செய்திகள் :

பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை: சிக்கிய `4' முடிகளால் திருப்பம்; 17 ஆண்டுகளாக தொடரும் விசாரணை!

post image

குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த சங்கீதா (7) என்ற சிறுமி, 2009ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாபுநகரில் வசித்து வந்த சங்கீதா பக்கத்து வீட்டில் விளையாடச் சென்று, பின்னர் தனது வீட்டிற்கு அருகில் ஐஸ் கோலா வாங்கச் சென்றார். அங்கிருந்து அவர் காணாமல் போனார். மூன்று நாள்களுக்குப் பிறகு, அவர் உடல் அருகிலுள்ள அரசுப் பள்ளியின் பொதுக் கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டது உறுதியானது. இக்கொலை தொடர்பாக விசாரித்த போலீஸார், அப்பகுதியைச் சேர்ந்த செக்யூரிட்டி கார்டு ஒருவரை கைதுசெய்தனர்.

ஆனால் இறுதியில் அவர் குற்றவாளி இல்லை என்று தெரியவந்தது. அதேசமயம் கடந்த 17 ஆண்டுகளாக குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. கொலைசெய்யப்பட்ட சிறுமியின் ஆடைகளை தடயங்களாக போலீஸார் பாதுகாத்து வைத்திருந்தனர். சிறுமியின் தந்தை போபாஜி தனது மகளுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடி வந்தார். தொண்டு நிறுவனம், மனித உரிமை கமிஷன் மற்றும் பிரதமர் அலுவலகம் என தொடர்ந்து ஒவ்வோர் இடத்திலும் முறையிட்டுக்கொண்டே இருந்தார்.

அவரது இடைவிடாத முயற்சி காரணமாக இவ்வழக்கு 2024ம் ஆண்டு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. புதிதாக விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகள், கொலை செய்யப்பட்ட போது சிறுமி அணிந்திருந்த ஆடையை மறு ஆய்வு செய்தனர். அவ்வாறு ஆய்வு செய்யப்பட்டதில் அந்த ஆடையில் 4 முடிகள் ஒட்டிக்கொண்டிருந்தன.

அந்த முடிகளை மீட்டு டி.என்.ஏ.பரிசோதனைக்கு அனுப்பி இருக்கின்றனர். அதோடு அந்த முடிகளின் அடிப்படையில் போலீஸார் அப்பகுதியைச் சேர்ந்த 4 பேரை பிடித்துச் சென்று விசாரித்து வந்தனர். அவர்களில் இரண்டு பேர் விடுவிக்கப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சிய இரண்டு பேரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

சங்கீதாவின் உடையில் கண்டுபிடிக்கப்பட்ட முடி இந்த இரண்டு பேரில் ஒருவரது முடியாகத்தான் இருக்க வேண்டும் என்று போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். டி.என்.ஏ பரிசோதனை முடிவு வெளியான பிறகுதான் இதற்கு விடை கிடைக்கும். கடந்த 17 ஆண்டுகளில் இவ்வழக்கு தொடர்பாக போலீஸார் 150 பேரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.

`முதல்வர் விஜய் பவுண்டேஷன்: தொழில் தொடங்க கடனுதவி' - சைபர் கிரிமினல்கள் புது வழியில் மோசடி!

இணைய தளம் மூலம் மோசடி செய்பவர்கள் தங்களது மோசடிக்கு புதுப்புது வழிகளை கண்டுபிடிக்கின்றனர். சமீபத்தில் தொடங்கப்பட்ட வாக்காளர்கள் சரிபார்ப்பு திட்டமான எஸ்.ஐ.ஆர் மூலம்கூட சைபர் கிரிமினல்கள் பொதுமக்களை ஏம... மேலும் பார்க்க

அமெரிக்காவில் கேரள பெண்கள் இருவர் படுகொலை; வேலை இழந்த விரக்தியில் தோழி செய்த கொடூரம்!

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், மண்ணுத்தி முடிக்கோட்டைச் சேர்ந்த ஹரிதாஸ் - சுஷ்மா தம்பதியின் மகள் அஞ்சனா ஹரி (35), திருவனந்தபுரம் கேசவதாசபுரம் காக்கநாடு லேனைச் சேர்ந்த ஜிஜி மேத்யூ மற்றும் மறைந்த பெ... மேலும் பார்க்க

தஞ்சை: 12ம் வகுப்பு படிக்கும் 2 சிறுமியருக்கு பாலியல் தொல்லை; 64 வயது முதியவர் போக்சோ வழக்கில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பிலால் நகரைச் சேர்ந்தவர் 64 வயதான நாகூர்பிச்சை. இவர் டீக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். அந்த டீக்கடை வழியாக 12ம் வகுப்பு படிக்கும் 16 வயது... மேலும் பார்க்க

சென்னை: ஒடிசா பெண் கொலை; உடலை கூறு போட்ட காதல் ஜோடி - பிரியாணி போல வேக வைத்தது ஏன்? |பகீர் தகவல்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹயத்துன்நிஷா (38). திருமணமான இவர், கணவரைப் பிரிந்து சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்தநிலையில்தான், ஹயத்துன்நிஷாவின் தலையைத் தவிர மற்ற உ... மேலும் பார்க்க

பெற்ற மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததால் பிறந்த குழந்தை - தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டிக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 57 வயதான கந்தன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவரின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு உயிரிழந்தார். அதையடுத்த... மேலும் பார்க்க

FQL முதலீட்டு மோசடி: நத்தம் அருகே இளைஞர் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்; போலீசார் தடியடி

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் FQL என்கிற ஆப்பில் முதலீடு செய்தால் 40 நாட்களில் இரட்டிப்பான லாபம் கிடைக்கும் எனப் பொதுமக்களை நம்ப வைத்து சுமார் 1000 கோடிக்கு அதிகமான பணம் முறைகேடு செய்துள்... மேலும் பார்க்க