செய்திகள் :

பாடகர் வேலுமுருகனுக்கு `அறங்காவலர் தேர்வு குழுவில் பொறுப்பு' - தவெக அரசு அறிவிப்பு!

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாமாண்டு தொடக்க விழாவில் முருகனாக விஜய்யைப் புகழ்ந்து பாடிய பாடகர் வேல்முருகனுக்கு, தவெக அரசு கௌரவம் அளித்துள்ளது.

பத்து லட்சத்துக்கு அதிகமாக வருமானம் வரும் கோவில்களின் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்யும் குழுவில் ஒரு உறுப்பினராக அவரை நியமித்துள்ளது தவெக அரசு.

தமிழ்நாடு முழுக்க இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சில தினங்களுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது நினைவிருக்கலாம்.

விஐபிக்கள் மற்றும் கட்சிக்காரர்கள் பலரும் இந்தப் பதவிக்கு முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் அறங்காவலர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஒரு குழுவை நியமித்து இன்று உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு.

விஜய் மேடையில் வேல்முருகன்

சினிமா தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஆன்மிக பேச்சாளர் சுமதிஸ்ரி உள்ளிட்டோர் அடங்கிய அந்தக் குழுவில் பாடகர் வேல்முருகனும் இடம்பெற்றுள்ளார்.

இது குறித்து அவரிடமே பேசினோம்.

''எளியவனான எனக்கு அரசாங்கத்துல அதுவும் அறநிலையத்துறையில் கிடைச்சிருக்கிற இந்தப் பொறுப்புங்கிறது பெரிய அங்கீகாரம். தமிழக வெற்றிக் கழக அரசுக்கு அதுக்காக என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிச்சுக்கிடுறேன். அந்த வேலைக்கு நேர்மையா என்ன செய்யணுமோ அதை நிச்சயம் செய்வேன்''' என்கிறார் அவர்.

தவெக மேடையில் விஜய்யை முருக கடவுளாகப் பாவித்து இவர் பாடியதாக அப்போது சிலர் போலீஸில் புகார் அளித்தது நினைவிருக்கலாம்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு குறித்த புகார் அளிக்க WhatsApp எண் - முழு விவரம்!

விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் Anti-Narcotics Task Force (ANTF) அமைப்பை மேலும் வலுப்படுத்த தமிழக அரசு ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.இதன்படி, மாநிலம் முழுவதும் 65 சிறப்பு ANTF காவல் நிலையங்கள்... மேலும் பார்க்க

NEET போராட்டம்: `அமித் ஷா விளக்கம் தர ரெடி; ஆனால், ஒரு கண்டிஷன்!' - ரிஜிஜு சொல்வதென்ன?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக... மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த ஜூன் 6-ம் தேதியில் இருந்து ஜூலை 25-ம் தேதி வரை 36 நாள்கள் ஜந்தர் மந்தரில் போ... மேலும் பார்க்க

"நான் பைபிள் படித்திருக்கிறேன்; இப்படித்தான் பேசுவேன்!"- எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு மரிய வில்சன் பதில்

பட்டஜெட் விவாதக் கூட்டத்தொடரின் நான்காவது நாள் இன்று (ஆகஸ்ட்.10) சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவாதத்தின்போது, "சொற்பொழிவாளன் மற்றும் தமிழ் ஆர்வலர் என்ற முறையில் சொல்கிறேன். நிதியமை... மேலும் பார்க்க

Mule Accounts: ₹545 கோடி சைபர் மோசடி; 837 பேரை கைதுசெய்த தமிழ்நாடு போலீஸின் ஆபரேஷன்! என்ன, எப்படி?

சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகள் தான் போலி வங்கிக் கணக்குகள் (Mule Accounts). இந்தக் கணக்குகள் மோசடி மூலம் பெற்ற பணத்தை மறைத்து வைப்பதற்கு, மோசடி செய்து பணம் பெறுவதற்கு, மோசட... மேலும் பார்க்க

மெக்கா ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு கை கொடுத்த சவூதி, துருக்கி; இந்தியாவுக்கு எப்படியான அலாரம்?

மெக்கா ஒப்பந்தம் - சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஆகும்.ஏன் இந்த ஒப்பந்தம்? இந்த ஒப்பந்தம் குறித்து மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து: ``பாஜக என்றாலே இந்த அரசு பயப்படுகிறது" - முன்னாள் அமைச்சர் ரகுபதி விமர்சனம்

சட்டமன்றத்துக்கு வெளியே முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``சட்டமன்றத்தில் இன்று திமுக உறுப்பினர் கோவி.செழியன் பேசும்போது, திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில... மேலும் பார்க்க