செய்திகள் :

பஞ்சாப்: ஹர்பஜன் சிங் பகிர்ந்த `ஜோம்பி போதை இளைஞர்கள்' வீடியோ; ஆம் ஆத்மி அரசு பதிலடி!

post image

பா.ஜ.க எம்.பி ஹர்பஜன் சிங் தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த விடியோவில் டர்பன் அணிந்த சிலர் சாலையோரத்தில் நிலைகுலைந்து, நிற்க முடியாமல் தடுமாறுகின்றனர்.

அந்த வீடியோவைப் பகிர்ந்த ஹர்பஜன் சிங், ``என் பஞ்சாபின் மீது தீய கண் பட்டுவிட்டது, நண்பா... அரசு பஞ்சாபையும் அதன் இளைஞர்களையும் சீரழித்துவிட்டது. இதையெல்லாம் பார்க்கும்போது அழுகைதான் வருகிறது. என் பஞ்சாபை மன்னியுங்கள்... பஞ்சாபை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்? ஒரு காலத்தில் செழிப்பு, துணிச்சல் மற்றும் வீரத்திற்குப் பெயர் பெற்ற பஞ்சாப்.

ஆனால் இன்று, அதே பஞ்சாபின் இளைஞர்கள் போதைப் பழக்கத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். இன்னும் காலம் இருக்கிறது. என் பஞ்சாபைக் காப்பாற்றுங்கள். பஞ்சாபின் இளைஞர்களைக் காப்பாற்றுங்கள்" என உருக்கமாகப் பதிவிட்டு, போதைப்பொருள் பிரச்னையை ஆம் ஆத்மி அரசு கையாளும் விதத்தை விமர்சித்து அரசியல் ரீதியான தாக்குதலைத் தொடுத்தார்.

அதைத் தொடர்ந்து அந்த வீடியோ பஞ்சாபில் வைரலானது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பஞ்சாப் மாநில அமைச்சர் டாக்டர் பல்ஜித் கவுர், ``ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காகரில் எடுக்கப்பட்ட வீடியோவை பஞ்சாபில் நடந்த சம்பவமாக பா.ஜ.க தலைவர் சித்தரிக்கிறார். மேலும் ஹர்பஜன் சிங் தனது அரசியல் மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்த முயல்கிறார். பாஜகவின் அரசியலுக்காக பஞ்சாபின் நற்பெயரைக் கெடுக்கத் துணிந்துவிட்டார்" என நேரடியாகத் தாக்கிப் பேசினார்.

அமைச்சர் கூறியது போல, இந்தச் சம்பவம் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காகரில் நடந்தது என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த நபர்கள் ஏதேனும் போதைப்பொருளைப் பயன்படுத்தினார்களா என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"இடம் மாறியதால் இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை" - ஓபிஎஸ் vs செங்கோட்டையன் காரசார விவாதம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்றும் தொடர்கிறது.இந்நிலையில்... மேலும் பார்க்க

பெரியார் புலிகள் காப்பகத்தில் ட்ரோன்; தமிழகக் குழுவால் சர்ச்சை! - கேரள வனத்துறை எடுத்த முடிவு

விவசாயத் தேவைகளுக்காக முல்லைப் பெரியார் அணையின் மதகுகளைத் தமிழ்நாடு அரசு கடந்த 8-ம் தேதி திறந்தது. இதனையொட்டி, தமிழக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்ட... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து: "இந்தப் போக்கு தொடரவேண்டும்!" - தவெக அரசை பாராட்டும் கமல்ஹாசன்

தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி தொடங்குவதும், தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக மரபாக இருந்து வருகிறது. இந்த நடைமுறையை மாற்றும் வகையில் ஆளும் பாஜக அரசு அறி... மேலும் பார்க்க

TN Assembly:``இடம் மாறியிருப்பதால் இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை!" - ஓ.பி.எஸ்ஸுக்கு செங்கோட்டையன் பதிலடி| Live

``இடம் மாறியிருப்பதால் இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை." - செங்கோட்டையன்``திட்டங்களை நிறைவேற்ற 5 ஆண்டு கால அவகாசம் இருக்கிறது. மூன்றே மாதங்களில் சரித்திரம் படைக்க முடியாது." - ஓ.பி.எஸ்ஸூக்கு செங்க... மேலும் பார்க்க

``தமிழ் மீதான தவறான விமர்சனத்திற்கு மன்னிப்பு கோர வேண்டும்" - அமைச்சர் மரிய வில்சனைச் சாடும் பாஜக

நேற்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய நிதித்துறை அமைச்சர் மரிவில்சன், ''நான் பிறப்பால் கிருஸ்தவன். என் மதம் எனக்கு அன்பு, கருணை, இரக்கத்தின் மொழியைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. இது தமிழ் படித்... மேலும் பார்க்க