RCB vs LSG: "க்ருணால் பாண்டியா பந்தை எப்படி வீசுவார் என்று எனக்கே தெரியாது" - ரஜ...
"கதையில் சில மாற்றங்கள் சொன்னேன்; நான் சொல்லி அனுப்பிய.."- லப்பர் பந்து குறித்து எஸ்.ஜே சூர்யா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (lik).
இத்திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று (ஏப்ரல். 15) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய எஸ்.ஜே சூர்யா, " ஒரு இயக்குநர் என்னிடம் வந்து நான் தான் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று கதை சொன்னார்.

நான் சில மாற்றங்கள் சொன்னேன், அதைச் செய்தார். மீண்டும் மாற்றம் சொன்னேன் அதையும் செய்தார்.
பின்னர் நானே அவரிடம் எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது அதை நோக்கி போகிறேன். நான் தான் வேண்டும் என சொல்லி கதையை மாற்றி உங்கள் வாழ்க்கையை இழக்காதீர்கள் என்றேன்.
படம் வெளியாகி பெரிய ஹிட்டானது, நான் அந்த இயக்குநரை அழைத்து பாராட்டினேன்.
நான் மனதில் பட்டத்தை சொல்லி அனுப்பிய அந்தப் படம் தான் 'லப்பர் பந்து'" என்றிருக்கிறார்.

தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசிய அவர், " பிரதீப் சார் என்னிடம் ஒரு முறை நடித்துக் காண்பித்தார். நன்றாக நடிக்கிறீர்களே சார்....நீங்கள் சூப்பராக வருவீர்கள்.
நீங்களே நடிக்கலாமே என்று அவரிடம் சொல்லியிருந்தேன். நான் சொல்லிய 7 வருடத்திற்குள் ஒரு மனிதன் ஜீரோ டு ஹீரோ ஆகியிருக்கிறார்" என்று பேசியிருக்கிறார்.




















