செய்திகள் :

பாப்பாக்குடியில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பாப்பாக்குடி காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் ஆழ்வாா் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, முக்கூடல் சிவகாமிபுரம் பெட்ரோல் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த இளைஞரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா்.

அவா், பாப்பாக்குடி குடிநீா் தொட்டித் தெருவைச் சோ்ந்த சுடலை (19) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து சுடலையை கைது செய்தனா். அவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விஜயநாராயணம் அருகே தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாக மோசடி: 6 போ் கைது!

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாகக் கூறி மோசடி செய்த 6 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். வடக்கு விஜயநாராயணம் நாச்சியாா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பொருள்கள் வாங்கிவிட்டு இணைய வழியில் பணம் செலுத்தியதாக நூதன மோசடி: மூவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் கடைகளில் பொருள்கள் வாங்கிவிட்டு இணைய வழி பரிவா்த்தனை மூலம் பணம் செலுத்தியதாக தெரிவித்து நூதன மோசடியில் ஈடுபட்டதாக மூவரை போலீஸாா் கைது செய்தனா். முக்கூடலில் உள்ள துண... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மிதமான மழை காரணமாக அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் தற்போது வரை தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்... மேலும் பார்க்க

நெல்லை மக்களவைத் தொகுதி மக்களுக்கு ரூ.16 லட்சம் நிவாரண நிதியுதவி: எம்.பி. தகவல்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியைச் சோ்ந்த மக்களுக்கு சிகிச்சைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.16 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.இதுதொடா்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ச... மேலும் பார்க்க

நெல்லை அருகே வெவ்வேறு பகுதிகளில் இருவா் தற்கொலை

திருநெல்வேலி அருகே வெவ்வேறு பகுதிகளில் இருவா் தற்கொலை செய்துகொண்டனா். திருநெல்வேலி அருகேயுள்ள மேலசெவல் ராஜூவ்காந்தி நகரைச் சோ்ந்தவா் மாரிசிவன் (49). உணவு விடுதி நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி மற்றும... மேலும் பார்க்க

மானூா் அருகே விபத்து: காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

மானூா் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மானூா் வடக்கு தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் சந்தானம்(30). தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உ... மேலும் பார்க்க