செய்திகள் :

'பனை மரத்துக்கு லஞ்சம்' - அலையவிட்ட கிராம நிர்வாக அலுவலர்; கொத்தாகத் தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை

post image

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம் புதுப்புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (40). விவசாயியான இவர், தனது நிலத்திலிருந்த 6 பனை மரங்களை அனுமதியின்றி வெட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, செந்தில் மீது வழக்குப் பதியாமல் இருக்க, புதுப்புளியம்பட்டி கிராம நிர்வாக அலுவலரான குணசேகரன் ரூ.40 ஆயிரம் செந்திலிடம் லஞ்சம் கேட்டுள்ளார். முதல்கட்டமாக ரூ.20 ஆயிரம் கொடுத்த செந்தில், மீதிப்பணத்தைக் கொடுக்க முடியவில்லை.

இதையடுத்து, மீதிப் பணத்தைத் தரும்படி குணசேகரன், செந்திலுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால், நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் பிரபுவிடம், செந்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செந்திலிடம் போலீஸார் கொடுத்து அனுப்பினர்.

அப்போது, கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன்தான் வெளியில் இருப்பதாகவும், கிராம உதவியாளர் தேவி என்பவர் வீட்டுக்குச் சென்று பணத்தைக் கொடுத்து விடும்படியும் கூறியுள்ளார்.

கைது
கைது

இதையடுத்து, திருச்செங்கோடு சிஎச்பி காலனி கிராம உதவியாளர் தேவி வீட்டுக்குச் சென்ற செந்தில் ரூ.20 ஆயிரம் பணத்தைக் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது, தனது கணவர் விஜயகுமார் அருகே உள்ள தேநீர்க் கடையில் நின்று கொண்டிருப்பதாகவும், அவரிடம் கொடுத்து விடும்படியும் தேவி கூறியுள்ளார்.

இதையடுத்து, தேநீர்க் கடையில் நின்று கொண்டிருந்த தேவியின் கணவர் விஜயகுமாரிடம், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் விஜயகுமாரைக் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி, கிராம உதவியாளர் தேவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் ஆகியோரைக் கைது செய்தனர்.

பனை மரம் வெட்டியதற்காக கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை கல்லூரி மாணவி மீது கத்தியால் குத்தி தாக்குதல் - சக மாணவன் வெறிச் செயல்

கோவை சத்தி உள்ள தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு 17 வயது மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே வகுப்பில் ஹர்ஷவர்தன் என்கிற 18 வயது மாணவர் படித்து வருகிறார். ஹர்ஷவர்தன் மாணவ... மேலும் பார்க்க

குஜராத்: 33 கிராமங்களுக்காக ரூ.21 கோடிக்கு கட்டிய தண்ணீர் தொட்டி- திறக்கப்படுவதற்கு முன்பே இடிந்தது!

குஜராத் மாநிலம் சூரத் அருகில் உள்ள தட்கேஷ்வர் என்ற கிராமத்தில் மாநில அரசு, 33 கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக ரூ.21 கோடியில் 9 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் 15 மீட்டரில் பிரம்மாண்... மேலும் பார்க்க

நெல்லை: சாலையில் தூக்கி வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம்; நாய் கவ்விச் சென்ற அவலம்; பின்னணி என்ன?

நெல்லை, மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலநத்தம். இங்கு பழைய அரிசி ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலைக்குச் செல்லும் சாலையின் ஓரத்தில் தெருநாய் ஒன்று சிவப்பு நிறத் துணி சுற்றப்பட்ட ஒரு பார்சலை கவ்விச் சென்று வாய... மேலும் பார்க்க

`பொண்டாட்டினு கூட பார்க்காம அசிங்கமா வீடியோ எடுத்து.!’ அதிர வைக்கும் வரதட்சனை புகார்; விபரீத முடிவு

விழுப்புரம் மாவட்டம் பக்கிரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பட்டதாரியான பிரியங்காவுக்கும், புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் கடந்த 2025 அக்டோபர் 31-ம் தேதி திரும... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு; 4 வயது பெண் குழந்தையை வன்கொடுமை செய்து கொன்ற கொடூரன்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் சத்யா . இவருக்கும் ராஜா என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ராஜா இறந்து விட்டதால், தற்போது அந்தக்குழந்தை ராஜாவின் தாயிடம் வ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகை: முதியவர்களைக் குறிவைத்து ரூ. 500ஐ அமுக்கிய ரேஷன்கடை ஊழியர்; அதிகாரிகள் விசாரணை

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ.3000 மற்றும் ஒரு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி மற்றும் வேட்டி, சேலை அறிவித்தது. இந்தப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப... மேலும் பார்க்க