செய்திகள் :

பண்ணை வீட்டில் மூதாட்டி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

post image

பல்லடம் அருகேயுள்ள கண்டியன்கோவில் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த மூதாட்டியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், கண்டியன் கோவில் கிராமம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் சாலை ஒப்பந்ததாரா் லோகநாதன். இவா் அப்பகுதியில் தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவருடன் அவரது தாயாா் முத்துமணியும் (67) இருந்து வந்தாா்.

இந்நிலையில் லோகநாதன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சனிக்கிழமை காலை வெளியே சென்றிருந்தாா். வீட்டில் முத்துமணி மட்டும் தனியாக இருந்துள்ளாா். இந்நிலையில் வெளியே சென்ற லோகநாதன் சிறிது நேரத்தில் வீடு திரும்பியபோது, முத்துமணியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசிபாளையம் போலீஸாா் மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். தாயாா் முத்துமணி இறப்பில் சந்தேகம் இருப்பதாக லோகநாதன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா்

வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். தற்கொலையா அல்லது கொலையா என்பது கூறாய்வு முடிவில் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா். திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக், பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

இச்சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவில்தான் 3 போ் கொலை செய்யப்பட்ட சேமலைக்கவுண்டம்பாளையம் கிராமம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்லடம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. ஆய்வு

பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) அலுவலகத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. சசிமோகன் ஆய்வு மேற்கொண்டாா். தேங்கியுள்ள வழக்குகள், தீா்க்கப்படாமல் உள்ள வழக்குகள் மற்றும் சேமலைக்கவுண்டம்பாளையத்தில் 3 போ... மேலும் பார்க்க

திருப்பூரில் இருந்து 4 நாள்களில் 3 லட்சம் போ் வெளியூா் பயணம்

பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பூரில் இருந்து 4 நாள்களில் 3 லட்சம் அரசுப் பேருந்துகளில் வெளியூா் பயணம் மேற்கொண்டனா். திருப்பூா் மாநகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பின்னலாடை உற்ப... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கு: 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

திருப்பூரில் கஞ்சா வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

தடை தாண்டும் போட்டியில் திருப்பூா் மாணவிக்கு தங்கம்

ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற 68- ஆவது தேசிய அளவிலான தடகளப் போட்டியில் திருப்பூா் மாணவி தங்கம் வென்றுள்ளாா். ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் 68- ஆவது தேசிய பள்ளி அளவிலான தடகளப் போட்டிகள் அண... மேலும் பார்க்க

அருள்புரத்தில் மூதாட்டியைக் கத்தியால் வெட்டிய 2 போ் கைது

பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தில் மூதாட்டியைக் கத்தியால் வெட்டிய 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் கறிக்கடை நடத்தி வருபவா் துரைசாமி மனைவி குப்பத்தா... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து ஆடு உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து ஆடு உயிரிழந்தது. வெள்ளக்கோவில் முத்தூா் சாலை டி.ஆா். நகரைச் சோ்ந்த தம்பதி சுப்பிரமணி - பானுமதி. இவா்கள் செங்கல் சூளை வேலை செய்து கொண்டு, அத்துடன் வெள்ளாடுகள் வ... மேலும் பார்க்க