செய்திகள் :

"பவள விழா பாப்பா... பழைய டப்பா... திமுக குறள்!" - திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய்

post image

தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா இன்று (பிப்.2) பனையூரில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், "தமிழ்நாட்டில மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருக்கோம். இன்னைக்கு நாம அரசியலுக்கு வந்ததும் நம்மள விமர்சிக்கிறாங்க, `அன்னைக்கு எம்.ஜி.ஆர் வந்தார் என்று சொன்னால் அவர் பல வருடங்கள் ஒரு கட்சியில் இணைந்து செயல்பட்டார்.

தவெக விஜய்
தவெக விஜய்

விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கு' என இன்னைக்கு நம்மை விமர்சிக்கிறவங்க தான் அன்னைக்கு அதே எம்.ஜி.ஆரையும் கவர்ச்சி தவிர வேற ஒன்னும் இல்லனு விமர்சிச்சாங்க.

எம்.ஜி.ஆர் மட்டுமல்ல, அவர் தொண்டர்களையும் விட்டுவைக்கல. ஆன மக்கள் எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்காங்க....இப்பவும் அதே தேஞ்சுபோன விஷயத்தை தூக்கிட்டு வருவாங்க... டெக்னாலஜி எல்லாம் வளர்ந்துட்டு வருது... கொஞ்சம் அப்டேட் ஆகுங்க.

இன்னைக்கு இருக்கிற டிஜிட்டல் உலகத்துல திருவள்ளுவர் இருந்திருந்தா 'அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம்

திமுக முதற்றே உலகு'

என்று எழுதியிருப்பாரு.

திமுக ஆட்சியை மக்கள் வெறுத்துவிட்டாங்க. 2026 தேர்தலில் தவெக தான் ஒரே ஆப்ஷன். நோ டைவர்ஷன். அவங்கள எதிர்த்தா மோசமா விமர்சிப்பாங்க...

தவெக விஜய்
தவெக விஜய்

நாம அவங்க செய்யுற ஊழலை பேசினா அவங்க அதே பழைய டப்பாவா உடனே எடுத்து உருட்டுவாங்க. பவள விழா பாப்பாவுக்கு வேற என்ன தெரியும். பழைய டப்பாவை உருட்ட தான் தெரியும்.

அதுக்காக நாம சொல்லாம இருக்க முடியுமா? சொல்லிதான் தான் ஆகணும். நாம தான் மக்கள் சக்தி" என திமுகவை விமர்சித்திருக்கிறார்.

தொடர்ந்து, ``நம்ம மக்கள் இந்த விசிலை ஊதுறதுல தீய சக்தியும் ஊழல் சத்தியும் தெறிச்சு ஓடும்.

தேர்தல்ல மூன்று முனை போட்டி, நான்கு முனை போட்டி என்கிறார்கள்... சொல்றவங்க சொல்லிட்டு இருக்கட்டும்.

ஒரு பக்கம் மக்கள் சக்தியுடன் தவெக,

இன்னொரு பக்கம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்

அப்புறமா, பாஜக தலைமையில் ஒரு கூட்டணி" என அதிமுகவை விமர்சித்தார் விஜய்.

கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் - என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்!

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆகியவை தேர்தலுக்கு தயாராகி வர... மேலும் பார்க்க

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று என்று கேட்பதில் தவறு கிடையாது!" - சொல்கிறார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம்... மேலும் பார்க்க

ராகுலா, பிரியங்காவா? - கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் காங்கிரஸ் தலைமைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக கரு... மேலும் பார்க்க

"அந்த போன்கால் வரட்டும்!" - காத்திருக்கும் அறிவாலயம்

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாள... மேலும் பார்க்க

DMK - ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' - கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து, காலியாக உள்ள 37 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வேட்புமனு துவங்கி, மாரச் 16-ம் தேதி... மேலும் பார்க்க

`அமித் ஷா நடிக்கலாம்; ராஜ்யசபா தேர்தலை நடத்த அவசரம் காட்டுவதற்கு இதுதான் காரணம்!' - மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாகவே மாநிலங்களவையில் காலி ஆகும் இடங்களுக்கு தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல... மேலும் பார்க்க