செய்திகள் :

பல்லடம்: 1.5 லட்சம் பெண்கள்... கறுப்பு, சிவப்பு டிரெஸ் கோடு; செ.பா-வின் மகளிர் மாநாடு ஏற்பாடுகள்!

post image

2026 சட்டமன்றத் தேர்தல் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் கடந்த காலங்களில் தோல்வியைச் சந்தித்ததால், இந்த முறை திமுக அந்தப் பகுதியில் வெற்றி பெற அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு இன்று மாலை நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த மாநாட்டில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 1.50 லட்சம் மகளிர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெண்கள் கூட்டத்தை திரட்டும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு

இதில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு கருப்பு, சிவப்பு நிறத்தில் உடையில் வர உத்தரவிடப்பட்டுள்ளது. 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு கருப்பு – சிவப்பு நிறத்தில் சுடிதாரும், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அதே நிறத்தில் சேலையும் கொடுக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் கரூர் டீம் சார்பில், கோவையில் கடந்த வாரமே மாநாட்டில் கலந்துகொள்ளும் மகளிருக்கான உடைகளை விநியோகித்துவிட்டனர். கறுப்பு, சிவப்பு நிற புடவைகள் மற்றும் சுடிதார் அணிந்து மாநாட்டில் அவர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு

மாநாட்டில் அவர்களுக்கு ஸ்நாக்ஸ், தண்ணீர், பழச்சாறு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு மதிய உணவு, இரவு உணவு ஆகியவற்றுடன் பணமும் கொடுக்கப்படவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

DMDK: திமுக, அதிமுக, தவெக... யாருடன் கூட்டணி? தேமுதிகவின் திட்டம் தான் என்ன?

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2026) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரச்சாரம், பொதுக்கூட்டம் த... மேலும் பார்க்க

`சில்லறை பசங்களை வைத்துக் கொண்டு, அவமானப்படுத்துகிறார்..!" - அன்புமணி குறித்து மனம் நொந்த ராமதாஸ்

சேலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியது, "எனக்கு இருக்கிற ஆதங்கத்தை கொட்டி உங்களிடம் பகிர்ந்... மேலும் பார்க்க

பாமக: ``என்னை 20 - 30 துண்டுகளாக கூட வெட்டி வீசியிருக்கலாம்" - மேடையில் கண்ணீர்விட்ட ராமதாஸ்

பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில், சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் இன்று (டிச. 29) காலை தொடங்கி நடைபெற்றுவருகிறத... மேலும் பார்க்க

பாமக: "ஐயா ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்குச் சமம்" - ஸ்ரீகாந்தி காட்டம்

பா.ம.க கட்சியில் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில், சேலத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் இன்று (... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: பவார் குடும்பத்தை ஒன்றுசேர்த்த அதானி; சரத்பவாருடன் கூட்டணி சேரும் அஜித்பவார்

சரத்பவாரின் சொந்த ஊரான பாராமதியில் நடந்த நிகழ்ச்சியில் அஜித்பவாரும், சரத்பவாரும் தங்களது குடும்பத்தோடு ஒன்றாகக் கலந்து கொண்டனர்.பாராமதியில் முதல் ஏ.ஐ. சென்டர் திறப்பு விழா நடந்தது. இதனை அதானி நிறுவனம்... மேலும் பார்க்க

பாஜக: நயினார் கான்வாய்க்கு கறுப்புக் கொடி காட்டினாரா அண்ணாமலை நற்பணி மன்ற நிர்வாகி? பின்னணி என்ன?

'தமிழ்நாடு தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று மாலை வருகை த... மேலும் பார்க்க