செய்திகள் :

போனை பிளாக் செய்த காதலன்: விரக்தியில் மும்பை ரயிலிலிருந்து கடலில் குதித்த பெண்.. காப்பாற்றிய மீனவர்!

post image

இன்று காலை, மும்பை புறநகர் ரயிலில் இருந்து ஒரு பெண் மும்பை கடலுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றார். ரயில் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து வாஷி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ரயில் வாஷி கடல் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, இளம்பெண் ஒருவர் ரயிலில் இருந்து கடலுக்குள் குதித்துவிட்டார்.

உயிரை காப்பாற்றிய பேக்

இதனை தூரத்தில் நின்று கொண்டிருந்த மகேஷ் என்ற மீனவர் பார்த்தார். அவர் ரயிலில் இருந்து ஏதோ விழுந்ததைப் பார்த்து உடனே, தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு கடல் பாலம் இருந்த பகுதிக்கு படகில் வந்தார். அங்கு வந்து பார்த்தபோது இளம்பெண் ஒருவர் கடலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அப்பெண் தனது தோளில் மாட்டி இருந்த பேக்கோடு கடலில் குதித்து இருந்தார். அந்த பேக்கிற்குள் காற்று இருந்துள்ளது. இதனால் அப்பெண் கடலுக்குள் மூழ்காமல் இருந்துள்ளார். அவர் வைத்திருந்த பேக்கில் இருந்த காற்று அப்பெண்ணை தண்ணீரில் மூழ்க விடாமல் தடுத்திருந்தது. அப்பெண்ணை மகேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து மீட்டு கரைக்கு அழைத்து வந்தார். அப்பெண் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

போனை பிளாக் செய்த காதலன்

அவரிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் தெரிவித்த கருத்து, போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செம்பூரை சேர்ந்த மனீஷா (20) என்ற அப்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணை காதலித்த நபர், திடீரென எந்த வித காரணமும் சொல்லாமல் அவரது போன் நம்பர் மற்றும் சமூக வலைதள பக்கத்தை பிளாக் செய்துவிட்டார். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி இக்காரியத்தில் ஈடுபட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து போலீஸார் அப்பெண்ணிற்கு விளக்கி கூறினர். அதோடு அவருக்கு டாக்டர்கள் கவுன்சிலிங் கொடுத்தனர்.

துபாய்: 64 மாடி கட்டடம், Rolls-Royce கார்; பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவும் இந்திய தொழிலதிபர்கள்

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுத்து வரும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் ... மேலும் பார்க்க

`என் முடி ரொம்ப பிடிக்கும் தான்; ஆனால்.!' - திருமண நெருக்கடியிலிருந்து தப்பிக்க இளம்பெண் செய்த செயல்

பெண்களுக்கு 25 வயதாகிவிட்டால், திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் வேலைகளை தொடங்கிவிடுவர். இன்னும் படிக்க வேண்டும் என்று சொன்னால் திருமணம் செய்து கொண்ட பிறகு படிக்கலாம் என்று குடும்பத்தில் கூறிவிடுவர... மேலும் பார்க்க

வாட்ஸ்அப் மூலம் உயர் நீதிமன்ற பெண் நீதிபதியிடம் கைவரிசை; ரூ.6.02 லட்சம் பறித்த சைபர் கிரிமினல்கள்

நாடு முழுவதும் சைபர் கிரிமினல்கள் தொடர்ந்து தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். இதில் முதியவர்கள், பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் டிஜிட்டல் கைது மூலமும் இந்த மோசடி நடைபெறுக... மேலும் பார்க்க

Age is Just a number Bro... 60 வயதிலும் இளமை: ரகசியம் சொல்லும் சுவான்டோ டான்

சிங்கப்பூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரும் மாடலுமான சுவான்டோ டான் (Chuando Tan), அண்மையில் தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழல்வதைப் போன்ற இவரது இளமை மாறாத தோற்றம்... மேலும் பார்க்க

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 5 ஆண்டுகளில் புதிதாக 30 சிப்காட் தொழில் வளாகங்கள்!

`தமிழ்நாடு 2030 இல் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் என்பது திண்ணம்! திண்ணம்!' - தமிழ்நாடு அரசுதமிழ்நாட்டின் தொழில் வரலாற்றில் ஒரே இடத்தில் பல தொழில்கள் தோன்றுவதற்கு வகை செய்யும்... மேலும் பார்க்க