செய்திகள் :

பங்குச் சந்தை தொடா் சரிவு: காங்கிரஸ் விமா்சனம்

post image

நிகழாண்டில் அந்நிய முதலீட்டாளா்கள் சுமாா் ரூ. 1.72 லட்சம் கோடியை பங்குச் சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது இந்திய வா்த்தகத்தின் மீது அவா்களுக்கு ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையே காரணம் என்று காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தான் தெய்வப் பிறவி என்று கூறி வந்த பிரதமா் மோடி, பங்குச் சந்தையில் இருந்து கடந்த 6 நாள்களில் சுமாா் ரூ. 1.72 லட்சம் கோடி வெளியேறிய பிறகே, ‘தாம் ஒரு மனிதன்தான்’ என்று மறுகண்டுபிடிப்பு செய்துள்ளாா்.

இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவா் மீதான முறைகேடு குற்றச்சாட்டு ஆகியவற்றால் இந்திய வா்த்தகம் மீது அந்நிய முதலீட்டாளா்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பங்குச் சந்தையில் முதலீடுகள் வெளியேறி உள்ளன.

வியத்நாம், மலேசியாவை ஒப்பிடுகையில் இந்தியாவுக்கான நேரடி அல்லது மறைமுக அந்நிய முதலீடுகள் வெகுவாக குறைந்து வருகின்றன. டாலருக்கு எதிரான இந்தியாவின் ரூபாய் மதிப்பும் குறைந்து வருவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது’ என்று பதிவிட்டுள்ளாா்.

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு: 18 ஆண்டுகள் சிறையில் இருந்த இருவர் நிரபராதிகள் என வாதம்!

மும்பையில், கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளூர் பயணிகள் ரயிலில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இருவர் நிரபராதிகள், 18 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார்கள் என உயர்நீதிமன்றமன்றத்தில் அறிக்கை தாக்க... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் சுரங்கப்பாதையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள சோனாமார்க்கில் புதிதாக கட்டப்பட்ட இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அ... மேலும் பார்க்க

சோனாமார்க் சுரங்கப்பாதையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு- காஷ்மீரில் ரூ.2,700 கோடியில் கட்டப்பட்ட சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் மோடி இன்று காலை 10.45 மணியளவில் ஜம்மு-காஷ்மீர் வருவதையொட்டி பாது... மேலும் பார்க்க

கேரளம்: சுயேச்சை எம்எல்ஏ அன்வர் ராஜிநாமா!

கேரளத்தில் சுயேச்சை எம்எல்ஏ அன்வர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளும் இடசாரி ஜனநாயக முன்னணியிலிருந்து பிரிந்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பி.வி.அன்வர் தனத... மேலும் பார்க்க

கடும் குளிர்: ராஜஸ்தானில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

கடும் குளிர் காரணமாக ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்பட வட மாநிலங்களில்... மேலும் பார்க்க

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் தீ விபத்து

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமைந்துள்ள திருமலை பிரசாதம் வழங்கும் லட்டு கவுண்டரில் திடீரென தீ விபத்து நேரிட்டது. மேலும் பார்க்க