பாப்பாக்குடியில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பாப்பாக்குடி காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் ஆழ்வாா் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, முக்கூடல் சிவகாமிபுரம் பெட்ரோல் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த இளைஞரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா்.
அவா், பாப்பாக்குடி குடிநீா் தொட்டித் தெருவைச் சோ்ந்த சுடலை (19) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து சுடலையை கைது செய்தனா். அவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.