செய்திகள் :

`இந்தியாவிலேயே அதிக விலை' டெல்லியில் ரூ.271 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய தொழிலதிபர் மானவ் சர்தானா

post image

டெல்லி மற்றும் அதன் அருகில் உள்ள குருகிராம் பகுதியில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பங்களாக்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் டி.எல்.எப் என்ற கட்டுமான நிறுவனம் அடுக்கு மாடி மற்றும் தனி பங்களாக்களை கட்டி விற்பனை செய்து வருகிறது. இதில் ஹரியானாவை சேர்ந்த தொழிலதிபர் மானவ் சர்தானா, குருகிராமில் டி.எல்.எப் நிறுவனம் கட்டி வரும் அதி-சொகுசு குடியிருப்பு திட்டமான 'டஹ்லியாஸ்(The Dahlias) இல் ரூ.271 கோடிக்கு ஒரு பென்ட்ஹவுஸை( தனி சொகுசு ஆடம்பர பங்களா) வாங்கியுள்ளார்.

இது இதுவரை நாட்டிலேயே மிகவும் அதிக விலையுள்ள வீடு விற்பனைகளில் ஒன்றாகும். டஹ்லியாஸ் வளாகம் கோல்ஃப் மைதான வசதியுடன் குருகிராமின் 54வது செக்டரில் அமைந்துள்ளது. மானவ் சர்தானா வாங்கி இருக்கும் இந்த பென்ட்ஹவுஸ் 17,200 சதுர அடி கொண்டதாகும் .அதன் கார்பெட் ஏரியா சுமார் 10,500 சதுர அடியாகவும் உள்ளது.

மானவ் வாங்கிய பங்களா இருக்கும் பகுதி

அதன் கார்பெட் ஏரியா மதிப்பு ஒரு சதுர அடிக்கு சுமார் ரூ. 2.6 லட்சம் என்ற அளவில் வாங்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு அதிக விலை கொடுத்து இந்த சொகுசு பங்களாவை வாங்கி இருக்கும் மானவ் சர்தானா குறித்து வெளியுலகில் பெரிய அளவில் அறியப்படாவிட்டாலும், ஆட்டோமொபைல் துறையில் மிகவும் அதிக அளவில் பிரபலம் ஆவார்.

குருகிராமில் டி.எல்.எப் நிறுவனம் தனது 5வது கட்ட திட்டத்தில் 17 ஏக்கர் பரப்பளவில் அதி-சொகுசுத் திட்டமான 'தி டாலியாஸ்' (The Dahlias)-ஐ கடந்த 2024ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் சுமார் 420 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பென்ட்ஹவுஸ்கள் அடங்கியுள்ளன. இவற்றில் தனிப்பட்ட குடியிருப்புகளின் விலை ரூ. 100 கோடி முதல் ரூ. 170 கோடி வரை உள்ளது. பென்ட்ஹவுஸ்கள் அவற்றின் அளவு மற்றும் அமைவிடம் ஆகியவற்றை பொருத்து இன்னும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இந்தத் திட்டம் மூலம் ரூ. 40,000 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்ட முடியும் என டி.எல்.எப் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இதில் கட்டப்பட்டு வரும் வீடுகளில் ஏற்கனவே 65% க்கும் மேற்பட்ட யூனிட்களை விற்றுவிட்டது.

யார் இந்த மானவ்?

100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட டெல்லியை சேர்ந்த வணிகக் குழுமமான சர்தானா குடும்பத்தைச் சேர்ந்த மானவ் சர்தானா ஒரு தொழிலதிபர் ஆவார். 1969-ல் மானவின் தந்தை எஸ்.பி. சர்தானா மற்றும் ஜக்ஜித் சிங் ஆகியோரால் இணைந்து வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் இம்பீரியல் ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை தொடங்கினர். தற்போது இந்த இம்பீரியல் நிறுவனத்தில் முக்கிய பங்கு வகித்து வரும் மானவ் சர்தானா தனியார் பங்கு வர்த்தக நிறுவனமான வார்பர்க் பிங்கஸ் நிறுவனத்தை இம்பீரியல் ஆட்டோ நிறுவனம் வாங்கியதில் முக்கிய பங்கு வகித்தார்.

தற்போது தொடர்ந்து குடும்பத் தொழிலில் ஈடுபட்டு வரும் மானவ், இம்பீரியல் ஆட்டோ குழுமத்துடன் தொடர்புடைய பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இயக்குநராக உள்ளார்.

வீட்டின் மாடல்

இவற்றில் இம்பீரியல் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட், க்ரூஸ் ஹைட்ராலிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் இம்பீரியல் மார்டோர் என்ஜின் ட்யூப்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை அடங்கும்.

கொரானா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தியாவின் ஆடம்பர வீடுகளுக்கான தேவை வலுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக குருகிராம் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில், வசதி படைத்த வாடிக்கையாளர்கள் பரந்த மற்றும் தனித்துவமான வீடுகளை அதிகம் விரும்புவதால், அதிக மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 'பென்ட்ஹவுஸ்' (penthouse) விற்பனை பெருமளவில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான DLF, 352 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் 185-க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிற்து.

`ஈரான் தாக்கலாம்' - துருக்கியிலிருந்து உணவு லாரியில் பதுங்கி விமானநிலையம் சென்ற அதிபர் ட்ரம்ப்?

கடந்த பிப்ரவரியில் இருந்து ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வந்தன. கடந்த மாதம் இஸ்ரேல் நேரடி தாக்குதலில் இருந்து ஒதுங்கிக்கொண்ட நிலையில் அமெரிக்கா மட்டும் ஈரான் மீது தாக்கியது. ஈரா... மேலும் பார்க்க

தனியாக 4 பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய தந்தை; முதியோர் இல்லத்தில் இறந்தபோது பார்க்கவராத பிள்ளைகள்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரைச் சேர்ந்த கன்ஷ்யாம் என்பவர் தனது மனைவி இளம் வயதில் 4 குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துவிட்ட நிலையில் தனியாக வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தனது குழந்தைகளைப் போராடி வளர்... மேலும் பார்க்க

குடும்பத்துக்கு பயந்து ரூ.5 லட்சத்தை புதைத்து வைத்த விவசாயி - அரித்து சேதப்படுத்திய கரையான்கள்

பொதுவாக பண்டைய காலத்தில் தங்கம் போன்ற உலோகங்களை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க பூமிக்கு அடியில் புதைத்து வைப்பது வழக்கம். ஆனால் ராஜஸ்தான் மாநிலம் லோத்ரா மாவட்டத்தில், விவசாயி ஒருவர் தனது பணத்தை தன... மேலும் பார்க்க

`குழந்தை பெறுவதற்கு மட்டுமா பெண்கள்?' மறுமணம் தவிர்த்து சொந்தகாலில் நிற்க போராடும் இளம் கைம்பெண்கள்

மகாராஷ்டிராவின் விதர்பா மற்றும் மராத்வாடா பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கின்றனர். மேற்கு விதர்பாவில் 2001 மற்றும் 2024 க்கு இடையில் அகோலா, அமராவ... மேலும் பார்க்க

சேரும் முன்பே சேட்டை; "லேப்டாப்பைத் தரவில்லை என்றால் சட்ட நடவடிக்கை" - கடுப்பான CEO-வின் பதிவு வைரல்

ஜெய்ப்பூரில் உள்ள 'வன்ஷிவ் டெக்' நிறுவனத்தின் சி.இ.ஓ கவுரவ் கதேர்பால், சமீபத்தில் பகிர்ந்த எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.அவரது நிறுவனத்தில் 15 LPA சம்பளத்தில் தேர்வான ஒரு பெண், 3 மாத நோட்டீஸ... மேலும் பார்க்க

மும்பையில் அமேசான், ஐ.ஐ.டி உணவு லைசென்ஸ் ரத்து: `கொசுவை வாளால் கொல்லாதீர்கள்' - ஐகோர்ட் விமர்சனம்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் புதிய கமிஷனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி துகாராம் முண்டே நியமிக்கப்பட்டதில் இருந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது செயல்பாடுகளால் மும்பை உட்பட மக... மேலும் பார்க்க