவர். விருது வழங்கியதற்குப் பின், இயக்குநர் ராம் பேசுகையில், "எஸ்.வி.ஆர் சார் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு பெரிய டீச்ச... மேலும் பார்க்க

`பிகில் படத்தில் விஜய்யின் இந்தக் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்' - சீமான்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025' விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற சீமானிடம் சில பிரபலங்களைத் திரையில் காட்டி, கேள்விகள் கேட்டோம். அந்த அனைத்துக் கேள்விகளுக்கும் அதகள பதில்களைச் சொல்லி, 'கலகல'த... மேலும் பார்க்க

`எஸ்.வி.ஆர், சோனியா காந்தியிடம் தனிப்பட்ட முறையில் பேச, நளினியின் மரண தண்டனை ரத்தானது' - திருமாவளவன்

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’ விழாவின் உச்சமாக மார்க்சியச் சிந்தனையாளரும். மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரைக்கு 'பெருந்தமிழர் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த விழா மேடையில் திருமாவ... மேலும் பார்க்க

`தேர்தல் களம் சூடா இருக்கு; இந்த முறை மாற்றத்தை பார்ப்பீங்க!' - நம்பிக்கை விருதுகள் விழாவில் சீமான்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025' விழா மேடையில் கலகலப்பாகப் பேசிய சீமானிடம், சின்னச் சின்னதாக சில கேள்விகளை முன்வைத்தோம். `புதிய புதிய கூட்டணிகள் உருவாகியிருக்கும் இந்த நேரத்தில், தேர்தல் களம் எ... மேலும் பார்க்க

``'இதற்காக' சிஸ்டத்தை மாற்ற வேண்டும்; 'இதை' அரசே எடுத்து செய்ய வேண்டும்" - ஆதவ் அர்ஜுனா பேச்சு

2025-ம் ஆண்டிற்கான நம்பிக்கை விருதுகளில் 'சாதனைத் தொழில்நுட்பன்' விருதை வழங்கிச் சிறப்பித்தார் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது...``கடந்த சில வருடங்களாக, கனிம வளக் கொள்ளை... மேலும் பார்க்க